Search This Blog

Friday 6 December 2013

நடுவே நதி!

காகிதப் பூவில்
வாசனை…
காதல் கடிதங்கள்!


மழைக்குத்தான் ஒதுங்கினேன்…
ஆனாலும்
மழையைத் தான் ரசித்தேன்!


பூக்கள்
சிரிக்கின்றன…
மலர்வளையத்திலும்!


கூரையில் கரைகிறது
காகம்…
அடுபபில் உறங்குகிறது பூனை!
கூரையில் கரைகிறது
காகம்…
அடுபபில் உறங்குகிறது பூனை!

அக்கரையில் நான்
இக்கரையில் நீ
நடுவே நதி காதலாய்…


கரையில் கால்களை
கழுவச் சொன்னது யார்?
அலைகளே…


நிலாவையே குழந்தைக்கு
சோறாய் ஊட்டினாள்….
வாழ்க்கை அமாவாசை?


ஒருவேளை
சம்மதித்திருப்பாயோ?
சொல்லியிருந்தால்…


எனக்கு விசிறியதில்
உனக்கு வியர்க்கும்
அம்மா…

No comments:

Post a Comment