Search This Blog

Monday 2 December 2013

அழகு என்ற வார்த்தைக்குதான் எத்தனை வார்த்தைகள் தமிழில்!

 


–அழகு   – அணங்கு, அணி, அந்தம், அபிராமம், அமலம், அம்,  அம்மை, அலரி,


- இராமம், இல்லிதம், இலாவண்ணியம், எழில், ஏர், ஐ, ஒண்மை, ஒப்பு,


- கவின், களை, காந்தி, காமர், காரிகை, குழகு, கொம்மை, கோலம்,


- சந்தம், சவி, சாயல், சித்திரம்,சீர், சுந்தரம், செவ்வி, செம்மை, சேடு,


- சொக்கு, சோபம், செளமியம், தகை, தகைமை, தளிமம், தென், தேசிகம்,


- தையல், தோட்டி, தோல், நலம், நல்லி, நன்கு, நோக்கம், நோக்கு,


- பதம், பத்திரம், பந்தம், பந்துரம்,  பாங்கு, பூ, பை, பொற்பு, பொன், மஞ்சு,


- மஞ்சுளம், மணி, மதன், மயம், மனோகரம், மனோக்கியம், மாண்பு,


- மாதர், மாமை மாழை, முருகு, யாணர், யெவளனம், வகுப்பு, வடிவு,


- வண்மை, வளம், வனப்பு, வாகு, வாமம், விடங்கம், அன்றியும்


- பேரழகின் பெயர அலங்காரம், கட்டழகு, காமர், சித்திரம், விசித்திரம்


- ஆரியம்

தமிழின் தனிச்சிறப்பு!

 


பூப் பறித்தல், 


பூக் கிள்ளுதல்,


 பூக் கொய்தல்

என்ற பல சொற்கள் பழக்கத்தில் இருப்பினும்,

ஒவ்வொன்றும் ஒரு தனிப் பொருளைப் பெற்றுள்ளது.


ரோஜா முதலிய செடிகளில் பூக்கும் பூவை எடுப்பதைப்

பூப்பறித்தல் என்று கூறுவர்.


தரையில் படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவை

எடுப்பதனைப் பூக் கிள்ளுதல் என்று கூறுவர்.



மரம், பந்தல் ஆகியவற்றில் உயர்ந்து படர்ந்திருக்கும்

கொடிகளில் உள்ள பூவை எடுப்பதைப் பூக் கொய்தல்

என்று கூறுவர்.

குளிர்காலங்களில் ஆண்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!!!



நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நலத்திக்கும் நாம் ஊட்டச்சத்து நிரம்பிய உணவு வகைகளையே உட்கொள்ள வேண்டும். ஒரு நாளிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நாம் உட்கொள்ளும் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால், நமக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் வியாதிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
குளிர்காலத்தின் வருகையானது நமது உடலில் உள்ள வலிமையான நோய்எதிர்ப்பு மண்டலம் எதிர்கொள்ளும் ஏராளமான நோய்களையும் வியாதிகளையும் வரவழைக்கின்றது. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இவை இரண்டும் நாம் குளிர்காலங்களில் எதிர்கொள்ளும் இடர்மிகுந்த நோய்களாகும்.

இவை குளிர்மாதங்களில் நிலவி வரும் குளிர்ந்த வானிலையின் காரணமாக தடுபற்று வலிமை மிகுந்ததாக செயல்படும். நமது உடலில் உள்ள நோய்எதிர்ப்பு மண்டலமானது நோய்களை உருவாக்கும் இந்த கூறுகளை எதிர்த்து செயல்படுவதற்கு காரணமாக இருகின்றது.


குளிர்காலங்களில் வரும் ஜலதோஷம், குளிர்கால காய்ச்சல் போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதற்கு நீங்கள் வெட்பமான நிலை, போதுமான நீர் சேர்க்கை மற்றும் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும். போதுமான தூக்கத்தோடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான டயட்டை மேற்கொண்டு நோய்எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வேண்டும். இது நமது உடலில் நுழைந்து நோய்களை உருவாக்கும் கூறுகளிடம் இருந்து நம்மை தற்காக்க தயாராகும். குளிர்காலங்களில் ஏற்படும் காய்ச்சல்களை எதிர்ப்பதற்கு உதவும் நோய்எதிர்ப்பு அதிகரிக்கும் உணவுகள் ஏராளமானவை. உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

வைட்டமின் ஏ, ஈ, சி மற்றும் ஜிங்க் போன்ற தாதுபொருட்கள் நிறைந்த உணவு வகைகள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவி புரியும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, நூல்கோல், பேரிக்காய், திராட்சை, ஆரஞ்சு, முட்டைக்கோஸ், மணி மிளகு, வெண்ணெய் பழம், ஆப்பிள்கள் மற்றும் வாழைப்பழங்கள் ஆகிய காய்கறிகளும் பழங்களும் நோய்எதிர்ப்பு சக்திக்கு சிறந்ததாகும். உங்கள் நோய்எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த இந்த காய்கறிகளும் பழங்களும் உங்கள் டயட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதோ குளிர்காலத்தில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் சில.

ப்ராக்கோலி

 ப்ராக்கோலியில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற சத்துக்களோடு ஃபோலிக் அமிலம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர பாதுகாப்பு பொருட்களும் அதிக அளவில் உள்ளதால் இது குளிர்காலங்களில் வரும் நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.

கேரட்

 கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ நமது கல்லீரலில் உள்ள நச்சுபொருட்களை நீக்கி நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்யும். இவற்றில் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்து செயல்படும் தன்மை நிறைந்துள்ளது.

ஆப்பிள்

 குளிர்காலங்களில் ஆப்பிள்களிடம் இருந்து அதிக ஊட்டச்சத்து பலன்களை பெறலாம். இது அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இது தரும் அதிக நார்ச்சத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் குளிர்காலங்களில் பரவிவரும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களை எதிர்த்து செயல்பட்டு உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

கிவி பழம்

 கிவி பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஒரு கிவி பழத்தில் உள்ள சத்து ஒரு நபருக்கு ஒரு நாள் முழுவதும் தேவைப்படும் வைட்டமின் சி சத்தை அளிக்கக்கூடியது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் சி சத்து குளிர்காலங்களில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.

கிரீன் டீ

 அதிக சுகாதார பலன்களை கொண்ட கிரீன் டீயை போன்ற அமுதம் வேறுஎதுவும் இல்லை. இது உங்கள் உடலில் உள்ள நச்சுபொருட்களை நீக்கி உங்கள் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுவடையசெய்யும். இதில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.

ஜிங்க் உணவுகள்

 ஜிங்க் உட்கொள்ளுதலை அதிகப்படுத்த உங்கள் உணவில் மாமிச வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு அன்றாடம் 8 முதல் 12 மில்லிகிராம் ஜிங்க் தேவைப்படுகின்றது. இதில் பாதி அளவு சிறிதளவு பீப் அல்லது சிக்கன் போன்ற இறைச்சி வகைகளில் உள்ளது.

கடல் சிப்பிகள்

 கடல் சிப்பிகளில் அதிக அளவில் ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. ஒரு சிப்பியில் நமக்கு அன்றாடம் தேவைப்படும் அளவிற்கு ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. நோயை எதிர்க்கும் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவுகின்றது ஜிங்க்.

