Search This Blog

Friday 1 November 2013

விண்டோஸ் 8.1 அப்கிரேட் அவசியமா?

 

விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர்த்தக ரீதியாக வெளியாகியுள்ள நிலையில், புதிய இன்டர்பேஸ் கூடுதல் வசதிகளையும், சங்கடங்களையும் தரும் நிலையில், கம்ப்யூட்டர் பயனாளர்களில் பலர், நாம் விண்டோஸ் 8.1க்கு மாறத்தான் வேண்டுமா என எண்ணத் தொடங்கி உள்ளனர்.

1. நீங்கள் ஏற்கனவே, விண்டோஸ் 8 உள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், அது உங்களுக்குப் பிடித்ததாக இருந்தால், விண்டோஸ் 8.1க்கு அவசியம் மாறிக் கொள்ளுங்கள். இலவசமாகவே மைக்ரோசாப்ட் இதனைத் தருகிறது.

2. நீங்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகிறீர்களா? அது உங்களுக்கு சகல விதத்திலும் பயனுள்ளதாக, சிரமம் தராததாக உள்ளதா? அப்படியானால், புதியதாக ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கும் வரை இதனையே பயன்படுத்தவும். மேலும், உங்கள் விண்டோஸ் 7 உள்ள பெர்சனல் கம்ப்யூட்டரில் டச் ஸ்கிரீன் இருக்காது. விண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டங்கள், டச் ஸ்கிரீன் இல்லாமல் இயங்கினாலும், பல வசதிகள் உங்களுக்குக் கிடைக்காது. எனவே, விண்டோஸ் 7 உடன் உங்கள் பயணம் சில காலத்திற்குத் தொடரட்டும்.
 
3. விண்டோஸ் 8 சோதனை சிஸ்டம் பயன்படுத்தி, அதன் செயல்பாடுகள், உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் மாற்றங்கள் உங்களுக்குப் பிடிக்க வில்லையா? அதனால், புதிய கம்ப்யூட்டர் வாங்கும் முடிவைச் சிறிது காலம் தள்ளி வைத்திருக்கிறீர்களா? இந்த முடிவை ஒதுக்கித் தள்ளுங்கள். உடனே, விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் வசதிகளைப் பயன்படுத்த முயற்சிக்கவும். புதிய கம்ப்யூட்டர் இனி விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் தான் கிடைக்கும். எனவே, அதற்குப் பழக்கிக் கொள்ளுங்கள்.
Click Here

பத்து லட்சம் ஆண்டு டேட்டா பாதுகாக்கும் டிஸ்க்!



காந்த சக்தியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஹார்ட் டிஸ்க்குகள், அதிக பட்சம் பத்து ஆண்டு காலம் நல்லபடியாக இயங்கும். பல்லாண்டுகள் தகவல்களைச் சேர்த்துப் பாதுகாக்க விரும்பு பவர்கள், இதனாலேயே மேக்னடிக் டேப்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேவைக்குப் பதில் கொடுக்கும் வகையில், பத்து லட்சம் ஆண்டுகள் கூடப் பாதுகாப்பாக தகவல்களைப் பதிந்து வைக்கக் கூடிய டிஸ்க்குகளை நானோ தொழில் நுப்ட வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர்.

1956 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். நிறுவனம் முதன் முதலாக, காந்த சக்தியின் அடிப்படையில் இயங்கும் ஸ்டோரேஜ் டிஸ்க்கினை, வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தியது. IBM 305 RAMAC என அழைக்கப்பட்ட இந்த டிஸ்க், 24 அங்குல டிஸ்க்காக இருந்தது. 5 எம்பி டேட்டாவினை (அந்த காலத்தில் இது ரொம்ப அதிகம்) அதில் பதிந்து பாதுகாக்கலாம். இப்போது, 3.5 அங்குல அளவிலான டிஸ்க்குகளில் 1 டெரா பைட் அளவு கொள்ளும் ஹார்ட் டிஸ்க்குகள் எளிதாக, விலை மலிவாகக் கிடைக்கின்றன. மின் சக்தி பயன்பாடும் முன்னேறிய நிலையில் உள்ளது. இது நவீன தொழில் நுட்பத்தினால் சாத்தியப்பட்டது என்றாலும், எத்தனை ஆண்டுகள், இதில் பதியப்படும் தகவல்கள் சேதமடையாமல் இருக்கும் என்பதில், நாம் இன்னும் முன்னேற்றம் காண இயலவில்லை. அதிக பட்சம் பத்து ஆண்டுகள் என்ற கால எல்லையிலே தான் இருக்கிறோம்.

அப்படியானால், நம் கலாச்சாரம், சமுதாயக் கூறுகள் ஆகியவற்றை வெகு காலம் பாதுகாத்து வைக்க என்ன செய்திடலாம்? என்ற கேள்வி எழுந்தது. இதற்கான விடையாக, இப்போதைய நானோ தொழில் நுட்பத்தில் டிஸ்க் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Jeroen de Vries என்னும் வல்லுநர் தலைமையிலான குழுவினர், நெதர்லாந்தில் உள்ள ட்வெண்டி பல்கலைக் கழகத்தின் (University of Twente) சோதனைச் சாலையில் இதனை உருவாக்கியுள்ளனர். இந்த டிஸ்க்கில் பதியப்படும் தகவல்கள், பத்து லட்சம் ஆண்டுகள் மட்டுமின்றி, அதற்கும் மேலாகவும் பாதுகாத்து வைக்கும் என, அதன் மீது நடத்தப்பட்ட சோதனைகள் தெரிவித்துள்ளன.

இவர்களின் நிபுணத்துவம், டிஸ்க் உருவாக்குவதனை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளவில்லை. அநேக ஆண்டுகள் தொடர்கையில், ஒரு பொருள் நிலைத்து இருக்க வேண்டுமாயின், காலத்தின் அழிப்பு தன்மையை எதிர்த்து நிற்க என்ன வேண்டும் என ஆய்வு செய்து வழிகளைக் கண்டறிந்துள்ளனர். அறிவியலில் இதனை Arrhenius law என அழைப்பார்கள். அந்தச் சோதனையில் கிடைத்த முடிவுகளை, டிஸ்க் தயாரிப்பில் பயன்படுத்தி உள்ளனர்.

