Search This Blog

Sunday 8 December 2013

அவசர கால முதலுதவி முறைகள்...!




வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.


மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :



உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.


வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.


தலைவலி :


கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.


வயிற்றுப் பிரச்னைகள் :



தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.


கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.


வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.

பாரதி இதைப் பார்த்திருந்தால்..... கவிதை!


பாரதி இதைப் பார்த்திருந்தால்
 தலைப்பாகையை கழற்றிவிட்டு
 தண்டவாளத்தில் படுத்திருப்பான் !


கோவா கடற்கரை
 அலைகளில் இருக்கும் கேவலம்
மெரினா கடற்கரை
 அலைகளிலும் கலக்கிறதா ?


காதலர் என்ற பெயரில்
 இந்த சதைப் பிராணிகள் சிலது
 தற்கொலை செய்து கொள்கின்றன.
மரணம் இவர்களால்
 அசிங்கப்பட்டுப் போகிறது.


அலைகள் விளையாடி
 ஆனந்தம் நிறைந்த
 மெரினா கடற்கரையா ?
காம விளையாட்டுச்
 சிற்பங்கள் நிறைந்த
 கஜுராஹோ கோயிலா ?


 ' காதாலாகி... கசிந்துருகி...
கண்ணீர் மல்கி'
என்று எழுதியவன்
 எழுதிய விரல்களை
 வெட்டிக் கொள்வான்.

தொழில்நுட்ப காதல்..!



பெண் அப்பா நான் லவ் பண்றேன்..


அப்பா : பையன் எந்த ஊரு..


பெண்: UK ல இருக்கான்...


அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி?


பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ...


WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ......


WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ...


அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ...


அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...


ONLINEல ஜாலியா இருங்க...


E - BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க...


G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு...


எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு.... அவ்வுளவுதான்....


பெண் : ???????????

பேஸ்புக்கில் உங்கள் Profile ஐ யார் யார் பார்த்தார்கள் என அறிய வேண்டுமா..??



என்ன நண்பர்களே...!! தலைப்பைப் பார்த்துவிட்டு வியக்காதீர்கள்.. இப்படி ஒரு வசதி இருக்கிறது எனப் பலர் நம்பி தமது பேஸ்புக் கணக்கையே இழந்திருக்கிரார்கலாம்.


ஏனெனில் இப்படிப் பட்ட apps கள் இருக்கிறதென ஒரு இணையத்தளம் போட்டுவிட்டால்... உடனே வேறு என்ன... வேறு வேறு இணையதளங்களும் copy செய்து... வாசிக்க வரும் மக்களை உசுப்பேத்துவது.


உடனே.. அவர்களும் நம்பி அந்த app ஐ பயன்படுத்துவார்கள். ஆனால் ஒன்றும் வராது பதிலாக அவர்களது account hack செய்யப்படும்.


ஆம்,நண்பர்களே...!! இது போன்ற apps அனைத்துமே hacker களால் உருவாக்கப்படுபவை.


DoorBellஎன்ற app இருக்கிறது ஆனால் அதுவும் உண்மையானதானாதாக இல்லையாம். அதை வேண்டுமானால் நீங்கள் பாவிக்கலாம்... ஆனால்..


Unfaced.comஎன்ற app இருக்கிறது அது John Arrow என்பவரால் உருவாக்கப்பட்டது. அதை பேஸ்புக் தடைசெய்துவிட்டதாம். ஏன் என்றால் அது பேஸ்புக்கின் rules க்கு தகுந்ததாக இருக்கவில்லை. அதை உங்கள் profile ல் பாவனை செய்தாலும் பாவிக்கப்படாது. இருந்தபோதிலும் அதைப் பாவித்தால் உங்கள் கணக்கு முடிவுக்கு வந்து விடும். அதாவது hack செய்யப்பட்டு விடும்.


பேஸ்புக் ஒரு நாளுமே தனது condition களுக்கு எதிராக இருக்கும் app ஐ உள்ளேடுக்காது. அப்படி இருந்து யாராவது அதனை பாவித்தாலும் அவர்களது கணக்கு முற்றாக நீக்கப்படும்.


