Search This Blog

Sunday 3 November 2013

உங்கள் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழைய!













கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள் நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.



கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.

இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம்.

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

மென் பொருளை தரவிறக்கம செய்ய download

ஆன்லைனில் கன்னிதன்மையை விற்ற இளம்பெண் – ரஷ்யா அதிர்ச்சி!

ரஷ்யாவை சேர்ந்த சாதுனிகா என்ற பெண், பொருட்களை ஏலம் விடும் வலை தளம் ஒன்றில் ‘புதியது, முதல் முறையாக விற்பனைக்கானது’ என்ற பிரிவின் கீழ் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனவே நான் எனது கன்னித்தன்மையை விற்பனை செய்ய தயாராக உள்ளேன்.



nov 3 - lady Russian-girl-


அதிக ஏலத்தில் எடுப்பவர்களுக்கு கன்னித் தன்மையை தர தயாராக இருக்கிறேன். இதற்கான மருத்துவ ஆவணங்களையும் பணத்தை நேரில் கொடுக்கும் போது காட்டுவேன்.ஏலத்தில் எடுப்பவர் என்னை பிரத்மோஸ்னியா சதுக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நாளை என்னை சந்திக்கலாம். அப்போது எனது கன்னித்தன்மையை பரிசோதித்த மருத்துவ சான்றிதழ்களையும் கொண்டு வருகிறேன்.


ஏலத்தில் வெற்றி பெற்றவர் யாராயினும் ரொக்க பணமாகவே கொண்டு வந்து தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதை பார்த்த பலர் ஆன்லைன் ஏலத்தில் பங்கேற்றனர். பின்னர் எவ்கெனி வோல்னோவ் என்பவர் ரூ.18 லட்சத்துக்கு, இளம்பெண்ணின் கன்னித் தன்மையை ஏலம் எடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கன்னித்தன்மை ஏலம் விடுவதை சட்டரீதியாக தடுத்து நிறுத்த வழியில்லை. இது ஒரு நிர்வாக ரீதியான பிரச்னை. இதை குற்றமாக கருத முடியாது. மேலும் அவர்களை கண்டுபிடிக்கவும் இயலாது” என்றனர்.

Russian girl sells her virginity online for Rs. 18 lakhs


************************************


A Russian girl sold herself for Rs. 18.4 lakhs on the internet. However, the 18-year old did not reveal her identity. The ad displays her name as Shatuniya and tries to lure prospective buyers with telling them that she is `New and Not Used’.

சான்றோர் சிந்தனைகள்!

வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

விளைவுகளை வைத்துதான் செய்லகளின் சிறப்பை மதிப்பிட முடியும்.




நல்ல நட்பு உன் உள்ளத்தையும் உடலையும் வளர்க்கும்.நட்பைத் தேடுவதில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.கிடைத்த நட்பை பொக்கிஷம் போல் பாதுகாத்துக்கொள்.

உனது அறிவு ஆற்றல் உனக்கு மட்டும் சொந்தம் அல்ல .பகிர்ந்து கொள்ளக்கூடியது.சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் அதனைப் பொதுவுடமையாக்கிவிட்டால்,தனிமனித தேவைகளும்,ஆடம்பர வாழ்க்கையும் குறைந்து போகும்.

---சாக்ரட்டீஸ்.


நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை.

---கிளார்க்

ஆர்வமில்லாத இடத்தில் புதுமைக்ள பிறப்பதில்லை

---டுஸ்டாவ் க்ராங்ஸ்மேன்.

எல்லா மனிதர்களையும் நம்பி விடுவது ஆபத்து;எவரையும் நம்பாமல் இருப்பதும் ஆபத்து.

---ஆபிரகாம் லிங்கன்.

மூன்று செயல்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை;
சென்றதை மறப்பது
நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
வருங்காலத்தைப் பற்றி சிந்துப்பது.
 
---இங்கர்சால்.


இருபது ஆண்டு வளர்ச்சி
இருபது ஆண்டு மலர்ச்சி
இருபதாண்டு மகிழ்ச்சி.
 
---கம்பர்

முதுமை வயதைப் பொறுத்தல்ல; உணர்ச்சியைப் பொறுத்தது

---நபிகள் நாயகம்

நல்ல உடைகளுக்கு எல்லைக் கத்வுகளும் திறக்கும்.

---தாமஸ் புல்லர்

எத்தனை புயல்களை நீ சமாளித்துக் கடந்தாய் என்பதைப் பற்றி உலகத்துக்குக் கவலையில்லை.கப்பலைப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தாயா என்பது பற்றியே அதற்குக் கவலை.

------வில்லியம் மீக்லி.

அறிவுள்ள மனிதர்களோடு உரையாடு.அறிவில்லாத மனிதர்களோடு உறவாடு.அனால் பண்பில்லாதவரைக் கண்டால் ஒதுங்கிவிடு.

----------லயட்கரின்

விழிப்புடன் செயலபட்டு வாழ்ந்து வருகிற எந்த ஒரு சமுதாயத்தையும் நாட்டையும் எந்த எதிரியாலும் அடக்கிவிடமுடியாது.

-----------லாலா லசபதிராய்

இண்டெர்நெட்டை கண்டுபிடித்தது யார்?

200px-Algoretestifying 

இண்டெர்நெட் ஒரு தாயில்லா குழந்தை. அதாவது இண்டெர்நெட் எந்த ஒரு தனிநபராலோ , அல்லது எந்த ஒரு குழுவாலோ கண்டுபடிக்கப்படவில்லை. இண்டெர்நெட் கூட்டு முயற்சியின் பலன். ஆனால் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தது நான் தான் என்று அமெரிக்க அரசியல் தலைவர் ஒருவர் மார் தட்டி கொண்டது பற்றி உங்களுக்கு தெரியுமா? இதற்காக அவர் இணையத்தில் அவப்போது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது உங்களுக்கு தெரியுமா? இந்த இரண்டுமே தவறானது என்பது தெரியுமா?