மிக மெல்லிய உலோகமான டங்க்ஸ்டன் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், இதனை உருக்க வேண்டும் என்றால் 3,422 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவை. எனவே, பாதுகாப்பானது என இதனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். டேட்டா, இதில் உள்ள வரிகளில் பதியப்படுகிறது. அதன் மேலாக பாதுகாப்பிற்கான ஒரு அடுக்கு அமைக்கப்படுகிறது. இதனை அமைக்க சிலிகான் நைட்ரைட் (Silicon nitride (Si3N4)) பயன்படுத்தப்படுகிறது. இந்த உலோகம் எந்த பாதிப்பிலும் சேதம் அடையாது. இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஸ்க்கில் டேட்டா எழுதப்பட்டு சோதனை நடத்தப்பட்டு, இறுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் இது குறித்து தகவல்கள் தேவைப்படுவோர் arxiv.org/abs/1310.2961என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லலாம்.

"ஹிட்' என்றால் என்ன?

இன்டர்நெட் குறித்து பேசுகையில் பலர் இந்த தளத்தின் ஹிட் எண்ணிக்கை என்ன? என்று கேட்கின்றனர். அல்லது சில தளங்களின் முகப்புப் பக்கத்தில் இத்தனை பேராக நீங்கள் இதனைப் பார்க்கிறீர்கள் என்று கணக்குக் காட்டப்படும். பலர் இதுதான் அந்த தளம் பெற்ற ஹிட்களின் எண்ணிக்கை என எண்ணுகின்றனர். இந்த ஹிட்” என்பது என்ன? அது எதனைக் குறிக்கிறது>? அதனை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? என்று பார்ப்போம்.

சரியாகச் சொல்வதென்றால் இந்த சொல் குறித்து பலரும் தவறாகவே கருத்து கொண்டுள்ளனர் என்று கூறலாம். பலரும் ஹிட் என்றால் ஓர் இணைய தளத்தை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று குறிப்பிடுவதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு முறை ஒருவர் ஓர் இணைய தளத்திற்குச் சென்று பார்த்தால் அதன் ஹிட்களின் எண்ணிக்கை யில் ஒன்று கூடும் என எண்ணுகிறார்கள். இது உண்மை அல்ல. சரியான கணிப்பும் அல்ல. “ஹிட்” என்பது ஒரு வெப் சர்வருக்கு அளிக்கப்படும் வேண்டுகோள் ஆகும்.


எடுத்துக் காட்டாக நீங்கள் தன்னுடைய இணைய முகப்புத் தளத்தில் ஆறு படங்களை உடையதாக ஓர் இணைய தளம் இருப்பதாகக் கொள்வோம். இந்த தளத்தைப் பெற உங்களுடைய பிரவுசர் இந்த ஆறு படங்களுக்கு ஒரு வேண்டுகோளை அனுப்பும். அத்துடன் அத்தளத்தின் எச்.டி.எம்.எல் க்காகவும் ஒரு வேண்டுகோளை அனுப்பும். எனவே இந்த வேண்டு கோள்கள் எல்லாம் சேர்ந்தால் மொத்தம் ஏழு “ஹிட்” கள் இந்த தளத்திற்கு அனுப்பப் படுகின்றன.

நீங்கள் கூகுள் தேடுதளத்தில் (அல்லது நீங்கள் விரும்பும் எந்த தேடு தளத்திலும்) உங்கள் தேடுதலை அனுப்பி அதற்கான முடிவுகள் உங்களுக்குத் தெரிவிக்கப் பட்டால் அவை ஒவ்வொன்றும் ஒரு ஹிட்” ஆகக் கருதப்படும். எனவே உங்கள் தேடுதல் சார்ந்து 423 தளங்களின் முகவரிகள் பட்டியலிடப்பட்டால் உங்களுக்கு 423 ஹிட்கள் திரும்ப வந்துள்ளன என்று பொருள். இதுதான் “ஹிட்” என்பதின் உண்மையான பொருள்.

நேரம் பொன்னானது!

சிலர் இணைய தளத்தில் நேரம் போவது தெரியாமல் மூழ்கி விடுவார்கள். சிலர் ஒவ்வொரு முறையும் மணிபார்க்க கடிகாரத்தை தேடுவார்கள். இப்படிப்பட்ட மணி அறியா மகான்களுக்கு உதவும் இணையதளம் இது.

இந்த இணைய தளத்திற்கு சென்றால் டிஜிட்டல் கடிகாரம் நம்மை வரவேற்கும். அந்த கடிகாரத்தில் நாம் விரும்பும் நேரத்தை தேர்வு செய்தால் போதும். அந்த நேரம் வந்தவுடன் அலாரம் சத்தமிடும். இதனால் சரியான நேரத்தில் எழுந்து கொள்ளலாம்.

நேரத்தை துல்லியமாக கணக்கிடும் `ஸ்டாப் வாட்ச்' கடிகாரமும் உண்டு. அதனைப் பயன்படுத்தி நாம் வேலைகளை எத்தனை நிமிடத்தில் முடிக்கிறோம் என்பதையும் கணக்கிடலாம்.

`காலம் பொன் போன்றது' என்ற கருத்துப்படி வாழ் பவர்களுக்கு உபயோகமான இணையதளம்.

http://onlineclock.net/

அமெரிக்காவின் ரகசியத்தை அம்பலப்படுத்திய ஸ்னோடெனுக்கு இணையதளத்தில் வேலை!

அமெரிக்கா மற்ற நாடுகளை உளவுப் பார்க்கும் ரகசியத்தை கசிய விட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் எட்வர்ட் ஸ்னோடென்.


உயிருக்கு பயந்து அவர் மற்ற நாடுகளில் புகலிடம் தேடி அலைந்து இறுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் தற்காலிக அனுமதி பெற்று அந்நாட்டின் உள்ளே நுழைந்தார்.

தற்போது மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் ஸ்னோடெனுக்கு இணையதள நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளதாக அவரது வக்கீல் அறிவித்துள்ளார்.