தேங்காய் எண்ணெய்


 தேங்காய் எண்ணெயில் நிறைந்துள்ள லாரிக் அமிலம் தொற்றுநோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் எதிர்த்து செயல்பட உதவும். தனித்தன்மை நிறைந்துள்ள இந்த எண்ணெயை நாம் அன்றாடம் உட்கொள்ளுவதற்காக எல்லா உணவு வகைகளிலும் இதனை சேர்க்கலாம்.

பெர்ரி பழங்கள்

 ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, கோஜி பெர்ரி மற்றும் அகாய் பெர்ரி ஆகியவற்றில் நிறைந்துள்ள அதிக ORAC தன்மைகள் நமது உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் இயக்க உறுப்புகளுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும். பெர்ரிக்களில் உள்ள இன்றியமையாத வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து போன்றவை நமது உடலை சுத்தப்படுத்தி நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.

காளான்

 காளான்கள் நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உதவி புரியும். காளான்களின் வகையான மைடேக், ரேஷி, கொரியோலஸ், அகரகஸ் மற்றும் ஷீடேக் போன்றவற்றில் மருத்துவ தன்மை நிறைந்துள்ளது. இதில் உள்ள சக்தி வாய்ந்த பீட்டா க்ளுகன்ஸ் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்த உதவுகின்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..!

சித்திரை மாத பௌர்ண மிக்கு தனிச் சிறப்பு
 உண்டு. அந்த நன்னாளில் ரமணாசிரமத்தில் நடந்த
 சுவையான நிகழ்ச்சிகளில் ஒன்று.

ஆசிரமத்தில் உணவு உண்ட பின்னர் ஓய்வடுத்த
 சோமசுந்தர சுவாமி என்பவர் நீண்ட அறையில் படுத்துக் கொண்டு
 தன் வயிற்றைத் தடவியபடி ஒளவையாரின் பாடல் ஒன்றைப்
 பாடினாரராம்

”ஒருநாள் உணவை

 ஒழியென்றால் ஒழியாய்


 இரு நாளைக்கு


 ஏலென்றால் ஏலாய்


 ஒரு நாளும்


 என்னோ அறியாய்


 இடும்பை கூர்


 என் வயிறே


 உன்னோடு வாழ்தல் அரிது”


இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரமண மகரிஷி, வயிறு
 மனிதனை நோக்கிப் பாடுவதுபோல, அதே பாடலை மாற்றிப் பாடினார்.


”ஒரு நாழிகை வயிறு எற்கு


 ஓய்வு ஈயாய் நாளும்


 ஒரு நாழிகை


 உண்பது ஓயாய்


 ஒரு நாளும்


 என்னோ அறியாய்


 இடும்பை கூர்


 என் உயிரே


 உன்னோடு வாழ்தல் அரிது”


பாடலின் பொருள் இதுதான்:

”ஓ, உயிருக்கு உறைவிடமான மனிதனே! வயிறாகிய
 எனக்கு நீ ஒரு நாழிகை கூட ஓய்வு அளிப்பதில்லை.
ஒரு நாழிகைகூட நீ சாப்பிடுவதை
 நிறுத்துவதில்லை. என் துன்பம் உனக்குப் புரிவ தில்லை.
எனக்குத் தொல்லை தரும் என்னுயிரே!
உன்னோடு வாழ்தல் அரிது.”

இந்தப் பாடல் எழுந்த சூழ்நிலை பற்றிக் கூறும்போது, ”விளையாட்டுக்காக
 எழுதிப் பாடினேன்” என்றார் மகரிஷி. சிந்தித்துப் பார்த்தால் இது
 விளையாட்டாகப் பாடிய பாடலாகவா தோன்றுகிறது?

ரமணரது இந்த பாடல், வயிற்றை நோக்கிப் பாடிய ஒளவையாருக்கு,
வயிறே பதில் சொல்வது போல் அல்லவா தெரிகிறது!

குளிர்காலங்களில் வீட்டில் வெதுவெதுப்பான சூழ்நிலையை உருவாக்க சில வழிகள்!!!

குளிர்காலம் வந்தாலே நமது உடல் நலத்தை பராமரிப்பதோடு நமது வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் பராமரிக்க வேண்டும். ஏன்னெனில், நம்மை போலவே நமது வீடும் குளிர்காலத்தை உணரும் தன்மையை கொண்டது. அதனால், இந்த குளிர்காலங்களில் நமது வீட்டில் உள்ள பொருட்களை தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும்.

குளிர்காலங்கள் குளிர்ந்த காற்றை வீசி நாம் வெளியில் செல்லுவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கச் செய்கின்றது. எதை தொட்டாலும் சில்லென்று இருப்பதால் ஒரே இடத்திலேயே இருக்கச் செய்கின்றது. இன்றைய மாடர்ன் வீடுகளில் உள்ள ஹால் மற்றும் படுக்கை அறைகளில் சிறந்த முறையில் அறையை வெப்பமாக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், சில சந்தர்ப்பங்களில் இந்த வெப்பமாக்கும் கருவிகள் இல்லாத நிலையில் நமது வீட்டை வெப்பமாக வைப்பதற்கு வேறு வழிகளை நாடவேண்டி வரும்.

இயற்கையான முறையில் நமது வீட்டை வெப்பமாக வைப்பதற்கான வழிகளை கண்டறிவது கடினமான ஒன்று அல்ல. வெப்பமாக்கும் கருவிகள் உங்களை நிம்மதியாக உறங்க வைத்தாலும் அதன் விளைவாக வரும் அதிக மின்கட்டணங்கள் உங்களை பெரிதும் பாதிக்கும். இதற்கு மாறாக, இந்த குளிர்ந்த நிலைகளை கட்டுக்குள் வைக்கும் விலை மலிவான சில வழிகள் உள்ளன. இவற்றின் மூலமாக குளிர்காலத்தில் உங்கள் வீடு வெப்பமாக இருப்பதற்கு உதவும்.

குளிர்காலங்களில் உங்கள் வீட்டை இயற்கையான முறையில் வெப்பமாக்குவதற்கான வழிகள் பல உள்ளன. இதற்காக நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், சில எளிமையான அடிப்படை வழிகளை புரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டின் சுழலை எளிமையான முறையில் வெப்பமாக வைத்து குளிரை கட்டுப்படுத்தலாம். இந்த எளிய வழிகளை உபயோகித்து உங்கள் வீட்டை வெப்பமாக வைத்து குளிரால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

சரியான திரைச்சீலைகளை உபயோகிப்பது


குளிர்காலங்களில் உங்கள் வீட்டை வெப்பமாக வைப்பதற்கு நீங்கள் சரியான திரைச்சீலைகளை பயன்படுத்த வேண்டும். இது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வீட்டு பராமரிப்பு டிப்ஸ். சூரிய வெளிச்சம் உள்ளே வரும் ஜன்னல்களை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மெல்லிய திரைச்சீலைகளை பயன்படுத்தவும். மற்ற ஜன்னல்களுக்கு தடிமனான திரைச்சீலைகளை பயன்படுத்தவும்.