இவற்றின் பின்னே உள்ள உண்மையை தெரிந்து கொள்வதன் மூலம் கொஞ்சம் இணைய வரலாற்றை தெரிந்து கொள்வோம்.


இண்டெர்நெட்டை கண்டுபிடித்ததாக சொந்தம் கொண்டாடியதாக சொல்லப்படும் அந்த அமெரிக்க தலைவர் முன்னாள் துணை அதிபர் அல்கோர். யாருமே கண்டுபிடித்திராத இண்டெர்நெட்டை நான் தான் கண்டுபிடித்தேன் என்று சொன்னால் கைகொட்டி சிரிக்க மாட்டார்களா? அதனால் தான் அல்கோர் இப்படி கூறியது  தொடர்பாக இணையத்தில் நிறைய நகைச்சுவை துணுக்குகள் உண்டு.


ஆனால் அல்கோர் அப்படி ஒருபோதும் கூறியது இல்லை . இண்டெர்நெட் உருவாக்கத்தில் தனது பங்களிப்பு பற்றி அவர் தெரிவித்த கருத்துக்களே இப்படி தவறுதலாக மேற்கோள் காட்டப்பட்டு மீண்டும் மீண்டும் தவறாக சுட்டிக்காட்டப்படுகிறது.


இந்த தகவலை ஆண்ட்ரூ பிலம் தான் எழுதியுள்ள , புதிய புத்தகமான Tubes: A Journey to the Center of the Internet -ல் தெளிவு படுத்தியுள்ளார்.


அல்கோரை இண்டெர்நெட்டை கண்டுபிடிக்கவில்லை என்றாலும், தற்போது நான் பயன்படுத்தும் வகையில் இண்டெர்நெட் உருவானதில் அவருக்கு முக்கிய பங்குண்டு. 1991ல், அதாவது வைய விரிவு வலை உருவாக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு , இண்டெர்நெட்டை அதன் கல்வி நிறுவன வேர்களில் இருந்து விடுவித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான முக்கிய சட்ட மசோதாவை செனட் உறுப்பினராக இருந்த அல்கோர் கொண்டு வந்தார். இந்த மசோதா கோர் பில் என்றே குறிப்பிடப்பட்டது. இந்த மசோதா பற்றி அல்கோர் கூறிய கருத்துக்கள் தான் தவறான மேற்கோளின் விளைவாக , இண்டெர்நெட்டை கண்டுபிடித்ததாக கூறப்பட்டு விட்டது.


இதை தான் ஆண்ட்ரு பிலம் தனது புத்தகத்தில் தெளிவாக்கியுள்ளார்.



51KAE1XsOwL._SY344_PJlook-inside-v2,TopRight,1,0_SH20_BO1,204,203,200_


ஆனால் உண்மையிலேயே அல்கோருக்கு இணையம் உருவாகிய விதத்தில் முக்கிய பங்குண்டு என்பதை வின்செண்ட் பெர்பே அங்கீகரித்துள்ளார். செர்ப் வேறு யாருமல்ல இண்டெர்நெட்டின் தந்தை என்று போற்றப்படுபவர். இண்டெர்நெட்டின் அடைப்படை கட்டுமானத்தை உருவாக்கியதற்காக இப்படி பாராட்டப்படுபவர் செர்ப்.” இண்டெர்நெட்டின் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு அதன் வளர்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உதவிய முதல் அரசியல் தலைவர்” என்று அல்கோரை செர்ப பாராட்டியுள்ளார். எங்களுக்கு தெரிந்த வரை வேறு எந்த அரசியல் தலைவரும் இணைய்த்தின் வளர்ச்சிக்கு இந்த அளவு பங்காற்றியதில்லை என்றும் அல்கோர் பற்றி அவர் கூறியுள்ளார்.


இண்டெர்நெட் வளர்ச்சிக்கும் ஆதரவு தெரிவித்ததோடு அது அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட வழி வகுத்ததாகவும் அல்கோர் பர்றி அவர் கூறியுள்ளார். செர்ப் பாராட்டுரையை இங்கே விரிவாக படிக்கலாம்.;
நிற்க ஸ்னோப்ஸ்.காம் என்று ஒரு இணையதளம் இருக்கிறது. இணையத்தில் உலாவுhttp://web.eecs.umich.edu/~fessler/misc/funny/gore,net.txtம் கட்டுகதைகளுக்கு பின்னே உள்ள உண்மைய விளக்கும் தளம் இது. பரவலாக உண்மை என்று கருதப்படும் இணைய பொய்கள் எப்படி உருவானது என தெளிவுபடுத்தி அதன் பின்னே உள்ள உண்மையையும் விளக்கும் தளம் இது. அல்கோர் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தாக சொல்லப்படும் தகவல் குறித்தும் விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. அது இங்கே:http://www.snopes.com/quotes/internet.asp


ஆக, அல்கோர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற தலைவராக மறக்கப்பட்டாலும், இணைய வரலாற்றில் அவருக்கு  முக்கிய இடம் உண்டு. பார்க்க அல்கோரும் இண்ட்நெர்நெட்டும்:  (http://en.wikipedia.org/wiki/Al_Gore_and_information_technology) . அல்கோர் பற்றி மற்றொரு தகவல், இணையத்தின் ஆற்றலை குறிக்கும் தகவல் நெடுஞ்சாலை பதத்தை உருவாக்கியவர் அவர் தான்.