மேலும், இன்று முதல் பெரிய ரஷ்யன் நிறுவனம் ஒன்றில் ஸ்னோடென் வேலை செய்ய இருப்பதாகவும், பிரதானமாக உள்ள ரஷ்யன் வலைத்தளம் ஒன்றினை மேம்படுத்தும் பணியில் அவர் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பாதுகாப்புக் காரணம் கருதி அவர் நிறுவனத்தின் பெயரை வெளியிடவில்லை. இத்தகவலை அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பேஸ்புக்கிற்கு இணையாகக் கருதப்படும் கோன்டக்டே நிறுவனத்தின் தலைவரான பவெல் டுரோவ் கடந்த ஆகஸ்ட் மாதமே ஸ்னோடெனுக்கு வேலை தருவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

அதனால் இந்த நிறுவனமே தற்போது ஸ்னோடெனை பணியில் அமர்த்தியிருக்கக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்த நிறுவனத்தின் பத்திரிகைத் தொடர்பாளரான ஜார்ஜி லோபுஷ்கின் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை

ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு!

இன்றைய உலகில் பேஸ்புக் என்பது மனிதனின் அன்றாட தேவையாகவே மாறி வருகிறது எனலாம், அந்த அளவுக்கு உலகத்தையே கவர்ந்து வருகிறது.
பெரும்பாலோனோர் இணையத்துக்கு வருவதே பேஸ்புக்கை பயன்படுத்த தான் என்ற அளவுக்கு பரந்து விரிந்துள்ளது.

நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் பல பேஸ்புக்கில் உள்ளது, இந்த நிலையில் நமது அக்கௌன்ட்டை யாரேனும் ஹாக் செய்து விட்டால்? உங்களுக்கு பெரிய அதிர்ச்சியான செய்தி.

அது ஹாக்கர் உங்கள் Account மூலம் நிறைய விசயங்களை செய்து விட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்பப் பெறலாம்.

முதலில் உங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்து பேஸ்புக்கை ஓபன் செய்யவும். ஒரு முறை உங்கள் தகவல்களை கொடுத்து லாக்-இன் செய்ய முயற்சி செய்யவும்.

லாக்-இன் ஆகாவிட்டால் இந்த இணைப்புக்கு சென்று "My Account Is Compromised" என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு வரவும்.

அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் ஒன்றை தரவும். இதில் முதல் பகுதியை பயன்படுத்தி மீட்க தான் பெரும்பாலும் வாய்ப்பு அதிகம்.
Email -sign in செய்ய பயன்படுத்தும் மின்னஞ்சல் Phone - நீங்கள் பேஸ்புக்கில் கொடுத்துள்ள போன் நம்பர் Facebook username: உங்கள் Profile பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் User Name உங்களுக்கு தெரியாவிட்டால் நண்பர்களிடம் சொல்லி கேட்கலாம். அவர் உங்கள் Profile-ஐ பார்த்தால் தெரியும்.

நண்பர் பெயர் கொடுத்து தேடுவது கொஞ்சம் கடினமான தேடல். இப்போது நீங்கள் கொடுத்த தகவல்படி உங்கள் பேஸ்புக் கணக்கு காட்டப்படும்.

உங்கள் இப்போதைய பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லலாம், அல்லது பழைய பாஸ்வேர்ட் கொடுத்து Password Reset செய்ய முயற்சி செய்யலாம்.
பழைய பாஸ்வேர்ட் என்றால் உங்கள் ஈமெயில் கணக்கை நீங்கள் ஓபன் செய்யும் நிலையில் இருக்க வேண்டும். அதில் உங்களுக்கு ஒரு code வரும், அதை நீங்கள் கொடுத்தால் உங்கள் பேஸ்புக் கணக்கை ஓபன் செய்ய முடியும்.
இதில் மீட்க முடியவில்லை என்றால் I can't identify my account என்ற பக்கத்தில் நீங்கள் தகவல்களை கொடுக்க வேண்டும். இதில் உங்கள் தகவல்களின் படி பேஸ்புக் உங்களை விரைவில் தொடர்பு கொள்ளும்.

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பால் பொருட்கள்!

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியில் பால் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனால் அவர்களுக்கு கால்சியம், புரோட்டீன் மற்றும் கொழுப்புக்கள் போன்றவை கிடைக்கும்.

கொழுப்புக்கள் என்றதும் பயப்பட வேண்டாம். ஏனெனில் இதில் உள்ள கொழுப்புக்கள் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

வைட்டமின்களில் பி மற்றும் பி12 ஆகியவையும் நிறைந்துள்ளன.
அதுவும் குறைந்த கொழுப்புள்ள பாலைத் தான் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

குறிப்பாக பால் பொருட்களைக் கொடுக்கும் போது, அது சுத்தமான பால் பொருட்களாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் அதுவே அவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
அதே சமயம் அளவுக்கு அதிகமாகவும் பால் பொருட்களைக் கொடுக்கக்கூடாது.

குறைந்த கொழுப்புள்ள பால்

பால் கொடுக்கும் போது குறைந்த கொழுப்புள்ள பாலைக் கொடுக்க வேண்டும்.

சீஸ்

பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். பொதுவாக சீஸ் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

ஆகவே இதனை உணவுகளில் சேர்த்துக் கொடுக்கலாம். ஆனால் அதிகப்படியான உப்பு உள்ள சீஸைக் கொடுக்க வேண்டாம்.

வெண்ணெய்

வெண்ணெயில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

ஆகவே கடைகளில் விற்கப்படும் வெண்ணெயை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே செய்து கொடுப்பது சிறந்தது.

தயிர்

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் தயிர்.

மேலும் தயிரில் கால்சியம் மற்றும் ப்ரோ-பயோடிக் பாக்டீரியா உள்ளது. ஆகவே இதனைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

நெய்

நெய் பிடிக்காதோர் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் குழந்தைகளுக்கு நெயின் சுவை பிடிக்கும்.

ஆகவே அவர்களது உணவில், அவ்வப்போது நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிலும் வீட்டில் செய்த நெய் என்றால் இன்னும் சிறந்தது.

லஸ்ஸி

தயிரால் செய்யப்படும் ஒரு உணவுப் பொருள் தான் லஸ்ஸி.
ஆகவே தயிரை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு தயிரை லஸ்ஸியாக செய்து கொடுக்கலாம்.