பர்னிச்சர்களை நகர்த்தி வைத்தல்


உங்கள் பர்னிச்சர்களை ஜன்னல் மற்றும் கதவுகளிடம் இருந்து நகர்த்தி வைக்க வேண்டும். இது வெப்பமாக்கும் கருவிகள் இல்லாமல் உங்கள் வீட்டை வெப்பமாக வைக்க உதவும் இயற்கையான முறைகளில் ஒன்றாகும். உங்கள் வீட்டு பர்னிச்சர்களை ஈரமான மூலைகளில் இருந்து நகர்த்தி வைக்க வேண்டும்.

செயற்கை அடுப்புகளை உபயோகிக்கக்கூடாது

செயற்கை அடுப்புகள் சுற்றுசூழலில் உள்ள வெப்பத்தை உள்வாங்கி சிம்னி வழியாக வெளியேற்றிவிடும். அது எரிந்து கொண்டிருக்கும் போது வெப்பமாக இருந்தாலும், அதனை அணைத்த பின்பு உங்கள் அறையில் மீண்டும் குளிர் நிறைந்து இருக்கும்.

ஜன்னல்களை மூடி வைக்கவும்

இந்த வீட்டு பராமரிப்பு வழி மிகவும் எளிமையான ஒன்றாகும். வெப்பமாக இருப்பதற்கு உங்கள் வீட்டில் உள்ள எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் மூடியே வைக்க வேண்டும். அவற்றை காற்றுப்புகாதவாறு அழுத்தி மூட வேண்டும்.

தடைகளை அகற்றுவது


குளிர்காலத்தில் சில நாட்கள் வெயில் வரக்கூடும். நமது வீட்டை இயற்கையான முறையில் வெப்பமாக வைப்பதற்கு நமது வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற இடையூறுகளை நீக்க வேண்டும். இதன் மூலமான உங்கள் வீட்டிற்குள் அதிக சூரிய வெளிச்சம் வந்தடையும்.

கம்பளி மற்றும் தரைவிரிப்பான்


நீங்கள் இயற்கையான முறையில் உங்கள் வீட்டை வெப்பமாக வைத்து கொள்ள நினைத்தால், உங்களுக்கு அதிகமான கம்பளம் மற்றும் தரைவிரிப்பான்களும் தேவைப்படும். இவற்றை நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் ஹால்,சாப்பிடும் அறை, படுக்கை அறைகளின் தரைகளில் உபயோகப்படுத்தவும்.

உரைகளை பயன்படுத்தவும்

உங்கள் ஹாலை வெப்பமாக்குவதற்கு பர்னிச்சர்களுக்கும் சோபாக்களுக்கும் கம்பளி உரைகளை பயன்படுத்தவும். இதன் மூலமாக ஒவ்வொரு முறை நீங்கள் சோபாவில் உட்காரும் போதும் குளிரை போக்கி வெதுவெதுப்பாக உணருவீர்கள்.

மெழுகுவர்த்திகள் பயன்படுத்தவும்


இயற்கையான முறையில் உங்கள் வீட்டை வெப்பமாக்குவதற்கு மெழுகுவத்திகளை ஏற்றி வைக்க வேண்டும். இது விலை மலிவான வழி மட்டுமல்லாமல் எளிதாக செய்யக்கூடிய ஒன்றாகும். மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பதன் மூலமாக குளிர்காலத்தில் ஏற்படும் மந்தமான சூழ்நிலையில் இருந்து உங்கள் அறையை வெளிச்சமாகவும் வெப்பமாகவும் மாற்றும். 

தக்காளி தோசை - 2 - சமையல்!


தேவையானவை:

 பச்சரிசி - ஒன்றே கால் கப்,

 உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,

தக்காளி - 4,

தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,

சீரகம் - 1 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 10,

பெருங்காயம் - பாதி சுண்டைக்காய் அளவு,

உப்பு - தேவைக்கேற்ப,

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

 பச்சரிசியையும், உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்).

 தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

சீரகம், பெருங்காயம், ஊறிய மிளகாய் ஆகியவற்றை முதலில் அரைத்துக் கொண்டு,

பின்னர் பச்சரிசி, தேங்காய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும்.

அரைபட்டதும் தக்காளியையும் போட்டு நன்றாக ஆட்டவும். பின்னர் உப்பு சேர்த்து,

அனைத்தையும் கலக்கி ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு, வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.

கலர்ஃபுல்லாக கண்ணைப் பறிக்கும் இந்த தக்காளி தோசைக்கு, கொத்துமல்லிச் சட்னி மேலும் சுவை கூட்டும்.

ஷூ அளவை அறிய ஒரு செயலி!

 

ஷூ அளவை கண்டறிந்து சொல்வதற்காக என்றே புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது.

 நம் ஷூ அளவு நமக்கு தெரியாதா?


 இதற்கெல்லாம் ஒரு செயலியா ?

 என்று கேட்பதற்கு முன் இணையம் மூலம் ஷூ வாங்கவோ அல்லது வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் போது ஷூ வாங்கவோ முற்படும் நிலையை கற்பனை செய்து பாருங்கள்.

 உள்ளூரிலேயே ஷூக்களின் அளவு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது.

அப்படி இருக்க வெளிநாடுகளில் சொல்லவா வேண்டும்.


 ஒவ்வொரு நாட்டிலும் ஷூக்களுக்கு ஒரு அளவை பின்பற்றலாம் தானே.

 எனில் இணையம் மூலம் வெளிநாட்டு ஷூவை வாங்கும் போது உங்கள் ஷூவின் அளவு அந்நாட்டு கணக்கில் எந்த அளவு வருகிறது என தெரிந்து கொள்வது அவசியம் தானே.

அதை தான் இந்த செயலி செய்கிறது.

 இதில் உங்கள் ஷூ அளவையும் , உங்கள் நாட்டையும் தெரிவித்தால் , அதற்கேற்ப நீங்கள் ஷூ வாங்க உள்ள நாட்டில் அதன் அளவு என்ன என்று கணக்கிட்டு சொல்கிறது.

நீங்கள் வெளிநாட்டு ஷூவை வாங்கா விட்டாலும் கூட , அயல்நாட்டில் இருக்கும் நண்பரோ உறவினரோ உங்களுக்கு ஷூ வாங்கி பரிசளிக்க விரும்பினால் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் அல்லவா?

 இப்போதைக்கு ஐபோனுக்கான வடிவம் மட்டுமே இருக்கிறது.
பாருங்கள் , எப்படி எல்லாம் செயலிகளை உருவாக்குகின்றனர் !

செயலியை டவுண்லோடு செய்ய: 

 http://www.mercurydesign.in/convert-my-shoe-size/

‘கிச்சன் கெபினட்’ பிறந்த விதம்!

அரசாங்கத் தலைவர்களின் அதிகார பூர்வமற்ற ஆலோசகர்கள்
 

வட்டம் ‘கிச்சன் கெபினட்’ என்று அழைக்கப்படுகிறது.




இந்த வார்த்தை 1832 இல் உருவானது. அப்போது அமெரிக்க
 

 ஜனாதிபதியாக ஆண்ட்ரூ ஜாக்சன் என்பவர் இருந்தார்.




அவர் தனது நெருங்கிய நண்பர்கள் மூன்று பேருடன் அடிக்கடி
 

அதிகாரப்பூர்வமில்லாத தனிப்பட்ட கூட்டங்களை நடத்துவார்.



அந்த நண்பர்கள் வெள்ளை மாளிகையின் பின் கதவு வழியாக
 

 நுழைந்து சமையலறை வழியாக மாளிகைக்குள் வருவார்கள்.