அதிகமான Track செய்யும் app கள் போலியானவை. எனவே, இப்படியான Track செய்யும் app களிலிருந்து தள்ளியிருப்பது உங்கள் கணக்குக்குப் பாதுகாப்பு என்பதை கூறி இவளவு நேரமும் வாசித்த உங்களுக்கு நன்றி...!!


நண்பர்களுடன் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்...

அழித்த மொபைல் டேட்டா திரும்ப வேணுமா?




தற்போது மொபைல் என்பது ஒரு குட்டி கம்பியூட்டர் போலவே இயங்க ஆரம்பித்து விட்டது எனலாம்.


போன், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.


அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?


சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக் கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.


இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது.


ஸ்மார்ட் போன் கேலரிக்கு
 ஸ்மார்ட் போன் கேலரிக்கு
 இந்த சேவையின் பெயர் Seven. இதனை  http://www.seven.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும்.


இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது.


இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

ஆன்மிகக் கதைகள்!

எதனை நீ அதிகம் நினைக்கின்றாயோ, முடிவில் நீ அதுவே ஆகிவிடுகின்றாய். 


ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள்

ஆர்வத்தோடு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் பாடத்தைக் கவனிக்காது ஏதோ சிந்தனையில் இருந்தான். ஆசிரியர் அவனைக் கண்டார். அவன் ஏதோ கற்பனை உலகத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே அவனை தன்னருகில் வரச் சொன்னார்.

" பாடத்தைக் கவனிக்காமல் அப்படி என்ன சிந்தனையில் ஆழ்ந்திருந்தாய்" எனக்

கேட்டார். அதற்கு அம் மாணவன் தனது வீட்டில் அழகிய காளை ஒன்று

இருப்பதாகவும், அதன் நினைவே தனக்கு எப்போதும் இருப்பதாகவும் கூறினான். ஆசிரியர் அதற்கு அவனிடம்"அதோ எதிரில் தெரியும் குன்றில் அமர்ந்து உன் அழகிய காளையைப் பற்றி எண்ணியபடி இரு" என்று கூறினார்.

அம் மாணவனும் தொடர்ந்து ஏழு நாட்கள் அக்குன்றின் மேல் அமர்ந்து காளையை எண்ணியபடி இருந்தான். சாதாரணமாக இல்லை ஆழ்ந்து அதைப் பற்றியே எண்ணியபடி இருந்தான். அதன் பின் இப்படி இருப்பது அவனுக்கே வேண்டாம் என்று போய்விட மறுபடியும் பள்ளிக்குச் சென்றான்.

பள்ளிக்கு வந்தவன், வகுப்பறையின் வெளியிலேயே நின்று கொண்டிருந்தான்.

ஆசிரியர் அவனிடம் "உன் காளையைப் பற்றிய தியானம் முடிவடைந்து விட்டால் வகுப்பு அறைக்குள் வரலாமே" என்றார். அதற்கு அம் மாணவன் "இனிமேல் நான் குன்றுக்கு போகமாட்டேன், காளையையும் நினைக்கமாட்டேன், ஆனாலும் வகுப்பறைக்குள் என்னால் வரமுடியாது"என்றான். இப்பதிலால் ஆச்சரியம் அடைந்த ஆசிரியர் "ஏன்" எனக் கேட்டார். அதற்கு அவன் " எனது தலையின் இருமருங்கிலும் வளர்ந்துள்ள கொம்புகள் என்னை வகுப்பறைக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றது " என்றான். இடைவிடாது காளையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மாணவனுடைய மனம் அவனையும் காளையாகவே சிந்திக்கத் தூண்டியது.

ஆக, ஒருமுகப்படுத்தப்பட்ட மனதால் முடியாதது எதுவுமேயில்லை. தெய்வத்தின் மீதும், நல்ல எண்ணங்களின் மீதும் மனதை  ஒருமுகப்படுத்துவோமேயானால் நாம் பேரின்பத்தைப் பெறுவோம் என்பது உண்மை. மாறாக தீய எண்ணங்களில் மனதை செலுத்தினால் அழிவு நிச்சயம். எனவே இன்றிலிருந்தே மனதை நல்ல எண்ணங்களின் மீதும் தெய்வத்தின் மீதும் செலுத்தி, நன்மைகளை அடைவோம்.