ஐஸ்க்ரீம்

கடைகளில் விற்கப்படும் ஐஸ்க்ரீமில் சுவைக்காக நிறைய செயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.
ஆகவே குழந்தைகளுக்கு கடைகளில் விற்கப்படும் ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுக்காமல், வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொடுங்கள்.

நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினைக் கொண்ட கமெரா அறிமுகம்!

Ion எனும் நிறுவனமானது Air Pro 3 எனும் நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினைக் கொண்ட கமெராவினை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது.


நீரினுள் 49 அடிகள் ஆழம் வரை கொண்டு சென்று பயன்படுத்தக்கூடியதாக காணப்படும் இக்கமெராவானது 60 fps வேகத்தில் வீடியோ பதிவு செய்யக்கூடியதாக உள்ளது. 


மேலும் இதில் 12 Megapixel Sony IMX117 CMOS சென்சார் காணப்படுகின்றது.
வயர்லெஸ் தொழில்நுட்பமான Wi-Fi இனையும் கொண்டுள்ள இக்கமெரா மூலம் 160 டிகிரியில் காட்சிப்பதிவு செய்ய முடியும்.


இதன் விலையானது 350 டாலர்களாகும்.


இணைய எலும்புக்கூடுகளை உருவாக்க!

text-mirror 

ஒரு இணையதளத்தை எந்த விதமான வடிவமைப்பு அலங்காரங்களும் இல்லாமல் அதன் வரி வடிவிலான தகவல்களை மட்டும் பார்க்க விரும்பினால்,டெக்ஸ்ட்மிரர் இணையதளம் அவ்வாறு அந்த தளத்தை மாற்றி தருகிறது.


எந்த இணையதளத்தை மாற்ற வேன்டுமோ அதை இந்த தளத்தில் சமர்பித்தால், அதில் உள்ள இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நீக்கிவிட்டு வெறுமையாக தருகிறது.அப்போது வெறும் வரி வடிவிலான தகவல்கள் மட்டுமே இருக்கும்.மற்றபடி, புகைப்படங்களோ,விளம்பரங்களோ வேறு எந்த அம்சமும் இருக்காது.
எதோ கம்ப்யூட்டர் புரோகிராமிங் எழுதப்பட்டது போல அந்த பக்கம் காட்சி அளிக்கும்.சரி, இப்படி இணையதளங்களை அவற்றின் வடிவமைப்பு மற்றும் எச்டிஎமெல் சார்ந்த அம்சங்களை நீக்கி விட்டு வெறும் எலும்புக்கூடு போல பார்க்க வேண்டியதன் அவசியம் என்ன?


பல பிரவுசர்களில் வரி வடிவில் மட்டும் சேமிப்பதற்கான வசதி இருக்கிற‌தே என்று கேட்கலாம். உண்மைதான் பிரவுசர்கள் மூலமே ஒரு தளத்தின் வரி வடிவத்தை மட்டும் சேமிக்கலாம் தான்,ஆனால் டெக்ஸ்ட்மிரர் பயன்படுத்தும் போது தளத்தின் மூல வடிவமைப்பு அப்படியே பாதிக்காமல் இருக்கிறது.அதாவது இடது புறம் இருந்த தகவல்கள் அங்கேயே மாறாமல் இருக்கும் . இது ஒரு அணுகூலம்.


மற்றபடி அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட பேஸ்புக் போன்ற பக்கங்களை இப்படி வடி வடிவில் பார்க்கலாம்.


வரி வடிவம் என்பதால் குறிப்பிட்ட இணையதளம் துரிதமாக வந்து நிற்க வாய்ப்புள்ளது.


எது எப்படியோ, இணைய கட்டுரைகளை விளம்ப தொல்லை இல்லாமல் படிக்க விடும்பினால் அதற்கு இன்ஸ்டபேப்பர் போன்ற அருமையான தளங்கள் இருக்கின்றன.


இணையதள முகவ‌ரி; http://textmirror.net/

சரியான பரிசுப்பொருளை தேர்வு செய்வது எப்படி?


Wishpicker 

என்ன பொருள் வாங்குவது என்பது? பரிசுப்பொருள் வாங்க முற்ப‌டும் போது எல்லோருக்கும் ஏற்படகூடிய குழப்பம் தான். வாங்கித்தரும் பரிசுப்பொருள் வழக்கமானதாக இல்லாமல் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என் நினைப்போம்.அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்! அது மட்டுமா?

பரிசளிப்பது என்பது வெறும் சம்பரதாயம் மட்டுமா என்ன? அது அன்பின் வெளிப்பட்டும் அல்லவா? அதனால் தான், பரிசுப்பொருள் தேர்வு செய்யும் போது பலரும் அதற்காக மெனக்கெட விரும்புகின்றனர்.பரிசுப்பொருளை  பிரித்து பார்க்கும் போதே அதை பெறுபவரின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கின்றனர்.

இது போன்ற நேரங்களில் நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் விசாரித்து,கடை கடையாக ஏறி இறங்க வேண்டியிருக்கும்.இந்த சுமையை குறைத்து பரிசுப்பொருளுக்கான தேடலுக்கு விடையாகும் வகையில் விஷ்பிக்கர் தளம் உருவாக்கப்ப‌ட்டுள்ளது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல விஷ்பிக்கர் பரிசுப்பொருள் தேடலில் எதிர்படக்கூடிய இரண்டு கேள்விகளுக்கும் விடையாக அமைகிறது.அதாவது என்ன பொருள் வாங்குவது? எங்கே வாங்குவது? ஆகிய இரண்டு கேள்விகளுக்கும் இந்த தளம் தீர்வாகிறது.

பொருத்தமான பரிசுப்பொருளை தேர்வு செய்ய விரும்புகிற‌வர்களுக்கு அழகான அருமையான வாய்ப்புகளை இந்த தளம் முன் வைக்கிறது.இதற்காகவே முகப்பு பக்கத்தில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் பரிசுப்பொருள் யாருக்கு, அவரது வயது வரம்பு என்ன? பரிசளிப்பதற்கான நிகழ்வு என்ன? போன்ற  விவரங்களை இந்த கட்டங்களில் குறிப்பிட வேண்டும். உடனே இந்த தளம் பொருத்தமான பரிசுப்பொருட்களை பட்டியலிடுகிறது.அந்த பட்டியலில் இருந்து விருப்பமானதை தேர்வு செய்யலாம்.