அதிலிருந்து அமெரிக்க ஜனாதிபதியின் நெருங்கிய நட்பு
 

வட்டத்தை ‘கிச்சன் கெபினட்’ என்று பத்திரிகையாளர்கள்
 

குறிப்பிடத் தொடங்கினார்கள்.



பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமற்ற
 

அரசியல் ஆலோசகர்களைக் குறிக்கும் வார்த்தையாக இது மாறியது.

ஒருவரின் செயலுக்குரிய பரிசு எது?

மலைக்கு மேல் இருக்கும் தனது வீட்டுக்கு அடிவாரத்தில் இருந்து இரண்டு பானைகளில் தண்ணீர் சுமந்து செல்வான் அந்தக் குடியானவன். ஒரு பானையில் மட்டும் சில ஓட்டைகள் இருந்தன. இதனால் வழிநெடுக நீர் ஒழுகி, வீட்டை அடைவதற்குமுன் பாதியளவு நீர் குறைந்து விடும். முதலாளிக்கு நன்றாகப் பணியாற்ற முடியவில்லையே என்ற வருத் தத்தில் கண்மூடிக் கிடந்தது அந்தப் பானை.

ஒருநாள் கண்களை திறந்த பானை, வழிநெடுக பச்சைப்பசேலென புற்களும் பூச்செடிகளுமாக வளர்ந்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்தது. ‘அட... இந்த அற்புதத்தை உருவாக்கியது யார்?’ என்று பானை கேட்க... ‘வழிநெடுக விதையைத் தூவி வைத்தேன். நீதான் நீரூற்றி தோட்டத்தை உருவாக்கினாய்’ என்றான் குடியானவன்.

கடவுளின் படைப்பில் எதுவும் வீணாகு வதில்லை. எவரையும் வீண் என விலக்க முடியாது.

ஒவ்வொருவரும் ஏதோவொரு மகத்தான காரியத்தைச் செய்யவே படைக்கப்பட்டிருக்கி றோம். அந்தக் காரியம் என்ன? அதைச் செயல்படுத்துவது எவ்விதம், என்று கண்டறிவதில்தான் நமது வெற்றி அடங்கியுள்ளது. அறிவு நூல்கள் வாழ்வின் இலக்கை சுட்டிக்காட்டி... அதை நோக்கி உற்சாகமாக உழைக்க வழிகாட்டுகின்றன.

வீட்டுக்கும் நாட்டுக்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உண்டு. இவற்றைத் தொழில் என்று சொல்வதை விட, தர்மம் என்றே பண்பாடு போதிக்கிறது. அதாவது, பெற்றோராக இருந்து கடமை ஆற்றுவது தொழில் அல்ல; தர்மம்! நமது கடமையை அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு உண்டு என்பதை உணர்வது அவசியம்.

நம்மில் பலரும் உரிமைக் குரல் கொடுக்கின்றனர். ஆனால் கடமையை அலட்சியப்படுத்திவிடுகின்றனர். காலப் போக்கில், உரிமைக்காகப் போராடுவதே கடமையாகி விடுகிறது. நமக்கான உரிமையை எடுத்துரைக்கும் மனித உரிமைக் கழகங்கள் உண்டு. இதேபோல் மனித கடமைக்கழங்கள் ஏதேனும் உண்டா? நமது கடமைக்குள் பிறரது உரிமையும் பிறரின் உரிமைக்குள் நமது கடமையும் மறைந்திருக்கின்றன என்பதை அறிவோமா?

“சே.... என்ன வாழ்க்கை இது” என அன்றாடக் கடமைகள் குறித்த சலிப்பும், திங்கட் கிழமை மீதான வெறுப்பும், ஞாயிற்றுக்கிழமையை நேசிப்பதுமாக வாழ்பவர்தானே அநேகம்?

சில அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்வது அவசியம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த உலகில் செயல்படாமல் இருக்க முடியாது என்பது இயற்கையின் நியதி. அதுமட்டுமா? போதிய மனப்பக்குவம் இன்றி செயலை விட்டுவிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

செயலாற்றுவது என்பது ஒரு கலை. இதுகுறித்து கர்ம யோகமாக கீதையில் உபதேசித்திருக்கிறார் கிருஷ்ணர். செயல் புரிவதன் நுணுக்கத்தை அறிந்தோர். தங்களது செயலை இறைவனுக்கான வழி பாடாகக் கருதுவர். செயல்படுவதன் நுணுக் கத்தை அறிந்தால்தான் நிம்மதியாக வாழ முடியும். அப்படி நிம்மதியாக வாழ செய லாற்றுவது குறித்து வாழ்க்கை நெறியையே வகுத்துத் தந்துள்ளனர் முன்னோர். இதன் முதல்படி செயலை நேசித்தல்!

செயல் என்பது அன்பின் வெளிப்பாடு. நீங்கள் செய்யும் செயலை நேசிக்க முடியவில்லை எனில், செயல் புரிவதை நிறுத்தி விட்டு, கோயில் வாசலில் அமர்ந்து நேசிப்புடன் செயல் புரிபவர் எவரோ அவர்களிடம் பிச்சை எடுத்து உண்பதே சிறந்தது என்பது பாரசீகக் கவிஞர் கலீல் ஜீப்ரானின் கூற்று.

குளிரூட்டப்பட்ட அறையில், காரணமே இல்லாமல் கடுகடுவென இருப்பவர்களும் உண்டு; வியர்த்து வழியும் பேருந்து நடத்துனர் வேலையில் சில்லறைகளுடன் உபரியாக புன்னகையை தருபவர்களும் உண்டு. அதாவது வேலையை நேசிக்கக் கற்பதே முதல் படி!

நான் இருக்க வேண்டிய இடமே வேறு. என் தலையெழுத்து... இங்கே மாட்டிக்கிட்டேன் என்று சிலர் புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். ‘வேலை வாய்ப்பு’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறோம்தானே? இந்த வேலை இறைவன் நமக்கு அருளிய வாய்ப்பு என்பதை மறந்துவிடக் கூடாது. மிகுந்த நேசிப்புடன் செயலாற்றுபவர் களின் கையால், ஒரு கோப்பைத் தேநீர் வாங்கி பருகினாலும் அது தேவாமிர்தத்துக்கு இணையானது!

அடுத்து இரண்டாவது படி! செயலை நேசித்தால் போதுமா? எப்படிச் செயல் படுவது என்பதைக் கற்றறிதலும் அவசியம். இதைப் போய் இவர்கிட்ட நான் கற்றுக் கொள்ள வேணுமா? எனும் எண்ணமே பெரிய தடைக்கல். கற்றுக் கொள்வதற்கு வயது, பின்புலம், அந்தஸ்து என எதுவும் தடை இல்லை. தணியாத ஆர்வமும் தீராத உற்சாகமும் இருந்தாலே போதும்!

நடுவழியில் பிழைத்து நின்ற காருடன் ஒரு மணி நேரம் போராடியும் உருப்படியாக ஏதும் செய்ய முடியாமல், மெக்கானிக் ஒருவரை அழைத்து வந்தார் அவர். அந்த மெக்கானிக் காரை ஒரு தட்டுத் தட்டியதும் சரியாகிப் போனது வண்டி. “நூறு ரூபா குடுங்க சார்” என்றார் மெக்கனிக். ஒரு தட்டு தட்டினால் நூறு ரூபாயா? இல்லை எங்கே தட்ட வேண் டும் என்று தெரிந்து தட்டியதற்குத்தான் இந்தக் கூலி!