ஆப்பம் - சமையல்!



 தேவையானவை:


பச்சரிசி - 1 கப்,

புழுங்கலரிசி - 1 கப்,

உளுத்தம்பருப்பு - கால் கப்,

 வெந்தயம் - 1 டீஸ்பூன்,

ஜவ்வரிசி - 3 டீஸ்பூன்,

உப்பு - 1 டீஸ்பூன்,

எண்ணெய் - கல்லில் தடவ தேவையான அளவு,

தேங்காய் (துருவியது) - 1 மூடி,

சர்க்கரை - அரை கப்.


செய்முறை:


அரிசி, பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து ஆட்டி, உப்பு சேர்த்து கலக்கவும்.

பின்னர் ஜவ்வரிசியில் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, ஜவ்வரிசி வேகும்வரை காய்ச்சி, ஆறியதும் மாவுடன் கலந்து வைக்கவும் (12 மணி நேரம்). காலையில் நன்கு மாவை கலக்கி விடவும்.

தேங்காயைத் துருவி, மிக்ஸியில் போட்டு, முதலில் கெட்டிப்பால், பிறகு தண்ணீர்பால் என மொத்தம் இரண்டரை டம்ளர் எடுக்கவும்.

 சர்க்கரை சேர்த்து அதைக் கலந்துகொள்ளவும்.

தோசைக்கல்லில் ஒரு சிறிய துணி கொண்டு, எண்ணெயைத் தொட்டு தடவி பின்னர் ஆப்ப மாவை எடுத்து ஆப்பமாக ஊற்றி எடுத்து, அதில் தேங்காய்ப்பாலை விட்டு பரிமாறவும்.


குறிப்பு:



ஜவ்வரிசி காய்ச்சி ஊற்றுவதற்கு பதில், 1 கைப்பிடி பச்சரிசி சாதம் போட்டும் மாவுடன் ஆட்டலாம். ஆப்ப சோடா சேர்க்கத் தேவையில்லை.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த கொத்தவரங்காய் சாப்பிடுங்க...



பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன்படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திறனாலும் அனுபவத்தாலும் பல மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர். சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் மூலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.


ஆயுர் வேதமருத்துவத்தில் 341 மருந்துச் செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. தற்போது இது நடைமுறையில் உள்ளது. நம் நாட்டில் சுமார் 2000 முதல் 7000 வகை மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளன. இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச் செடிகள் நாட்டு மருந்துகள் தயாரிப்பிலும் 100 முதல் 150 மூலிகைகள் ஆங்கில மருத்துவத்திலும் பயன் படுத்தப்படுகின்றன. நம்மிடம் மூலிகை செடியிலிருந்து மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்க உகந்த மேம்பட்ட தொழில் நுட்பங்கள் இல்லாமையால் மூலிகை மருந்து உற்பத்தியில் நம் நாடு 15வது இடத்தை வகிக்கின்றது.


நமது நாட்டில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், போன்ற தட்ப வெப்ப நிலங்களில் வளரும் மூலிகைகள் உள்ளன. அதனால் ஏற்றுமதியில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். மூலிகை வளம் கொழிக்கும் நம் நாட்டில் தீராத நோய்களையும் பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்தவும், பிணியின்றி வாழவும் இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்கள், மூலிகைகள் வாங்கி உபயோகிக்கவும், ஆங்கில மருத்துவத்தை விட மூலிகை மருத்துவப் பணச்செலவு குறைவாக இருப்பதாலும், மேலும் பக்க விளைவுகளும் இல்லை என்பதாலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


கடந்த காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கத்தையும், வைரத்தையும் கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக இங்கு விளையும், மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பெற்றுச் சென்றார்களாம். அப்படிப்பட்ட மிளகு முதல் நறுமணமிக்க மஞ்சள் வரை இங்கு கொட்டிக் கிடக்கிறது. நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும் மசாலாப் பொருட்களும், நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பனவாகவும், சாப்பிட்ட பின் திருப்தி உணர்வை ஏற்படுத்துவனவாகவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.