முதல் கட்டத்தில் பரிசு அப்பாவுக்கா,அம்மாவுக்கா, மனைவிக்கா அல்லது நண்பருக்கா என குறிப்பிடலாம்.இரண்டாவது கட்டத்தில் அவர்களின் வயதை குறிப்பிட்டு விட்டு மூன்றாவது இடத்தில் பரிசளிப்பதற்கான காரணம் என்ன என குறிப்பிடலாம்.

பரிசுப்பொருட்கள் அனுபவமாகவோ அல்லது பொருட்களாக இருக்க வேண்டுமா என்றும் தீர்மானித்துகொள்ளலாம். இந்த தேர்வில் பரிசுக்கூப்பன்களும் உள்ளன.

பரிசளிக்கும் சூழலுக்கேற்ப விதமவிதமான பரிசுகளை பட்டியில் இருந்து சுலபமாக தேர்வு செய்தவுடன் இந்த தளத்தி இருந்தே வாங்கி கொள்ளும் வசதியும் இருக்கிறது. எனவே எங்கு வாங்குவது என்ற கவலையும் இல்லை.

இணையம் முழுவதும் கிடைக்கும் பொருட்களில் இருந்து சிற‌ந்தவற்றை தேர்வு செய்து பட்டியலிட்டு பரிந்துரைக்கிறது இந்த தளம்.

ஒவ்வொரு பிரிவிலும் பட்டியலிடப்ப‌ட்டுள்ள பரிசுகளை பார்த்தும் சரியானதை தேர்வு செய்து கொள்ளலாம்.அழகான புகைப்படங்களோடு இந்த பரிசுகளை அலசிப்பார்ப்பதே ஆனந்தமாக இருக்கலாம்.

பரிசுப்பொருள் தேடலுக்கான ஓரிடச்சேவை என சொல்லக்கூடிய இந்த தளத்தை தில்லியை சேர்ந்த அபூர்வ் பன்சல் என்னும் இளைஞர உருவாக்கியுள்ளார். தனது காதலிக்க பரிசளிக்க விரும்பிய போது பொருத்தமான பரிசை தேர்வு செய்ய வழி இல்லாமல் திண்டாடியிருக்கிறார். இதற்கான தீர்வை தானே உருவாக்க தீர்மானித்து நண்பருடன் சேர்ந்து விஷ்பிக்கர் தளத்தை உருவாக்கினார்.

இது தொடர்பாக தனது அனுபவத்தை யுவர்ஸ்டோரி தளத்தில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் ஒரு சுவாரஸ்யமான விஷ‌யமும் இருக்கிறது.அதாவது காதலிக்கு பரிசாக நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு அழைத்து சென்றிருக்கிறார்.ஆனால் இதனிடையே வேலையை விட்டுவிட்டு விஷ்பிக்கர் இணையநிறுவனத்தை துவக்கியதால் விருந்துக்கான பில்லை காதலி தான் கொடுக்க வேண்டியிருந்தது.

இணையதள முகவ‌ரி;http://www.wishpicker.com/

என் முன்னிலையில் பள்ளம் தோண்டுங்க::தங்கம் நிச்சயம் கிடைக்கும்”

“புதையல் இருப்பது உறுதி. ஆனால் புதையல் எடுப்பதற்காக தோண்டும் இடத்திற்கு என்னை அனுமதிக்காமல் அதனை கண்டு பிடிக்க முடியாது அதிலும் ராணுவத்தால் தோண்டும் பணி நடத்த வேண்டும். அத்துடன் மீடியாக்கள் சம்பவ இடத்திற்கு அனுமதிக்கப் பட வேண்டும்.” சாமியார் சோபன் சர்க்கார் மறுபடியும் கூறியுள்ளார்.



nov 1 - gold temple



உ.பி. மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பழங்கால கோட்டையின் இடிபாடுகளுக்கு அடியில் 1,000 டன் தங்கம் புதைத்து வைத்திருப்பதாக, சோபன் சர்க்கார் என்ற பிரபல சாமியார் கனவு கண்டார். அவர் கொடுத்த தகவலை தொடர்ந்து, தங்கப்புதையலை எடுப்பதற்காக அந்த பகுதியில் தோண்டும் பணி, கடந்த 18-ந்தேதி தொடங்கியது. மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில் இந்த பணி நடைபெற்று வந்தது.


மத்திய தொல் பொருள் ஆய்வு துறை சார்பில், கடந்த 12 நாட்களாக தொடர்ந்து தோண்டியும், புதையல் எதுவும் சிக்கவில்லை. பூமிக்கு அடியில் புதைந்திருந்த செங்கல் சுவரின் சிதைந்த பகுதிகள் மட்டுமே காணப்பட்டன. தங்கப்புதையல் வேட்டை தோல்வியில் முடிந்ததால், அந்த பகுதியில் தோண்டும் பணியை தொல் பொருள் ஆய்வுத்துறை திடீரென்று நிறுத்திவிட்டது. சாமியார் சோபன் சர்க்கார் கூறியபடி, புதையல் எதுவும் இல்லாததால், தோண்டும் பணி கைவிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் கனவு கண்ட சாமியார் சோபன் சர்க்கார் பேசுகையில், புதையல் எடுப்பதற்காக தோண்டும் இடத்திற்கு என்னை அனுமதிக்காமல் அதனை கண்டு பிடிக்க முடியாது என்று கூறியுள்ளார். தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் புதையல் இருப்பது தெரியவந்த பின்னர் உண்மையை அறிவார்கள். புதையல் இருப்பது உறுதி. ராணுவத்தால் தோண்டும் பணி நடத்த வேண்டும். ஏன் மீடியாக்கள் சம்பவ இடத்திற்கு அனுமதிக்கப்படவில்லை என்று சாக்கார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அங்கு ந

படேல் பாஜக-வின் சொத்தும இல்லை..காங்கிரஸின் எதிரியும் அல்ல!.