மூன்றாவது படி; நேசித்து கற்றுக்கொண்ட செயல் திறனை, விடாமுயற்சியுடன் நடைமுறைப்படுத்துவது, ‘தூக்கம் சோர்வு, பயம், கோபம், சோம்பல், நேரம் தாழ்த்தி செயல்படுத்துவது எனும் ஆறு பெருங்குறைகளையும் நலத்தை விரும் புபவன் தவிர்க்க வேண்டும்” என்கிறது மகாபாரதம்.

நான்காவதுபடி; செயலில் சிந்தனையையும் குவிக்க வேண்டும். சூரியக்கதிர்கள் குவியும் போதுதான் நெருப்புப் பொறி தோன்றுகிறது. ஒரு முகப்பட்ட மனதுடன் செய்யும் செயல்தான் வெற்றியைத் தரும். இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் மாபெரும் சவால் செயலையும் சிந்தனை யையும் ஒருங்கிணைப்பதுதான்! எத்தனை இடர் வந்திடினும் கவனத்தை செயலில் குவித்தால் வெற்றி நிச்சயம்!

ஐந்தாம்படி; இறுதியானதும் கூட! செயலின் விளைவை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒரு தோமஸ் அல்வா எடிசனின் உழைப்பால் இன்று உலகமே மின் விளக்குகளால் ஒளிர்கிறது. அதாவது நமது உழைப்பு நாட்டுக்கும் உலகுக்கும் பயன்தரும் வகையில் இருப்பதே சிறப்பு!

ஒருவன் செய்யும் செயலுக்குப் பரிசு அந்தச் செயல்தான்!

உலக மக்களின் புகழ்ச்சி, இகழ்ச்சி எதையும் பொருட்படுத்தாமல் கவனம் முழுவதையும் செயலில் தேக்கி வைத்துக் கொள்ளும் பயிற்சி இளைஞர்களுக்கு அவசியம். சாதனையால் உலகமே தன்னைத் திரும்பிப் பார்த்தாலும், அந்த ஆராய்ச்சியாளர் தனது கவனத்தை ஆராய்ச்சியில்தான் வைத்திருப்பார். அவரது செயல்தான் அவருக்கு ஆனந்தத்தைத் தருகிறது. இவருக்கு விருதுகள் எல்லாம் இலவச இணைப்பு.... அவ்ளோதான்!

கர்மயோகியானவர், இறைவன் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் கருவியாகவே தான் ஆற்றும் செயலைப் பயன்படுத்துகிறார். இதனால் மனக் கொதிப்பும் பதற்றமும் இன்றி எப்போதும் உள்ளத்தில் அன்பு ததும்ப தனது வழிபாட்டை நடத்துகிறார்.

சிலகாலம் முன்பு மருத்துவராக விளங்கிய ராமகிருஷ்ண மடத்தின் சாது ஒருவர், காசியில் ஏழை நோயாளிகளுக்கு சேவையாற்றி வந்தார். ராமகிருஷ்ணருக்கு வழிபாடு நடத்த தயாராகும் வேளையில், அவசர அறுவைச் சிகிச்சைக்காக ஏதேனும் அழைப்பு வந்தால், அறுவைச் சிகிச்சை நடைபெறும் இடத்தையே கோயிலாகவும் செய்யும் சிகிசையையே வழிபாடாகவும் கருதுவாராம்! இறைவன் மீதிருக்கும் அன்பு, சக உயிர்கள் மீதும் பொங்கித் ததும்பிப் பெருகும். எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனோ பாவம் இது!

பலாப்பழ பிசின் கையில் ஒட்டிக் கொண்டால், பலாப்பழத்தை சரியாக நறுக்கவோ சுவைக்கவோ முடியாது. அது போல் ‘நான் செய்தேன் எனும் எண்ணத் தில்... செயலில், அதன் விளைவில் பற்றுக் கொண்டால், செயலில் ஆழ்ந்து ஈடுபட முடியாது. சுயவிருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு பெரியோர் காட்டிய வழியில் செயல்புரிவதே உத்தம மானது!

கர்ம யோகியானவர், செயல் மலரெடுத்து இறைவனை அர்ச்சிக்கிறார். செயலின் முடிவையும் இறைவனின் திருவடியில் மலர்களாகவே சமர்ப்பித்து விடுகிறார். ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே இதுதான் கீதையின் சாரம் என்று கீதையைப் படிக்காதவர்கள் கூட சொல்லி விடுவர். இந்தப் புத்தகத்தை அச்சடித்து வெளியிட்டவர் கூட, அது இத்தனை பிரதிகள் விற்க வேண்டும் எனும் எதிர் பார்ப்புடன்தானே செய்திருப்பார்? பலனை எதிர்பார்க்காதே எனில் பலன் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றாகிவிடும்.

எதிர்பார்த்த பலன், எதிர்பார்த்ததைவிட அதிகம். எதிர்பார்த்ததைவிடக் குறைவு. எதிர்பார்த்ததற்கு நேரெதிர்... இந்த நான்கு விதமான பலன்களில் எது வேண்டுமானாலும் கிடைக்கலாம். இதை, இறைவனின் அருட்பிரசாதமாக ஏற்றுக் கொள்கிறான். கர்மயோகி. பிரசாதத்தின் குறை- நிறைகளை ஆராயாமல் அதனை அப்படியே ஏற்பதே முறை. இது போலவே செயலின் பலன்களையும் ஏற்கச் சொல்கிறது சாஸ்திரம். பிரசாதம் என்ற சொல்லுக்கே உள்ளத்தெளிவு என்று பொருள். கர்ம யோகம் செய்வதால் உள்ளம் தூய்மை பெறுகிறது.

மனத்துக்கண் மாசிலன் ஆதல்
அனைத்தறன் ஆகுல நீரபிற


என்றார் வள்ளுவர்.

எல்லா அறங்களும் காம யோகத்தில் அடங்கிவிடுகின்றன. கர்ம யோகிக்கு சலி ப்போ, செயலின் விளைவு குறித்த கவலையோ, பயமோ இல்லை. அவர்களது உள்ளத்தில் இன்பமேயன்றி ஒருபோதும் துன்பம் இல்லை.

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க!



ஆறு அணில்கள் நாவல்பழக் கொட்டைகளைப் பொறுக்கி ஒரு பெரிய 


கூடையில் போட்டன. 


அணில்கள் மிகமிக வேகமாக வேலை செய்ததால் கூடையில் போட்ட 


ஒவ்வொரு நிமிட முடிவிலும் அந்தக் கொட்டைகள் இரட்டிப்பாகின. 



பத்தாவது நிமிட முடிவில் அந்தக் கூடை முழுதும் நிரம்பி விட்டது. 



அந்தக் கூடையை அரை அளவு மட்டும் நிரப்பும்போது,


 அந்த அணில்கள் எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்?

மரவள்ளிக் கிழங்கு தோசை - 1 - சமையல்!

 

தேவையானவை:

 புழுங்கலரிசி - 1 கப்,

மரவள்ளிக் கிழங்கு - சிறியதாக 1,

காய்ந்த மிளகாய் - 6,

 சீரகம் - 1 ஸ்பூன்,

பெருங்காயம் - சிறிதளவு,

உப்பு - தேவைக்கேற்ப,

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, 3 முறை பால் போக நன்கு கழுவிக் கொள்ளவும். புழுங்கலரிசியை கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

 மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றை அரைத்து, அதோடு கிழங்கையும் சேர்த்து அரைக்கவும்.

 பின்னர் ஊறிய அரிசியையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். (ஆட்டுரல் இல்லாதவர்கள் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைக்கலாம்)

ஆட்டிய மாவை தோசை ஊற்றும் பக்குவத்தில் வைத்துக் கொண்டு மெல்லிய தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி விட்டு,

எண்ணெய்விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும். எல்லோரும் சாப்பிட ஏற்ற ஆரோக்கிய தோசை இது.

கண்டுபிடிப்புகளும் - கண்டுபிடித்தவர்களும்!

 

• இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் - வில்டன் ஸர்ஃப்

• (WWW) World Wide Web – எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ

• World wide Web எனபதன் துவக்க கால பெயர் - என்க்வயர்

• கணினி வழி தகவல் பரிமாற்றத்தில் “புன்னகை தவழும் முகம்” எனபதைக் குறிக்க    எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன்முதலாக (1982)ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் இஃபால்மன் எனும் பேராசிரியர்.

• கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்ர்ஜி ஃப்ரின்

• உலகின் முதல் மடிக்கணினி - டைனாபுக் என்ற பெயரால் அழைக்கப்பட்டது

• பிரபல விக்கிபீடியா வெப்சைட்டை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்

• பிரபலமான பேஜ் மேக்கர் எனும் பப்ளிஷிங் சாஃப்ட்வேரை உருவாக்கியவர் - ஃபால் பிரெயினார்ட்

• பெண்டியம் புராசஸர்களின் தந்தை எனப்படும் இந்திய விஞ்ஞானி - வினோத் தாம்

• பால் பிரெயினார்ட் என்பவை இந்தியாவின் சூப்பர் கம்யூட்டர் என அழைக்கப்படுகின்றன

• C++ எனும் கணினி மொழியை வடிவைமத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்

• லோட்டஸ் 1-2-3 எனும் மொழியை கண்டுபிடித்தவர் - மிச் கபோர்

• பிரபலமான (Dos) எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் - டிம் பாட்டர்ஸன்

• தனது 20 ஆம் வயதிலேயே லினக்ஸ் உருவாக்கிய விஞ்ஞானி - லினஸ் தோர்வாட்ஸ்

• ஆப்பிள் கணினியைத் துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்

• (CD) குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்

• Power by Intellect Driven by Values - என்ற முத்திரை வாக்கியம் பிரபல இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வாக்கியம்

• ஹாட் மெயிலை உருவாக்கிய இந்திய ஐ.டி விஞ்ஞானி - ஸபீர் பாட்டியா

• இந்தியாவில் ஐ.டி சட்டம் நிலுவையில் வந்த வருடம் - 2000 ஆம் ஆண்டு

• இந்தியாவில் மிக அதிகம் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் - டி.சி.எஸ்

• கணினி அறிவியலின் தந்தையார் - ஆலன் டூரிங்

உலகின் முதல் மைக்ரோபுராசஸர் இன்டெல் என்பதாகும்.

முதல் மைக்ரோபுராசஸரை உருவாக்கியவர் – டெட் ஹோப்

கணினி மவுஸை கண்டுபிடித்தவர் – மக்ளஸ் எங்கன்பர்ட்

கணினி வடிவை சிறிதாக்கிய IC சிப்பைக் கண்டுபிடித்தவர் – ஜாக் கில்பி

இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்புதான் டிரான்சிஸ்டர்

Computer Tabulating and recording Company என்பதுதான் இப்போது ஐ.பி.எம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது

உலக கணினி எழுத்தறிவு தினம் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது

Center for Development of Advanced Computing என்பதன் சுருக்கம்தான் C-DAC எனப்படுவதாகும்

“புராஜெக்ட் சிகாகோ” என்பது விண்டோஸ் கண்டுபிடிப்பின் ரகசியப் பெயராகும்

கிரிக்கெட் பந்தின் வேகத்தை அளக்க ஹாக் ஐ (Hawk Eye) என்ற பிரபல ஐ டி தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது

கணினி வன் தட்டின் (HARD DRIVE) தந்தை என்றழைக்கப்படுபவர் – அலன் ஷூகர்ட்

ஹெர்பர்ட் சைமன் துவங்கிய கணினி அறிவியல் பிரிவின் கிளைதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பதாகும்

இன்டல் கம்பெனி நிறுவனர்கள் – கார்டன் மூர் மற்றும் ராபர்ட் நாய்ஸ்

கணினி செஸ் விளையாட்டை கண்டுபிடித்தவர் – ஸ்ட்ரிக் ஜி.பிரின்ஸ்

உலகின் முதல் கணினி விளையாட்டு Space War என்ற விளையாட்டாகும்

விலை குறைந்த (ரூ.4000) PC கணினி உருவாக்கிய இந்திய நிறுவனம் நொவாட்டியம் என்ற நிறுவனமாகும்

“Your Potential Our Passion” என்ற முத்திரை வாக்கியம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சார்ந்ததாகும்

Uniform Resource Location என்பதன் சுருக்கம்தான் URL முகவரியாகும்

மைக்ரோபுராசஸர் என்பதுதான் கணியின் மூளை என்றழைக்கப்படுகிறது

கணினியின் முக்கிய சர்க்யூட்டுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி – மதர் போர்ட்

கணினியின் ஈதர் நெட்டை கண்டுபிடித்தவர் – ராபர்ட் மெட்காஃப்

மிக வேகமான சூப்பர் கணினிகள் “ப்ளூ ஜூன்” என்றழைக்கபடுகின்றன

கேமரா மொபைல் ஃபோனை கண்டுபிடித்தவர் – ஃபிலிப் கான்

மைக்ரோபுராசஸரை நினைவகத்தோடு இணைக்கும் ஒயர்கள் Bar என்ற பெயரில் அழைக்கபடுகின்றன

Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம்தான் VIRUS என்ற பிரபல வார்த்தையாகும்.

ஏலியன்ஸ் உண்மையா அல்லது பொய்யா ?

வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள்.

பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான்.

வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித சாயல் வருவதற்கு பூமியின் பல பருவமாற்றங்களை மனிதன் தாண்டி பரிணமத்தின் மூலம் பக்குவப்பட வேண்டியிருந்தது. எனவே இது போன்ற சத்தியக்கூறுகள இன்னொரு கிரக உயிருக்கு அமைவது மிக மிக அபூர்வம்.


வேற்று கிரக வாசிகள் பறக்கும் தட்டு போன்ற வாகனத்தில் வந்து இறங்க வேண்டுமென்றால் அவர்களுக்கு மனிதனைப் போன்ற உருவம் இருக்க வேண்டும். வாகனத்தை கட்டுப்படுத்த கைகள், எங்கே இருக்கிறோம் என்று பார்த்து இறங்க கண்கள், இறங்கி நடந்து வர கால்கள் எல்லாம் மனிதனை போல் அமைய வேண்டும். பறக்கும் தட்டு போன்ற வாகனத்தை வடிவமைக்க இயக்க மனிதனைப் போல் இயந்திர அறிவில் பரிணாமம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான சாத்தியம் வெகுவாக குறைவு. இதை விட வேறு பயண முறைகளை அவர்கள் உப்யோகிக்கலாம். teleportation என்றெல்லாம் நாமே மாற்று வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

அயல் உயிரினங்கள் எப்படியெல்லாம் இருக்க வாய்ப்புண்டு என எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்

கெட்டியான பாறை போல் இருக்கலாம், கூழாங்கல் போல இருக்கலாம். அதனால் தான் காலில் கல் தட்டிவிட்டது என்கிறோமா?

பிசு பிசுவென்று போஸ்டர் ஒட்டும் பசை போல் இருக்கலாம். காலில் அப்படி ஏதாவது அப்படி மிதிபட்டால் ஒருமுறை நன்றாக பரிசோதிது பார்த்து விட்டு கழுவவும்.


கலர் கூல் ட்ரிங்ஸ் போல் இருக்கலாம், ஜெல்லியாக இருக்கலாம். குடித்தால் வயிற்றை பிராண்டுவது போலிருந்தால் அதற்கு காரணம் பாக்டீரியா. இரும்பு நட்டு போல்டு போல இருக்கலாம், மண் போல இருக்கலாம் தோசை இட்லி போலக்கூட இருக்கலாம்.


புதிய தனிமம்,புதிய கிரகம்,என்றெல்லாம் கூட அறியப்படலாம்.
அலைகளாக,கதிர் வீச்சாக கூட இருக்கலாம்
ஒளியாக ஒரு விசிட் அடித்து விட்டு போகலாம்.
வாயு வடிவத்தில் உலவிக்கொண்டிருக்கலாம். நான்கு பேர் கூடுமிடத்தில் திடீரென கெட்ட நாற்றம் வந்தால் அது ஓர் நபரின் வருகையாகக் கூட இருக்கலாம்.

பூமியில் காணப்படும் எல்லா உயிரினங்களும் கார்பன் எனும் கரிமத்தை அடிப்படையாகக் கொண்டது. இது போல மற்ற தனிமங்களை அடிப்படையாகக் கொண்டு கூட உயிரினங்கள் இருக்கலாம். தங்கம் , தாமிரம், கந்தகம், போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கூட உயிர்கள் இருக்கலாம்

ஒளியாக ,நெருப்பாக, நீராக எல்லாம் கூட உயிரினங்கள் ஆக்கப்பட்டிருக்கும் சாத்தியம் உண்டு. ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் தினமும் பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்றும் நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் இருப்பதாகவும் குர் ஆன் சத்தியம் செய்து கூறுவதை மறுக்க முடியவில்லை. தினம் எவ்வளவு நட்சத்திர ஒளி பூமியை தொடுகிறது. ஆனால் அதன் மனித வடிவமும் மனிதனோடு இன்டெராக்சனும் உறுத்துகிறது.
பழமையான இந்து மதக் கருத்துகளும் உயிர்கள் எல்லா இடமும் இருக்கின்றது என்று தான் சொல்கின்றன.

அடிப்படை ஆதாரமாக நாம் அணுக்களால் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம் . அணுக்களுக்கு அடிப்படை எலெக்ட்ரான், புரோட்டான் எனும் சக்திகள் தான். எப்படி அணுக்கள் மூலக்கூறுகளாகி, அமினோ அமிலங்களாகி, செல்களாகி, மனிதனாக பரிணாமம் பெற்றானோ. இதே போல் வேறு கிளைகளிலும் ஏன் பரிணாமம் நிகழ்ந்து நம் கண்முன்னே இருந்தும் நம்மால் உணர முடியாத உயிர்கள் நம்மைச் சுற்றி இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் முதியோர்களை ஓர் உயிர்களாக தெரியாதற்கு பெயர் வேறு,அது திமிர்.

முன்பெல்லாம் ஒரு சினிமா பார்க்க வேண்டுமானால் புரொஜெக்டரில் ஃபிலிம் இட்டு ஓட்ட வேண்டும். பின்னர் வீடியோ கேஸட்டுகளில் வேறு வடிவத்தில் சினிமா பதிவு செய்து காட்டப்பட்டது, பின்னர் சிடி க்கள், டிவிடி க்கள் என வேறு டெக்னாலஜியில் அதே "குலேபகாவலி " காட்டப்பட்டது. இப்போது ஹார்ட் டிஸ்க், ஃபளாஷ் மெமெரியில் divx ,mpeg, vob ஃபைலாக கிடக்கிறது. இணையம் வழி இன்னும் எத்தனையோ வடிவங்களில் எல்லாம் அதே சினிமா வெளிப்படுகிறது. இதே போல் உயிர் என்பது வெறும் ஒரு Data தான் ஒரு software போன்றது. அது இருக்கும் மீடியம் எப்படி வேண்டுமானாலும் இருக்கும் சாத்தியம் உண்டு. மின்சாரம் கண்டுபிடிக்கப் படாமல் இருந்தால் இப்போதைய செல் போன், லேப் டாப் , இணையம் எல்லாம் எந்த வடிவில் இருக்கும் ?

வேறு உயிர்கள் வானத்திலிருந்து தான் வர வேண்டுமென்பதில்லை. நாமே இன்னும் அறியாத வகையில் இன்னும் பூமியிலே கூட இருக்கலாம். நம்மைச் சுற்றி பல்லாயிரம் வருடங்கள் இருந்தும் "மரத்துக்கும் உயிருண்டு" என்று நிரூபித்துச் சொல்ல ஒரு ஜகதீச சந்திர போஸ் தேவைப்பட்டது. இன்னும் கல்லுக்கும் மண்ணுக்கும், பூமிக்கும் கூட உயிருண்டு என பின்னாளில் உணரப்படலாம். மண்ணின் அம்சம் தானே நம் உடலிலும். பூமியின் எல்லா உயிர்களும் பூமியின் அம்சம் தானே. உயிரற்றதாக கருதப்படும் பூமியில் உயிர் தோன்றுகிறது. உயிருள்ள உடம்பில் ரோமம். நகம் போன்ற உயிரற்றப் பொருள் தோன்றுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள உயிர் பொருள் நம் உடலில் சேர்வதில்லை. அதிலுள்ள உயிரற்ற பொருள் தான் நம் உடலில் சேர்ந்து உயிர் பொருளாகிறது.

பஞ்ச பூதங்கள், வானவர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லாம் இப்படிப் பட்ட வேறு உயிர்களுக்கு மனித வடிவம் கொடுத்து புரிந்து கொண்டிருப்பதாலோ என்னவோ?

வேறு உயிரினங்கள் மனித கண்களால் அளக்கக்கூடிய சைசில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மலையளவாகவோ, வியாழன் கோள் அளவாகவோ, ஏன் சூரியனின் சைசில் கூட இருக்கக் கூடும். அது போல ஒரு பாக்டீரியா, வைரஸை விட சிறிதாகக் கூட இருக்கலாம். அணுக்களுக்குள் கூட குட்டி பிரபஞ்சங்களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் உயிர்களும் இருக்கக் கூடும். நம் பார்வையின் அறிவின் எல்லைகள் மிகக் குறுகியது. நம் அறிவின் பவுதீக விதிகள் செல்லுபடியாகாத இடத்திலும் வேறு உயிர்கள் இருக்கலாம். இடம், அளவு , காலம் இதெல்லாம் நம் மனதால் அமைக்கப்படும் ஒரு கருத்து அவ்வளவு தான்.பெரிது சிறிது எல்லாம் நமக்கு மட்டும் தான். நீங்கள் சாப்பிடும் போது பல உலகங்களை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கலாம். சிலர் மில்கிவே , ஆண்ட்ரமீடா போன்ற கேலக்ஸிகளையே டிபன் பண்ணக்கூடும்.

நம்மை போலவே அத்தகைய வேற்று உயிர்களுக்கும் நம்மை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்கலாம். வேறு கிரக உயிர்கள் நம்மை தாக்கி அழிப்பது எல்லாம் சினிமாவுக்கு தான் சரி. அவர்கள் தேவையும் நம் தேவையும் ஒன்று என்றால் தான் அந்த நிலை உண்டாகும். அதற்கு அவர்கள் நம்மைப் போல் இருக்க வேண்டும்.

பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையினம்..

 

ஆஸ்திரேலியாவின் “மாலிபவுல்’ என்னும் பறவை
 ரொம்ப வினோதமானது. இந்தப் பறவைக்கு
 பெற்றோர் யார் என்றே தெரியாது.


ஏனெனில், தாய்ப்பறவை முட்டைகளை மண்ணுக்குள்
 போட்டு மூடிவைத்து விட்டு சென்று விடும்.
குஞ்சுகளோ பொரிந்து வெளியே வந்தவுடன் அப்படியே
 பறக்க ஆரம்பித்து விடும்.


அந்த அளவிற்கு அதற்கு இறகுகள் வளர்ந்து விடுகின்றன.


இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப்
 பறவைக்கு தெரிவதில்லை. தாய்ப்பறவையும் தனது
 முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வந்ததா என்று காண
 வருவதில்லை.


பொறுப்பில்லாத மம்மி. இந்தப் பறவை பற்றிய
 இன்னொரு விசேஷமான தகவல். பிறந்த நாளிலேயே
 பறக்கும் ஒரே பறவையும் இதுதான்.

அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்?

பட்டங்கள் கொடுப்பது பற்றி அமெரிக்க அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?

அரசியல் சட்டம் ஆர்ட்டிகிள் 1, பிரிவு 9:8


“அமெரிக்க அரசு எந்த பட்டத்தையும் யாருக்கும் வழங்க கூடாது. அமெரிக்க அரசில் பணியாற்றும் யாரும் எந்த வெளிநாட்டு மன்னர், அரசிடமும் எந்த பட்டத்தையும் பெறக்கூடாது…”


அமெரிக்க தேச தந்தையர் அன்றைய காலகட்ட ஐரோப்பாவில் “பிரபு, மை லார்ட், ஹிஸ் எக்சலன்சி” என அழைக்கும் மரபை கடுமையாக வெறுத்தார்கள்.


 தாமஸ் பெயின் அது குறித்து கூறுகிறார்:


“பட்டங்களும், அடைமொழிகளும், மைலார்ட் என்பதுபோன்ற விளிப்புகளும் அப்படி அழைக்கபடுபவரை பீடத்தில் வைத்து, அந்த ஆபாச விளிப்புகளில் மயங்கிய மக்கள் அவரை எந்த கேள்வியும் கேட்கமுடியாமல், விமர்சிக்க இயலாமல் செய்துவிடுகிறது”


அமெரிக்க ஜனாதிபதியை எப்படி விளிப்பது என்றும் ஒரு விவாதம் எழுந்தது. “ஹிஸ் ஹைனஸ், பிரசிடெண்ட் ஆஃப் தெ யுனைடெட் ஸ்டேட்ஸ்” என அழைக்கவேண்டும் என ஒரு சாரார் கூறினர். “ஹிஸ் எக்சலன்ஸி” என அழைக்கவெண்டும் என்றனர் சிலர். அரசியல் சாசன தந்தை ஜேம்ஸ் மேடிசன் அனைத்தையும் நிராகரித்துவிட்டார்.


அமெரிக்க ஜனாதிபதி “மிஸ்டர் பிரசிடெண்ட்” என மட்டுமே அழைக்கபடுவார்!!!!!!

ஒவ்வொன்றும் ஒருவிதம்!

 

புகழ்பெற்ற நாவலாசிரியர் அலெக்சாண்டர் டூமாஸ் விசித்திரமான மன இயல்புகளையும், வியப்படையச் செய்யும் கொள்கைகளையும் உடையவர். இவருடைய வாழ்க்கை மிகவும் சுவையானது.


-
இவர் எழுதும் காகிதம், மை, பேனா போன்றவைகளில்கூட சில பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தார்.


-
நாவல் எழுதுவதானால் அதற்கென்றே பிரத்தியேகமாக உள்ள பேனாவினால் நீலநிறக் காகிதத்தில் மட்டுமே எழுதுவார். கவிதைகளை எழுதுவதற்குத் தனியாக சில பேனாக்களை வைத்திருப்பார். பத்திரிகைகளுக்கு எழுதும் கட்டுரைகளை ரோஜா நிறம்கொண்ட காகிதத்திலும், கவிதைகளை மங்களகரமான மஞ்சள் நிறக் காகிதத்திலும்தான் எழுதுவார்.

-

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பேனா உண்டு. எந்தச் சூழ்நிலையிலும் நீலநிற இங்க் – மையைப் பயன்படுத்தவே மாட்டார். ஏனென்றால், நீல நிற மை மனக்குழப்பத்தை – தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பது இவருடைய ஆழ்ந்த நம்பிக்கை. இவர் எழுதிய நூல்கள் 1,200.

UNESCO அறிவித்த உலக நாடுகளின் சிறப்புக் கல்வித்தரம்!


1. பிழையின்றிப் படித்தல் – நியூசிலாந்து


2. குழந்தைப் பருவத்தில் கல்வி ஈடுபாடு – இத்தாலி


3. கணிதக் கல்வி – நெதர்லாந்து


4. விஞ்ஞானக் கல்வி – ஜப்பான்


5. பன்மொழிகளிலும் கல்வியறிவு – நெதர்லாந்து


6. கலை சம்பந்தப்பட்ட கல்விகள் – அமெரிக்கா


7. உயர்நிலைப் பள்ளிகளில் கல்வித்தரம் – ஜெர்மனி


8. ஆசிரியர் பயிற்சி – ஜெர்மனி


9. மேல்நிலைக் கல்வி – அமெரிக்கா


10. முதியோர் கல்வி – ஸ்வீடன்
-

இதுதான் தாம்பூலம்!

 

“இதுதான் தாம்பூலம்”…


வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மட்டும் தாம்பூலம்

 அல்ல…


தரமான தாம்பூலம் என்பது


 -ஒரு பாக்கு


ஐந்து வெற்றிலை



சிறிது கஸ்தூரி



பச்சைக் கற்பூரம்



சங்கச் சூரணம்



இரண்டு கிராம்பு



சிறிது ஜாதிக்காய்



மூன்று வால் மிளகு


இந்தக் கலவை முறையில் சேர்த்துப் போட்டுக்

 கொள்வதுதான் தரமான தாம்பூலம் ஆகும்.