எனவே அத்தகைய உடலின் எடையைக் குறைப்பதற்கு உதவுகின்ற சில மூலிகைகளையும், மசாலாப் பொருட்களையும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி, உங்கள் எடையைக் குறைக்கலாம். உடல் எடையைக் குறைப்பதற்கு சிறந்த ஒரு உணவுப்பொருள் இலவங்கப்பட்டை. ஏனெனில், இலவங்கப்பட்டையானது உடலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலை நிறுத்துகிறது. மேலும் நீண்ட நேரத்துக்கு பசியுணர்வு தோன்றா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. குறிப்பாக கொழுப்பை விரைவாக செரிக்கச் செய்கிறது.


இஞ்சியானது ரத்தத்தை மிகவும் நன்றாக சுத்திகரிக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தில் உணவுப்பொருட்கள் தேங்கிக்கிடக்கா வண்ணம், எளிதில் செரிப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் கொழுப்புகள் தேங்காமல் விரைவில் செரிமானமடைந்து, உடல் எடையும் குறைகிறது. ஏலக்காயானது வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளைத் தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பை எரிக்கும் திறனைக் கூட்டுகிறது.


மஞ்சளுக்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்புத் திசுக்கள் உருவாவதைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைந்து, எடை கூடுவது தடுக்கப்படுகிறது. பிரேசில் நாட்டில் விளையும் ஒருவகை கருமை வண்ண பழம் தான் அகாய் பெர்ரி. நம் ஊரில் நாவற்பழம் போன்றது. பனை வகையைச் சேர்ந்தது. இதன் ஜூஸ் அல்லது இப்பழத்தை உலர வைத்து தயாரிக்கப்படும் பொடிக்கு உடல் எடையைக் குறைக்கும் வல்லமை உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


உடலில் கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கின்றன. உடலுக்கு சக்தியை தரும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் இப்பழத்தில் உள்ளன. ஒருவகை கண்டங்கத்திரி செடியின் இலை போன்றது நெட்டில் இலை. இவ்விலையில் உடலுக்கு சக்தி தரும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது ரத்தத்தை சுத்திகரித்து கொழுப்புகளை எரிக்க உதவுகின்றது.


வர மிளகாயில் கேப்சைசின் என்னும் பொருள் அடங்கியுள்ளது. இது கொழுப்பினை எரித்து, பசியுணர்வை அடக்கி வைக்கிறது. புருடியு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, காய்ந்த மிளகாயானது உடல் எடைக் குறைப்பில் மிக உதவுகிறது. உடலின் வளர்சிதைமாற்ற செயல்பாட்டை ஊக்குவித்து, உடலானது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை தூண்டி உணவுகளை நன்கு செரிப்பதற்கும், உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறவும் சீரகம் உதவுகிறது.


மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டவும் சீரகம் உதவுகிறது. நாம் வழக்கமாக சமையலில் பயன்படுத்தும் கருப்பு மிளகு. இந்த மிளகில் பிப்பரைன் என்னும் பொருள் உள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. நமது செரிமான சக்தியைத் தூண்டி, கொழுப்பை விரைவாக எரிப்பதற்கு உதவுகிறது. ஆளி விதைகள் நமது வயிறு நிறைந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தும். இதனால், நம்மால், அதிகம் சாப்பிட முடியாமல் போகும். இதன் காரணமாக உடல் எடை குறையும்.


கொத்தவரங்காயானது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. நமது உடலின் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது.இது பசியை அடக்கும் திறன் கொண்டது. கொழுப்பு உற்பத்தியாவதையும், கொழுப்பு தங்குவதையும் தடுக்கிறது. உடலின் எடையைக் குறைக்கும் தன்மையை கடுகு கொண்டுள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தினையும் நன்றாகத் தூண்டுகிறது. உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தினை அதிகரித்து, அதிக ஆற்றலை விடுவித்து, அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் திறன் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.


நம் அசைவ உணவில் அதிகமாக சேர்க்கப்படுவது சோம்பு. இந்த சோம்பு, உணவு செரிப்பதற்கு சிறப்பாக உதவுகிறது. மேலும் பசியுணர்வை சீராக்குவதற்கும், கல்லீரலை தூய்மைப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது. இதனை இசப்பகோல் (isabgol) தூள் என்றும் அழைப்பார்கள். இது மிகவும் பாதுகாப்பான உடல் எடை குறைப்பான் ஆகும்.