இப்போது சர்தார் வல்லபபாய் படேல் தலை உருளுகிறது.”படேல் பிரதமராக பதவியேற்றிருந்தால், நேருவைவிட சிறப்பாக செயல்பட்டிருப்பார்’ என்று மோடி பேசியிருப்பது இன்றைய அரசியல் சூட்டில் புதிதாக மிளிர்கிறதே தவிர, இது 1950 களிலேயே, அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், தொழிலதிபர் ஜே.ஆர்.டி. டாடா உள்பட பலர் கூறிய கருத்துதான். அதேயே இப்போது நரேந்திர மோடியும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றைய அரசியல் மேடையில் அது மதிப்பூட்டல் பெறுகிறது.


nov 1 - patel


இந்த வார்த்தைகளை நரேந்திர மோடி வேறு ஏதேனும் ஒரு மேடையில் கூறியிருந்தால் அதை அவர் அரசியலாக்கியதாக குறை கூறலாம். ஆனால் சர்தார் வல்லபபாய் படேல் குறித்த அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் விழாவில், அவரது ஆளுமையைப் பாராட்டிப் பேசும்வேளையில், அவர் இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.


அதற்காக காங்கிரஸ்காரர்கள், “படேல் எங்களுக்குத்தான் சொந்தம், பாஜக களவாடப் பார்க்கிறது’ என்று பேசுவது அர்த்தமற்றது. ஒருநாளும் படேல், மதவாத அரசியலுக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டதில்லை. இந்து-முஸ்லிம் பிரச்னையிலும் பாகிஸ்தான் பிரிவினையின்போதும் விஷயங்களை வெளிப்படையாக பேசியவர். அதனாலேயே அவர் இந்து மதத்தினருக்கு ஆதரவாக இருந்தார் என்று முத்திரை குத்துவது பேதைமை.
பிரிட்டிஷ் அரசில் பஞ்சாப், வங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். இந்த இரு மாநிலங்களையும் அப்படியே பாகிஸ்தானுக்கு கொடுப்பது இயலாது என்று வாதிட்டவர்களில் முக்கியமானவர் படேல். இரு மாநிலங்களிலும் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை தனியாகப் பிரித்துவிட்டு, முஸ்லிம்கள் அதிகமாக இருந்த பகுதிகளை பாகிஸ்தானுடன் இணைக்கச் செய்தவர். இதனாலேயே அவர் இந்துக்களுக்கு ஆதரவானவர் என்ற பேச்சு அப்போது எழுந்தது.


பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய இந்துக்கள் தில்லியில் முஸ்லிம்களின் கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் புகுந்து ஆக்கிரமித்தபோது, “அங்கிருந்து இந்துக்கள் வெளியேற வேண்டும், அதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறி காந்தி உண்ணாவிரதம் இருந்தார். காந்தியின் கட்டளையை நிறைவேற்றியவர் படேல்.


படேலும் நேருவும் ஒரே அமைச்சரவையில் செயல்படுவது இயலாது என்ற நிலைமை உருவானபோது, படேல் பதவியிலிருந்து விலகக்கூடாது என்பதில் மகாத்மா காந்தி அதிக கவனமாக இருந்தார். காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய லூயி ஃபிஷர் குறிப்பிடுகிறார்:


“” ………இருவரில் எவரையும் தியாகம் செய்ய முடியாது என்று இறுதியிலே காந்தி தீர்மானித்தார். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதும் அவசியம் என்று நிச்சயித்தார். இருவரில் எவர் விலகினாலும் அரசாங்கம் பலவீனமடைந்துவிடும். எனவே ஆங்கிலத்தில் நேருவுக்கு ஒரு சீட்டு எழுதி அனுப்பினார். “நீங்களும் படேலும் எப்படியாவது ஒற்றுமையாகவே இருக்க வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார். ஜனவரி 30-ஆம் தேதி மாலை நாலு மணிக்கு பிர்லா மாளிகையில் காந்தியைக் காண படேல் வந்தார். காந்தியின் வாயிலிருந்து இதே செய்தியைத்தான் அவரும் கேட்டுக்கொண்டார்….”


காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சில நிமிடங்களுக்கு முன்புவரை உடன் இருந்தவர் படேல். உள்துறை பொறுப்பு வகித்த படேல், காந்தியைக் காக்கத் தவறினார் என்று அப்போது பரவலாக எழுந்த குற்றச்சாட்டு அவரை மீளாத்துயரில் தள்ளியது.


அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, படேல் இருவருக்கும் இடையே பிணக்கு இருந்தது வெளிப்படையானது. அது ஒன்றும் உட்பூசல் அல்ல. இருப்பினும் அது மதச்சார்பு, மதச்சார்பின்மை என்ற பாகுபாட்டால் ஏற்பட்ட பிணக்கு அல்ல.


“அமைச்சர்களின் ஒப்புதல் இல்லாமல் நேரு தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கின்றார்’ என்பதுதான் படேலுக்கு நேருவிடம் பிணக்கு ஏற்படக் காரணமாக இருந்தது. தான் மட்டுமே காங்கிரஸ் என்று நேரு நினைப்பது தவறு என்று படேல் வலியுறுத்தினார். “எல்லாவற்றையும் பேசிவிட்டு முடிவெடுக்க நான் எதற்கு’ என்பது நேருவின் எதிர்வாதமாக இருந்தது.
அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு படேல் கொண்ட பிணக்கை யோசித்துப் பார்த்தால், நேருவின் அத்தகைய எண்ணம்தான் – படேல் விமர்சித்ததைப்போல, தான் மட்டுமே காங்கிரஸ் என்று செயல்பட்ட நேருவின் செய்கைதான் – இன்றைய காங்கிரஸின் வாரிசு அரசியலுக்கு வித்திட்டது என்பதை எவரும் உணர முடியும்.


இன்று நரேந்திர மோடி தொட்டதொல்லாம் காவி நிறமாகிவிடுகிறது என்பதற்காக, படேல் பாஜக-வின் சொத்து ஆகிவிட மாட்டார். அவர் காங்கிரஸின் எதிரியும் அல்ல.அவரது பிணக்கு நேருவுடன் மட்டுமே.

இந்திய விஞ்ஞானியின் புது கண்டுபிடிப்பு!

India 
 
 
விண்ணில் ‘இறந்த’ நட்சத்திரங்களால் உருவாகும் கருங்குழிகள் பற்றி நீடிக்கும் மர்மத்தை உடைக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் பெங்களூர் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அண்டவெளியில் பூமி உட்பட பல கோள்கள் உள்ளன. பல லட்சம் சூரியன்கள், நிலாக்கள், நட்சத்திரங்கள் என்று பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருக்கின்றன. இந்த நட்சத்திரங்கள் எல்லாம் அதன் அணுசக்தியை இழக்கும் போது ‘இறந்த’ நட்சத்திரங்களாகி விடுகின்றன.


விண்ணின் பால்வெளி மண்டலத்தில் இப்படி சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் பரவி கிடக்கும் நிலையில், இந்த ‘இறந்த’ நட்சத்திரங்கள் எல்லாம் கருங்குழியாகி விடுகின்றன. இந்த கருங்குழி, பல சூரியன்களின் ஒளியை தன்னுள் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. ஆல்பர்ட் ஈன்ஸ்டின் புவிஈர்ப்பு கோட்பாட்டுக்கும் இந்த கருங்குழிகளுக்கும் ஒரு வகையில் இயற்பியல் ரீதியாக ஒரு ஒற்றுமை இருக்கிறது என்று இந்தியா உட்பட பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.


கருங்குழி பற்றி முதன் முதலில் உண்மைகளை கண்டுபிடித்து சொன்னவரே, நம் நாட்டு தமிழ் விஞ்ஞானி சந்திரசேகர் தான். அதற்காகவே அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. இறந்த நட்சத்திரம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, கருங்குழியாகவோ ஆகி விடும் என்று முதன் முதலில் கண்டுபிடித்தவர் இவர். இதனால் இந்த கண்டுபிடிப்புக்கு சந்திரசேகர் லிமிட் என்றும் பெயர் வைக்கப்பட்டது. இந்த நிலையில், கருங்குழி பற்றிய மர்மம் நீடித்து வருகிறது.


இந்த குழிகள் சிறியது தானா, அதன் ஆழம் என்ன, அதன் ஈர்ப்பு சக்தி என்ன? ஒலி, ஒளியை தன்னுள் விழுங்கும் போது நடப்பது என்ன? பல சூரியன்கள் ஒளியை கொண்டது என்பது சரியா? என்பது பற்றி எல்லாம் மர்மம் நீடிக்கிறது. சாதாரண கண்களுக்கு இந்த கருங்குழி தெரியாது. டெலஸ்கோப் மூலமும் கண்டுபிடிப்பது சிரமம் தான். நுணுக்கமாக ஆராய்ந்தால் பால்வெளியில் ஏதோ கரும்புள்ளி போல தான் தெரியுமாம். பெங்களூர் நகரில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ள பானிப்ரத்தா முகோபாத்யை இந்த கருங்குழி ஆய்வில் புதிய உண்மையை கண்டுபிடித்துள்ளார்.


இரண்டு ஆண்டாக மேற்கொண்ட ஆய்வில், அண்டவெளியில் உருவாகும் கருங்குழி தன்னை சுற்றிய ஒலி, ஒளி மற்றும் நட்சத்திர துகள்கள் எல்லாவற்றையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் சக்தி படைத்தது. இது மட்டுமின்றி, இதை சுற்றிய சுழற்சி, நட்சத்திர எரி துகள்கள் போன்ற பொருட்கள் ஆகியவற்றை வைத்து குழியின் ஆழம், சுழற்சி வேகத்தை கணக்கிடலாம். மேலும், குழியை சுற்றிய சுழற்சி வலை மற்றும் பொருட்கள் தனியாக இயங்குவதில்லை.


ஒன்றுக்கொன்று பிணைந்தது என்பது தான் பானிப்ரத்தாவின் கண்டுபிடிப்பு. இந்த கண்டுபிடிப்பு மூலம், கருங்குழி பற்றிய ஆராய்ச்சிகளில் புதிய தெளிவு கிடைத்துள்ளதாக அமெரிக்க, பிரிட்டன் இயற்பியல் விஞ்ஞானிகள் பாராட்டியுள்ளனர். ‘நட்சத்திரங்கள் எப்படி நொறுங்கி அழிகின்றன, கருங்குழியாகின்றன என்பதற்கு இந்த ஆராய்ச்சி உதவும்’ என்று விஞ்ஞானி பானிப்ரத்தாவுக்கு உதவியாக இருந்த ஆராய்ச்சி மாணவி இந்திராணி பானர்ஜி கூறினார்.

 
அதென்ன கருங்குழி?

* பூமி, சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்தது தான் இந்த அண்டவெளி.

* விண்ணில் பரந்து கிடக்கும் பால்வெளியில் உள்ளது தான் சூரியன், நிலா, நட்சத்திரங்கள்.

*இந்த நட்சத்திரங்கள் தன்னுள் உள்ள அணு எரிசக்தியை இழக்கும் போது ‘இறந்ததாக’ கருதப்படுகின்றன.

* அப்படி இறந்த பின் அவை என்னவாகின்றன என்பது மர்மமாக இருந்தது.

* அவை, கருங்குழியாகிவிடுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

* கருங்குழி ஈர்ப்பு சக்தி கொண்டது. தன்னை சுற்றிய பொருட்களை ஈர்த்துக்கொள்ளும்.

* சுழலும் அணு துகள்கள், பொருட்கள் வேகம் பற்றிய ஆய்வு தொடர்ந்து மர்மமானது.

* கருங்குழி மர்ம முடிச்சுகள் தொடர்ந்து அவிழ்ந்த வண்ணம் உள்ளது.

' பெருக்கத்து வேண்டும் பணிவு ' (நீதிக்கதை)



மோகன் நன்கு படிக்கும் மாணவன்.

அவன் வகுப்பில் அனைத்து தேர்வுகளிலும் First Rank வாங்கி வந்தான்.அதனால் அவனுக்கு சற்று கர்வம் இருந்து வந்தது.
சக மாணவர்களிடம் பழகும்போதும் கர்வத்துடனேயே பழகி வந்தான்.