அதிலும் இது வயிறு நன்றாக நிறைந்துவிட்ட உணர்வினை மிக நீண்ட நேரத்திற்கு தரும். இந்த வகையில் மிகவும் முக்கியமானது செம்பருத்தி. இதன் பயன்பாடு அதிகம் உள்ளது. குறிப்பாக உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்களான குரோமியம், அஸ்கார்பிக் அமிலம், ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் ஆகியவை நிறைந்தது.

வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள்!!!



காய்கறிகளே நமது தினசரி உணவுகளில் மிகுதியான அளவில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டத்தையும் இயற்கையான முறையில் தருபவை. காய்கறிகள் எத்தகைய நற்பண்புகளை பெற்றிருந்தாலும் அதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளதை நாம் மறுக்க முடியாது. சில காய்கறிகள் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அதிக அளவு வாய்வு பிரச்சனையை உண்டாக்கி, கீழ் வயிற்றை உப்பச் செய்கிறது. இதனால் உணவிற்கு பின் வயிறு உப்பிய நிலையில் இருந்து, பின்னர் அடிக்கடி வாய்வை வெளிவரச் செய்கிறது.


சிலருக்கு இத்தகைய வாய்வு பிரச்சனை அதிகமாகும் போது அது வலியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை பல வடிவங்களில் கொண்டுள்ள காய்கறிகள் தேவையான அளவை விட அதிக அளவு வாய்வை உண்டாக்குகின்றன. இராஃபினோஸ், லாக்டோஸ், பிரக்டோஸ் மற்றும் சார்பிட்டால் ஆகியவை சர்க்கரையின் வடிவங்களாகும் மற்றும் இவை அதிக அளவு வாய்வை உண்டாக்கும் பொருட்கள். இராபினோஸ் என்ற சாக்கரை வகை அதிக அளவு உப்புசம் தந்து கீழ் வயிற்றில் வலியை உண்டாக்குகிறது. இது வாய்வுடன் தொடர்புடையதால் தான் இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. எப்படி இருந்தாலும் ஒருவருடைய உடல் வாகை கொண்டே இதை நாம் உறுதியாக கூற முடியும். ஒருவருக்கு ஒத்துப்போவது மற்றொருவருக்கு சரியாக வராது.


 நல்ல காய்கறி சேர்த்த உணவை உண்ட பின் இத்தகைய இடையூறுகள் வாய்வு தொல்லையால் ஏற்பட்டால் அந்த காய்கறிகளை உட்கொள்ளுவதை குறைத்துக்கொள்வது மிக அவசியமானதாகும். வெங்காயம், கேரட், பிரஸ்ஸல்ஸ், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி மற்றும் தானிய வகைகள் ஆகியவை வயிற்றில் வாய்வு உண்டாக்கும் சில காய்கறிகளாகும். இவைகளை நாம் ஒரேடியாக நிறுத்தி விட முடியாது. ஏனெனில் இவற்றில் சத்துக்களும் மிகுதியாக உள்ளன. ஆகையால் இவ்வகை காய்கறிகளை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்வதும் மற்றும் நீண்ட இடைவெளி விட்டு உண்பதும் நல்லது.


ஆண்களுக்கு அதிக அளவில் கேஸ் உண்டாக்கும் காய்கறிகள் - ஓரு கண்னோட்டம்

 நமது நாட்டில் எந்த இடமாயினும் வெங்காயம் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம். இது ஒரு அடிப்படை உணவில் கூட கலப்பதை தவிர்க்க முடியாது. வெங்காயங்களை சமைக்கும் பொது தவிர்க்கவும் முடியாது. ஆனால் அதை சிறிதளவு குறைத்துக் கொள்ள முடியும். இதைச் செய்வதன் மூலம் கேஸ் அடைவதிலிருந்தும் மற்றும் கேஸ் உருவாவதிலிருந்தும் தப்பிக்கலாம். வெங்காயத்தில் பல நற்குனங்கள் உள்ளதால், அதனை உணவில் தவிர்ப்பது சரியான செயல் அல்ல.

பிரஸ்ஸல்ஸ்

 முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி ஆகிய தாவர வகையை சார்ந்த பிரஸ்ஸல்ஸ் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்துகள் ஆகிய சத்து வகைகளை கொண்டுள்ளது. இவை சிக்கலான கார்போஹைட்ரேட் ஆகிய ஓலிகோ-சாக்கரைட்ஸ் எனப்படும் ஊட்டத்தை கொண்டவை. இவை அதிக அளவிலான காற்றை செரிமானத்தின் போது வயிற்றில் உருவாக்கும்.

சோளம்

 சோளமும் ஒரு வகை பிரதானமான உணவாகும். அதில் அதிக அளவு சத்துக்களும் மற்றும் சுக்ரோசும் உள்ளது. அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை இதில் இருப்பதால் உணவு செரிக்கப்படும் போது கேஸ் ஏற்படுகிறது. இந்த உணவில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் செரிமானத்தை கடினப்படுத்தி அதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் சாக்கரை கேஸை உருவாக்குகிறது.

ப்ரோக்கோலி

 முட்டைக்கோஸ் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ-கெமிக்கல்கள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாகும். இதில் பல நற்குணங்கள் இருந்தாலும், குடலில் இது உருவாக்கும் கேஸ் காரணமாக பலர் இதை தவிர்க்கின்றனர். ப்ரோக்கோலியில் உள்ள இராஃபினோஸ் என்ற சர்க்கரையை என்ஸைம்களால் செரிக்க வைக்க முடிவதில்லை. இதனால் கேஸ் உருவாகிறது.

முட்டைக்கோஸ்

 முட்டைக்கோஸ் உடலுக்கு மிகவும் சத்து மிகுந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவாகும். அதே நேரம், இந்த கார்போஹைட்ரேட்களில் ஆலிகோ-சாக்கரைட்ஸ் என்ற சிக்கலான பொருட்களும் உள்ளன. ஆலிகோ-சாக்கரைட்ஸ்களை செரிமானம் செய்யும் போதும் அவற்றிலிருந்து கேஸ் உருவாகிறது.

பீன்ஸ்

 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட பீன்ஸில், ஒவ்வொரு வகைகும் ஒரு வகையான பலன்கள் உள்ளன. பீன்ஸில் ஸ்டாசியோஸ் என்ற மூன்று சாக்கரை பொருள், இராஃபினோஸ் என்ற நான்கு சாக்கரை பொருள் மற்றும் வெர்பாஸ்கோஸ் என்ற ஐந்து சர்க்கரைப் பொருள் ஆகியவை இருப்பதால் செரிமாணம் கடினமாகி விடுகிறது. இதை சமாளிக்கும் என்ஸைம்கள் நம் உடலில் இல்லை.

பீட்ரூட்


 சென்சிட்டிவ்வான வயிற்று உறுப்புகள் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிட்டால், அதிகமான கேஸ் உருவாகி வயிற்று கோளாறுகள் ஏற்படும். அதனால் வயிறு உப்புசமடைதல், கீழ் வயிற்று வலி, கேஸ் பிரச்னை மற்றும் வயிற்று பிடிப்பு ஆகியவை ஏற்படும். பீட்ரூட்டில் உள்ள பாலிசாக்கரைட் என்னும் கார்போஹைட்ரேட் செரிப்பதற்கு கடினமானதாக இருப்பதால் அது கேஸை உருவாக்குகிறது.

இ‌ப்படியு‌ம் ‌சில ம‌னித‌ர்க‌ள் !!

உன‌க்காக உ‌யிரையே‌க் கொடு‌ப்பே‌ன் எ‌ன்று காத‌ல் வசன‌ம் பே‌சி, காத‌லி‌த்து, க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ண்டு ‌பிறகு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் அடிதடி ரகளை நட‌ப்பது இய‌ல்பான ‌விஷய‌ம். ஒரு வேளை, காத‌லி‌த்து க‌னி‌ந்துரு‌கி, இறு‌தி‌யி‌‌ல் ‌ஏதேனு‌ம் காரண‌த்தா‌ல் ஒ‌ன்று சேர முடியாம‌ல் போனா‌ல், காதலனோ, காத‌லியோ செ‌ய்யு‌ம் ‌விப‌ரீத செய‌ல்களை இ‌ங்கு ‌நினைவூ‌ட்ட ‌விரு‌ம்பு‌கிறோ‌ம்.


தான் கற்ற க‌ல்‌வியையு‌ம், பெற்ற அனுபவ‌த்தையு‌ம், பயன்படுத்தி, மற்றவர்களுக்கு நல்லது செய்வது‌ம் உ‌ண்டு, ‌சில‌ர் அதனை‌ப் பய‌ன்படு‌த்‌தி ‌தீமை செ‌ய்வது‌ம், பழிவா‌ங்குவது‌ம் உ‌ண்டு.


இ‌தி‌ல் இர‌ண்டா‌ம் ரக‌ம் ம‌னித‌ர்க‌ளிட‌ம் நா‌ம் எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌க்க வே‌ண்டியத‌ன் அவ‌சிய‌த்தை வ‌லியுறு‌த்துவது தா‌ன் இ‌ந்த க‌ட்டுரை‌யி‌ன் நோ‌க்க‌ம்.


காதல‌ர்களாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ந‌ண்ப‌ர்களாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ஒரு ‌சில ‌விஷய‌ங்களை த‌வி‌ர்‌ப்பது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். இது எ‌தி‌ர்மறையான ‌சி‌ந்தனையாக இரு‌ந்தாலு‌ம், நே‌ர்மறையாக ம‌ட்டுமே எ‌ல்லாமு‌ம், எ‌ல்லாரு‌ம் நட‌ப்ப‌தி‌ல்லை எ‌ன்பதை அடி‌ப்படையாக‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.


எ‌ந்த அ‌த்து‌மீற‌ல்களு‌‌ம் நட‌க்காம‌ல் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்வது‌ம், யா‌ரிடமு‌ம் சொ‌ல்ல‌க் கூடாத ‌சில ரக‌சிய‌ங்களை எ‌ப்போது‌ம் யா‌ரிடமு‌ம் சொ‌ல்லாம‌ல் இரு‌ப்பது‌ம்தா‌ன் முத‌ல் எ‌ச்ச‌ரி‌க்கையாகு‌ம்.



அதாவது காதல‌ர்களாக இரு‌க்கு‌ம்ப‌ட்ச‌த்‌தி‌ல், ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்வது எ‌ன்று இருவரு‌ம் மன‌ப்பூ‌ர்வமாக ஒ‌ப்பு‌க் கொ‌ண்டாலு‌ம், எ‌ந்த‌த் தவறான கா‌ரிய‌த்‌திலு‌ம் ஈடுபடாம‌ல் இரு‌ப்பது இருவரது வா‌ழ்‌க்கை‌க்கு‌ம் ந‌ல்லது.


ஏதோ ஒரு காரண‌த்தா‌ல் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ள இயலாம‌ல் போகு‌ம் போது, பெ‌ண்ணை, ஆ‌ண் ‌மிர‌ட்டுவது‌ம், ஆ‌ண் கெ‌ட்டவ‌ன் எ‌ன்று தெ‌ரி‌ந்தாலு‌ம், தவறு செ‌ய்து ‌வி‌ட்ட ஒரே காரண‌த்‌தி‌ற்காக அவனை‌க் க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டிய ‌சூ‌ழ்‌நிலையு‌ம் ஏ‌ற்படலா‌ம். இ‌தே‌க் காரண‌த்தை‌க் கொ‌ண்டு ஒரு ஆணை பெ‌ண் ‌பிர‌ச்‌சினை‌க்கு‌ள்ளா‌க்குவத‌ற்கு‌ம் வா‌ய்‌ப்புக‌ள் உ‌ண்டு.


ந‌ண்ப‌ர்களாக இரு‌ப்‌பினு‌ம், காதல‌ர்களாக இரு‌ப்‌பினு‌ம், த‌ன்னை‌ப் ப‌ற்‌றிய ஒரு ரக‌சிய‌த்தை, யா‌ரிடமு‌ம் சொ‌ல்ல‌க் கூடாத ஒரு ரக‌சிய‌த்தை தயவு செ‌ய்து சொ‌ல்ல வே‌ண்டா‌ம். உ‌ங்களு‌க்கு ம‌ட்டுமே‌த் தெ‌ரி‌ந்தா‌ல் தா‌ன் அது ரக‌சிய‌ம். இ‌ன்னு‌ம் ஒருவரு‌க்கு அது தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டாலு‌ம் அது செ‌ய்‌திதா‌ன். எனவே, ‌நீ‌ங்க‌ள் ரக‌சியமாக வை‌த்‌திரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்பு‌ம் ஒரு ‌விஷ‌ய‌த்தை முத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் ர‌க‌சியமாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது உ‌ங்க‌ள் கடமையா‌கிறது.


காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய ‌சில கால‌த்‌திலேயே ‌சில‌ர் புகை‌ப்பட‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்வது, காத‌ல் கடித‌ம் கொடு‌ப்பது போ‌ன்றவ‌ற்றை‌த் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். ந‌ண்ப‌ர்களாக இரு‌ப்‌பி‌ன் ந‌ண்ப‌‌ர்க‌ளி‌ன் கூ‌ட்ட‌த்‌துட‌ன் புகை‌ப்பட‌ம் எடு‌க்கலா‌ம், ஒரு ஆணு‌ம், பெ‌‌ண்ணு‌ம் த‌னியாக புகை‌ப்பட‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம், காதல‌ர்களாக இரு‌ப்‌பினு‌ம் இதனை‌த் த‌வி‌ர்‌ப்பது எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌‌ச்‌சினையை‌த் த‌வி‌ர்‌க்கு‌ம்.


காத‌ல் வசன‌ங்க‌ள் அட‌ங்‌கிய வா‌ழ்‌த்து அ‌ட்டைகளாக இரு‌‌ப்‌பி‌ன் வெறு‌ம் இ‌னிஷ‌ிய‌ல்களை ம‌ட்டு‌ம் போ‌ட்டு‌க் கொடு‌க்கலா‌ம். காத‌ல் கடித‌ங்க‌ள் த‌வி‌ர்‌க்க‌ப்படலா‌ம். அ‌ன்பை வெ‌ளி‌க்கா‌ட்ட ஆதார‌மி‌ல்லாத பல ப‌ரிசு‌ப் பொரு‌ட்க‌ள் உ‌ள்ளன. அவ‌ற்றை வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.


தா‌ங்க‌ள் பய‌ன்படு‌த்து‌ம் ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் முகவ‌ரி‌யி‌ன் கடவு‌ச் சொ‌ல்லை (பா‌ஸ்வே‌ர்‌ட்) ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்வது‌ம், வ‌ங்‌கி ஏடிஎ‌ம் கா‌ர்டி‌ன் கடவு எ‌ண்ணை ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்வது‌ம் கூட ‌பிர‌ச்‌சினை‌யி‌ல் முடிய‌க் கூடு‌ம்.


எனவே, காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கியது‌ம் இருவரு‌ம் ஒரு எ‌ல்லை‌க்கு‌ள் இரு‌ப்பது இருவரு‌க்குமே ந‌ல்லது. அது ஆணாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, பெ‌ண்ணாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி. ஒருவரை ஒருவ‌ர் ந‌ன்கு பு‌ரி‌ந்து கொ‌ண்ட ‌பி‌ன்ன‌ர்தா‌ன் காதல‌ர்களு‌க்கான அ‌ங்‌கீகார‌த்தை‌ வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்ப‌தி‌ல் தெ‌ளிவாக இரு‌ங்க‌ள்.


நா‌ம் எ‌த்தனையோ செ‌ய்‌திகளை ‌தினமு‌ம் நா‌ளித‌ழ்க‌ளிலு‌ம், இணைய தள‌ங்க‌ள் மூலமாகவு‌ம் படி‌க்‌கி‌ன்றோ‌ம். கே‌ட்‌கி‌ன்றோ‌ம். அதுபோ‌ன்ற அச‌ம்பா‌வித‌ங்க‌ள் ந‌ம் வா‌ழ்‌க்கை‌யிலு‌ம் நட‌க்காம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக‌த்தா‌ன் இ‌‌ந்த எ‌ச்ச‌ரி‌க்கை ப‌ட்டிய‌ல்.