அரையாண்டு தேர்வு வர இருந்தது...
மோகனின் பள்ளி ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் 'எல்லோரும் நன்கு படித்து ......மோகனைப்போல முதல் மதிப்பெண் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

அதனால் மோகனுக்கு தலைக்கனம் அதிகமாகியது.

கர்வமும் ...தலைக்கனமும் சேர அவன் தேர்வுகளுக்கு சரியாக படிக்கவில்லை.

தேர்வுகள் முடிந்து மதிப்பெண்கள் வந்தபோது ....அவனது ரேங்க் 20 ஐ தாண்டியது.

ஆசிரியர் ...அவனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது.....இந்த தடவை முதல் ரேங்க் எடுத்த சீனு சொன்னான்.
'சார்...நீங்கள் எப்போதும் மோகனைப் புகழ்வதால் ...அவனைப்போல வரவேண்டும் என நாங்கள் கஷ்டப்பட்டு படித்தோம்.ஆனால் அந்தப் புகழ்ச்சியால் கர்வம் அதிகமாக
மோகன் கவனம் படிப்பில் செல்லவில்லை' என்றான்.

சீனு கூறியதில் இருந்த உண்மையை உண்ர்ந்த ஆசிரியர் ...'மோகன் நாம் எந்த நிலையிலும் கர்வம் கொள்ளக்கூடாது...புகழ்ச்சி ஒருவனை மேலும் முன்னேறவிடாமல் தடுக்கும்...'என்றார் .மேலும் 'நான் உன்னை புகழ்ந்ததை உன்னை மேலும் ஊக்கிவிக்கத்தான் என்பதை உணர்ந்து கொள்' ' என்றார்.

ஆசிரியர் கூறியதை மோகனும் உணர்ந்து கொண்டான்.

நாமும் எப்போதும் நமக்கு ஈடு யாருமில்லையென்று கர்வமோ அகம்பாவமோ கொள்ளக்கூடாது.நம்மை விட வல்லவர்கள் எல்லா துறையிலும் உண்டு என்று எண்ணவேண்டும்.

மழைக்காலத்தில் வெள்ளிப் பொருட்களை பாதுகாக்க!

கௌரவப் பொருட்களாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளிகளின் மேல் ஆசை கொள்ளாதவர்களே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் தான் வசதிகேற்ப தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். முக்கியமாக சிலர் வெள்ளி பொருட்களை அன்றாடம் பயன்படுத்தக் கூட செய்கிறார்கள். தகதகவென்று மின்னும் வெள்ளி பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் மீது தீராத காதல் உண்டா? அதனால் வீட்டில் பல வெள்ளி பொருட்களை வாங்கி குவித்திருக்கிறீர்களா? அப்படியானால் மழைக்காலத்தில் ஈரப்பதத்தினால் அவைகள் பாதிப்புக்குள்ளாகும் என்ற கவலை இருக்கிறதா? முதலில் அதை விட்டொழியுங்கள்.

விலை உயர்ந்த பொருட்களுக்கு எந்த ஒரு தேய்மானமும் வந்துவிடாது. மழைக்காலத்தில் எப்போதும் இருப்பதை விட காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், வெள்ளி பொருட்கள் ஜொலிப்பு நீங்கி, பாதுகாப்பதற்கு சிரமமாக இருக்கும். ஆனால் உரிய நடவடிக்கை மேற்கொண்டால், மழைக்காலத்தில் கூட வெள்ளி பொருட்களை மின்னச் செய்யலாம். பிரஷாந்த் சரவ்கி என்ற வல்லுநர், வெள்ளி பொருட்களின் மீது ஏற்படும் பழுதை தடுக்க சில டிப்ஸ்களை அளித்துள்ளார். மேலும் மழைக்காலத்தில் வெள்ளி பொருட்களை பாதுகாக்கவும் வழிமுறைகளை கூறியுள்ளார்.
 
 
கறை படியாமல் பாதுகாப்பது:


காற்றில் உள்ள சல்ஃபர் வெள்ளிப் பொருட்களோடு கலக்கும் போது, அந்த பொருட்கள் மீது கண்டிப்பாக கறை படியும். ஆகவே வெள்ளிப் பொருட்களை பத்திரமாக உள்ளே வைத்து பாதுகாக்காமல், அன்றாட தேவைகளுக்காக உபயோகப்படுத்த ஆரம்பித்தால், அதன் மேல் சல்ஃபர் சல்பேட் கண்டிப்பாக பதிந்திருக்கும். வெள்ளியில் அலங்கார பொருட்கள் இருந்தால், அதனை ஒரு மெல்லிய துணியை கொண்டு மறக்காமல் தினமும் துடைத்து எடுத்தால், விரைவில் கறை படிவதை தடுக்கும்.

வெள்ளி பொருட்களை துடைப்பது:

அதிக கறை படிந்த வெள்ளி பொருட்களை நுரை, தெளிப்பான்கள் அல்லது திரவ பேஸ்ட் வடிவில் உள்ள வெள்ளி பாலிஷ்கள் ஆகிவைகளை பயன்படுத்தி துடைக்கலாம். சில்வர் டிப்பும் நல்ல பலனை கொடுக்கும். அடர்த்தியான் கறை படிந்த வெள்ளி பாத்திரங்களை சிறிதளவு வாஷிங் சோடாவில் தண்ணீர் கலந்து கழுவலாம்.

துளைகள் கொண்ட வெள்ளிப் பொருட்களை துணிகளை கொண்டு துடைக்கக்கூடாது. அப்படி துடைத்தால் நுனியில் துணி மாட்டி கொண்டு கிழிந்துவிடும். எனவே மெதுவான ஒரு பிரஷை பயன்படுத்தியும் வெள்ளிப் பொருட்களை துடைக்கலாம். வெள்ளி பொருட்களை கழுவ டிஷ் வாஷர்யும் பயன்படுத்தலாம். ஆனால் அப்படி செய்யும் போது, அதிக கவனம் தேவை. மேலும் மற்ற ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களோடு சேர்த்து, இதனை டிஷ் வாஷரில் போட கூடாது.

குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்!


 1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு