Search This Blog

Saturday 30 November 2013

அடிக்கடி ஏப்பம் வந்து மானத்தை வாங்குதா? இத ட்ரை பண்ணுங்க...


உணவு சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் ஏப்பம் வருவது இயற்கை தான். இத்தகைய ஏப்பமானது உணவால் வயிறு நிறைந்துவிட்டாலோ அல்லது பசி ஏற்படும் போதோ வரும். குறிப்பாக உடலில் காற்றின் அளவு அதிகம...ாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.

ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, ஏப்பம் வந்தால் ஒருவித கெட்ட துர்நாற்றமும் வீசும். இப்படி அடிக்கடி ஏப்பம் விட்டால், யாரும் அருகில் கூட வர மாட்டார்கள். ஆகவே பலர் ஏப்பத்தால், சங்கடத்திற்கு உள்ளாவார்கள்.

மேலும் அடிக்கடி ஏப்பம் வந்தால், நமக்கே எரிச்சல் ஏற்படுவதோடு, உடலும் சோர்ந்து விடும். இருப்பினும் இத்தகைய தொடர் ஏப்பத்திற்கு பல்வேறு இயற்கை நிவாரணிகள் உள்ளன. எனவே ஏப்பம் வரும் போது கீழ் கூறியவற்றை முயற்சித்தால், நிச்சயம் ஏப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

சரி, அந்த இயற்கை நிவாரணிகள் என்னவென்று பார்ப்போமா!!!

அடிக்கடி ஏப்பம் விட்டு மானம் போகுதா? இத ட்ரை பண்ணுங்க...

குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால், ஏப்பத்தில் இருந்து விடுபடலாம்.

சோடா

அமிலத்தன்மை உள்ள பானங்களான சோடா போன்றவற்றை ஒரு சிப் குடித்தாலும், அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கலாம்.

புதினா

அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பப் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.

ப்ளாக் டீ

ப்ளாக் டீ கூட ஏப்பத்திற்கு நல்ல நிவாரணியாக விளக்கும். அதற்கு ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடியுங்கள்.

சோம்பு

சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

சீமைச்சாமந்தி டீ

 
டீயிலேயே ஏப்பத்தை கட்டுப்படுத்துவதில் சீமைச்சாமந்தி டீ தான் பெஸ்ட். எனவே அடிக்கடி ஏப்பம் வந்தால், சீமைச்சாமந்தி டீயை குடியுங்கள்.

செலரி

செலரியை சிறிது வாயில் போட்டு மென்றால், ஏப்பம் தொல்லையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஏலக்காய் டீ

ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும்.

இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும்.

குளிர்ந்த பால்

ஒரு கப் குளிர்ந்த பாலை மெதுவாக குடித்து வந்தாலும், ஏப்பம் வருவதை தடுக்கலாம்.

கிராம்பு

ஒரு துண்டு கிராம்பை வாயில் போட்டு மென்றால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும்.

கோதுமை பிரட்

ஒரு துண்டு கோதுமை பிரட் சாப்பிட்டால், அது ஏப்ப பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.

எலுமிச்சை ஜூஸ்


எதுவும் முடியவில்லையா, ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

தயிர்

இல்லாவிட்டால், சாப்பிடும் போது ஒரு கப் தயிரை சாப்பிடுங்கள், நல்ல மாற்றம் தெரியும்.

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்


 இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.


இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.


 இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.


வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

 தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.

சீரகம் – 1 ஸ்பூன்

 சோம்பு – 1/2 ஸ்பூன்

 சின்ன வெங்காயம் – 3

கறிவேப்பிலை – 2 இணுக்கு

 கொத்தமல்லலி – சிறிதளவு


 நெல்லி வற்றல் – 10 கிராம்

 வெட்டிவேர் – 5 கிராம்

 இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

வெள்ளை மீசை பறவை!



படத்திலுள்ள, இந்த இன்கா டெர்ன்ஸ் எனும் பறவைகள் வளரும் போது, கூடவே நீண்ட வெள்ளை மீசையும் வளருகிறது. பெரு மற்றும் சிலி நாடுகளில் இவை அதிகம் காணப்படுகிறது.

ஸ்டர்னிடி குடும்பத்தை சேர்ந்த இப்பறவைகள், நீர் பறவை வகையை சேர்ந்தது. பார்க்க நம்ம ஊர் காக்கையை போல இருந்தாலும், கருப்பாக இல்லாமல் சாம்பல் நிறத்தில் காணப் படுகிறது. இதன் அலகுகள், ஆரஞ்சு கலந்த சிவப்பில் இருக்கும். தலைப்பகுதிக்கு, கீழ் இருபுறமும் வெள்ளை மீசை இருக்கும் ஒரே பறவை இனம் இதுதான். இதன் கால்களும், பாதமும் மருதாணி வைத்ததை போன்று, கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

பாறைகளுக்கு நடுவிலும், மரப்பொந்துகளிலும் முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும். ஒரு முறைக்கு, ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். இம்முட்டைகளை இப்பறவை கள், நான்கு வாரங்கள் அடைகாக்கும். இந்த அரிய வகை பறவை உலகளவில், மிக குறைந்த எண்ணிக்கையில், உள்ளதால், அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

கோபம் கோபம் கோபம்!

மூன்று எழுத்திலே மனிதனின் வாழ்கை உள்ளது ! ஆம் நம்மை நிர்ணிப்பது பல,

அவற்றில் சில முன்றே எழுத்து உதாரணமாக மனம் மானம் கல்வி காதல் .இதில் மிக முக்கியமானது மனம் அதன் வழி வருவது கோபம். ஆம். நான் எனக்கு கோவத்தை பற்றி தெரிந்ததை உங்களிடம் பகிர விரும்புகிறேன் .

சரி நாம் முதலில் ஒரு உதாரணம் காண்போம் ஒரு மாணவி அன்று ஸ்கூலில் காலையில் extra class இருக்குது என்று சீக்கிரம் செல்ல வேண்டும் என்று அதற்கு முன்தினம் கூறுகிறாள் . அவர்களும் சரி என்கிறார்கள் .

அடுத்த நாள் காலை அவள் லேட்டாக எழுகிறாள் வீட்டிலுள்ள அனைவரையும்  திட்டுகிறாள். அம்மாவிடம் "எவ்ளோ நேரமா தான் சமைக்கிற" என்று கத்துகிறாள் தங்கையிடம் சீக்ரம் டிரஸ் iron பண்ணுடி" என்கிறாள் . தந்தை இடம் எதுவும் சொல்ல சொனால் அவளுக்கு திட்டு தான் என்பது தெரியும் . இவ்ளோ கத்திவிட்டு பள்ளிக்கு செல்கிறாள் அங்கே சென்றால் ஆசிரியர் வரவில்லை . நிதானமாக யோசித்தால் இதில் அவள் மேல் உள்ள தவறு அவளுக்கு புர்யும் .

புரிந்து என்ன பயன் அவள் அப்போதே கட்டு படுத்தி இருக்க வேண்டும் . ம் இப்போது யோசித்து பயன் இல்லை இது போல் தான் நாமும் நம் கோபத்தை பல இடங்களில் கட்டுப்படுத்தாமல் இருகின்றோம் இதனால் எவ்ளோ பிரச்சனைகள் நாம் சண்டை இடவரிடம் திரும்பிய் சென்று முகம் கொடுத்து பேச இயலுமா நம்மால்.

முடியாது அல்லவே சரி இந்த கோவத்தை கட்டுபடுத்துவது எப்படி?

எல்லாருக்கும் தெரிந்தவைகள் கோவம் வரும் இடத்தை விடு வெளியில் செல்வது

நீர் குடிப்பது

Numbers தலைகீழாக எண்ணுவது இன்னும் பல

வேற என்ன செய்யலாம் என்றால் அந்த இடத்திலேயே நமக்கு பிடித்த படலை பாடி கொண்டல் கோவம் குறையும்

இல்லையேல் தினமும் யோகா செய்யுங்கள்

இல்லையேல் கோவம் வருவது போல் இருந்தால் உடனே சிரித்து விடுங்கள்.

சருமத்தை பளபளக்க வைக்கும் சில அற்புத எண்ணெய்கள்!!!


அழகான மற்றும் பளபளப்பான தோலை பெற வேண்டும் என்றால் தோலை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். உங்கள் தோலை பளபளப்பாக வைக்க செய்ய வேண்டியவற்றில் ஒன்றாக அதற்கு மிகவும் தேவையான எண்ணெய் சத்துக்களை அளிக்க வேண்டும். மிகவும் தேவையான எண்ணெய்கள் என்று வரும் போது, அவை சென்ட் பாட்டில்களில் விற்கப்படும் தாவரச் சாறுகளை குறிப்பிடுவதில்லை. இந்த எண்ணெய்களுக்கு உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கக் கூடிய சிறந்த குணங்கள் உள்ளன. இவை வலி நிவாரணிகளாகவும் மற்றும் சக்தியை வழங்குபவையாகவும் கூட செயல்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் உங்கள் தோலையும் பளபளக்கச் செய்கின்றன.

மூப்படைதல், ஹார்மோன் சமனிலையற்ற தன்மைகள் மற்றும் பிற காரணங்களால் நமது தோல் பகுதி பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. இந்த எண்ணெய்கள் பிரச்னைகளை சமாளித்து, தோலை முறையாக பராமரிக்கின்றன. எண்ணெய் கொண்டு தோலை பராமரிப்பது மிகவும் சிறந்த வழிமுறையாகவும் மற்றும் இது அரோமா தெரபியின் ஒரு பகுதியாக இருந்து உங்கள் தோலின் அடிப்பகுதி வரையிலும் சென்று, உள்ளிருந்தே வேலை செய்யும். நீங்கள் இந்த எண்ணெய்களை தொடர்ச்சியாக பயன்படுத்தி குறிப்பிடத்தக்க பிரச்சனைகளிலிருந்து உங்கள் தோலை குணப்படுத்த முடியும்.

எண்ணெயை உங்கள் தோலின் மேல் தடவும் போது அதன் தரம், உருவாக்கம், நீட்சித்தன்மை போன்றவை உங்கள் மனதிற்கு சந்தேகத்தை உருவாக்கும், இந்த எண்ணெய்களை குறைவான அளவே பயன்படுத்தினால் கூட உங்கள் தோல் எளிதில் கிரகித்துக் கொள்ளும். இது உங்கள் தோல் பகுதியின் துளைகளை அடைத்துக் கொள்ளும் என்ற சந்தேகத்தை முழுமையாக நீக்கி விடும். இங்கே உங்களுடைய தோல் பகுதியை பளபளக்க வைக்கும் சில முக்கியமான எண்ணெய்களைப் பற்றி கொடுத்துள்ளோம். மேற்கொண்டு படித்து, மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

பாதாம் எண்ணெய்

 பொதுவாகவே தோல் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் பாதம் எண்ணெய் பாதாம் கொட்டையை காய வைத்து அதிலிருந்து எடுக்கப்படுகிறது. பாதம் எண்ணெயில் உயர்வான ஈரப்பதத்தை ஏற்படுத்தும் தன்மைகளும் மற்றும் தோலுக்கான சத்துக்களும் உள்ளன. தோலினால் எளிதில் கிரகித்துக் கொள்ளப்பட்டு, அதன் மூலமாக பளபளப்பை தோன்றச் செய்வதாக பாதம் எண்ணெய் உள்ளது. இது தோல் அரிப்பையும், வறட்சியையும் சரி செய்கிறது.

ஆர்கன் எண்ணெய் (Argan oil)

எண்ணெய் கொண்டு தோலை பராமரிக்கும் வேளைகளில் ஆர்கன் எண்ணெய் மிகச்சிறந்த நிவாரணியாக உள்ளது. உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளை நீக்கும் தனித்தன்மையான குணத்தை கொண்டதாக ஆர்கன் எண்ணெய் உள்ளது. வலியில் உள்ள சருமத்தை குணப்படுத்தவும் மற்றும் கறைகளை நீக்கவும் இது உதவுகிறது. இது மட்டுமல்லாமல், ஆர்கன் எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள் கிருமிகளை அழிப்பவையாகவும் உள்ளன.

பபாஸ்சு எண்ணெய் (Babassu oil)

பிரேசிலின் பபாஸ்சு பனையிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் தோலை பளபளக்க வைக்கும் எண்ணற்ற குணங்கள் உள்ளன. இயற்கையாக தோலை ஈரப்பதமாக வைக்கவும் மற்றும் தோலை அரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது. மேலும், இந்த எண்ணெயை தலைமுடி பராமரிப்பிற்கும் பயன்படுத்தலாம்.

ஆமணக்கு எண்ணெய்/விளக்கெண்ணெய்

 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ள ஆமணக்கு எண்ணெயை சிறிதளவு தோலில் தடவினாலே போதும், எளிதில் கிரகித்துக் கொள்ளும். ஈரப்பத்தத்தை ஏற்படுத்தும் பொருளாகவும் மற்றும் தோலின் ஈரப்பதத்தை நிலைநிறுத்தவும் இந்த எண்ணெய் உதவுகிறது. இந்த எண்ணெயும் தலைமுடி பராமரிப்பிற்கான எண்ணெய்களில் ஒன்றாக உள்ளது.

தேங்காய் எண்ணெய்

 தோல் பராமரிப்பிற்காக மிகவும் பொதுவாகவே பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் ஒன்றாக தேங்காய் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் தோல் மற்றும் தலைமுடி பராமரிப்புக்கான இடுபொருட்கள் நெடுங்காலமாகவே உள்ளன. இது தலைக்குள் நன்றாக ஊடுருவி சென்று தலைமுடியின் செழித்து வளரச் செய்கிறது. தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்ட தோல் மென்மையாகவும் மற்றும் பஞ்சு போலவும் இருக்கும்.

ஜோஜோபா எண்ணெய் (Jojoba oil)

எண்ணெய் வழியாக தோலை பராமரிக்கும் போது மறக்கக் கூடாத விஷயமாக ஜோஜோபா எண்ணெய் உள்ளது. இது ஒரு திரவ மெழுகாக உள்ளது. ஜோஜோபா எண்ணெயில் சில வலி எதிர்ப்பு பொருட்களும் மற்றும் தோலுக்குள் ஆழமாக பரவும் தன்மையும் உள்ளது. இந்த எண்ணெய்க்கு தோலை பளபளப்பாக்கும் தன்மையும் உள்ளது.

வேப்ப எண்ணெய்

 பாக்டீரியா எதிர் தன்மைகளுக்காக அறியப்படும் வேப்ப எண்ணெயை மருந்தாகவும், தோல் பராமரிப்பிற்கும் பரவலாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆயுர்வேத சிகிச்சையில் முதன்மையான இடத்தைப் பெற்றதாகவும் மற்றும் நெடுங்காலமாகவே தோல் பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுவதாகவும் வேப்ப எண்ணெய் உள்ளது. சொரியாஸிஸ், எக்ஸீமா, அரிப்பு போன்ற பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இது உள்ளது.

ஆலிவ் எண்ணெய்

 தோலின் ஈரப்பதம் குறைவதை தடுக்கவும் மற்றும் ஈரப்பதத்தை ஏற்படுத்துவதில் திறன் மிக்க பொருளாகவும் ஆலிவ் எண்ணெய் உள்ளது. இது தோலை மென்மையான, மிருதுவான மற்றும் பளபளப்பாக மாற்றும் எண்ணெயாக உள்ளது. இந்த எண்ணெயை பயன்படுத்தினால் உங்களுடைய வயது சற்றே குறைந்து காணப்படுவீர்கள். இந்த எண்ணெயை தலைமுடி பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.

திராட்சை விதை எண்ணெய் (Grapeseed oil)

எண்ணெயை தடவினால் சருமம் வழுக்கும் என்று நீங்கள் எண்ணினால், கவலையை விடுங்கள். இருக்கவே இருக்கிறது திராட்சை விதை எண்ணெய். இது தோலினால் உடனடியாக கிரகித்துக் கொள்ளப்படும் தன்மையைக் கொண்ட எண்ணெயாகும். உங்கள் தோலை எப்படி மின்னச் செய்வது என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், உடனடியாக திராட்சை விதை எண்ணெயை பயன்படுத்துங்கள்.

கேரட் வேர் எண்ணெய் (Carrot root oil)

சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தை குணப்படுத்த கேரட் வேர் எண்ணெய் உதவுகிறது. இது வலியை குணப்படுத்தும் சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. தலைமுடி பராமரிப்புக்கும் பயன்படுத்தப்பட்டு, உங்கள் முடியை கட்டுப்பாட்டுடன் வைக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது. முயற்சித்துப் பாருங்களேன்!

கறிவேப்பிலை ஜூஸ் - சமையல்!



கறிவேப்பிலை ஜூஸ்


 என்னென்ன தேவை?

தளிர் கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,


பச்சை மிளகாய் - 1/2,


உப்பு - தேவைக்கேற்ப,


சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,


எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?


கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி, பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை இவற்றுடன் சேர்த்து மையாக அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும்.


அதனுடன் பாதி அளவு தண்ணீர், எலுமிச்சைச்சாறு மற்றும் ஐஸ் கட்டி சேர்த்துப் பருகவும். சுவையான புத்துணர்ச்சி பானம்...

ஹாக்கர் (Hacker) ஒரு முன்னுரை...?

இணையத்தில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக தெரிந்த கொள்ளவேண்டிய முக்கியமான் விசயம், Hacking, Hackers, நாம் எவ்வாறு ஹாக் செய்ய படுகிறோம், நம்மை எவ்வாறு தற்காத்து கொல்வது, எந்த விட தடயமும் இல்லாமல் எப்படி மற்றவர்கள் சிஸ்டம்ஸ் ஹாக் செய்யவது என்பது பற்றி இந்த தொடரில் பார்க்கலாம்....



Hacking என்று சொன்ன உடன் மனதில் hacker, Swordfish, Die hard -4 என்ற படத்தில் வருவது போல ஹக்கர் அக வேண்டும் என்ற எண்ணத்தில் கூகிள் அணுகினால் உங்களுக்கு உற்படியாக ஒன்றும் கிடைக்காது. முதலில் இந்த கான்செப்ட் நியாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். “ Dont Learn To Hack, But Hack To Learn:

நான் நிறைய பேரை இணையத்தில் பார்த்து இருக்கிறேன். அவர்கள் அனைவரும் Over nite il Obama அக வேண்டும் என்று தான் நினைகிறர்களே தவிர, கற்று கொள்ள நினைப்பது இல்லை.



Dont Search in Google by, “ How do hack gmail / facebook / twitter”

எவனோ ஓருவன் ஒரு Opensource Software செய்து அதை உங்களுக்கு இணையம் முலம இலவசமாக வழங்கி, அதில் யாருடைய password உங்களுக்கு வேண்டுமோ அதில் User ID எண்டர் செய்தால் தரும் அளவுக்கு எந்த Automated Software உம் கிடையாது,

மேலும் இது போன்ற ஒரு automated Software முலம தனது Server il Vulnerability இருக்கும் அளவுக்கு எந்த நிறுவனமும் Server Maintences பண்ண மாட்டார்கள்.

என்னவே கூகிள் இல் இது போன்று தேடுவதை நிறுத்துங்கள். ஆனால் உண்மையுள் Google is the best application to steal infromation from websites. but you have to use your KEYWORDS properly. இதை பற்றி பின் வரும் பதிவுகளில் பார்க்கலாம். ஏன் என்றால் இதை பற்றி மட்டுமே ஒரு தனி பதிவு போடலாம். அந்த அளவுக்கு Google Hacking பற்றி இருக்கிறது.

இணையத்தில் நமது பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதற்கு என்று Anti-Virus Software மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தால் உங்களை போன்று ஒரு முட்டாள் கிடையாது. Anti-virus Software என்பது உங்களது கணினியில் இருக்கும் அல்லது பாதிப்பு உண்டாக்கும் மென்பொருள் பதிவிறக்கும் பொது அலெர்ட செய்யும், மற்றும் அதை தடுக்க உங்களுக்கு ஒரு அலெர்ட் குடுக்கும், அவள்ளுவே....

அனால் Hacker’s என்பவர்கள் இது தெரியாதே மூடர்கள் அல்ல. ஹாக்கிங் என்பது ஒரு Default Systemஇல் அதன் போக்கில் சென்று அதில் உள்ள Loop-Holes என்பதை அறிந்து, அதன் முலம அந்த System மை தகர்பவர்கள்.

உங்களுக்கு புரிவது போல சில எ.கா: •
  • Ctrl+C குடுத்து நீங்கள் copy பண்ணி வைத்து இருக்கும் தகவல்களை பெறுவதற்கு சில Script Lang போதும். எதைவாது நீங்கள் காப்பி செய்து விட்டு இந்த சுட்டியை கிளிக் செய்யவும்.

இப்பொழுது நீங்கள் காப்பி செய்து வைத்து இருக்கும் தகவல் அந்த இணையத்தில் O/P அக கிடைக்கும், இதை எல்லாம் எந்த Anti-virus Software உம் தடுக்காது. இதுபோன்று சில Cookie-Stealing Programmes இருக்கின்றேன...நீங்கள் உங்களுது browser இல் Auto-Login குடுத்து வைத்து இருந்திர்கள் என்றால், I’m Sorry Bro, உங்கள் Browser, உங்களுது User-Id, & Password ai Save செய்து வைத்து இருக்கும். இது ஹாக்கர் களுக்கு மிகவும் எளிதாக உங்கள் User-Id, & Password ஐ எடுத்து கொள்ளுவார்கள்.

இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது FB & Twitter இல் Unknown Persons குடுக்கும் Link ஐ நீங்கள் Click செய்தாலே போதுமானது, அவர்களுக்கு உங்கள் தகவல் அணைத்து சென்று விடும்.

மேலும் நீங்கள் இலவச மென்பொருள் பயன்பட்துவோரக இருபிர்கள் என்றால், அது browser il automatic அஹ சில tool-box இன்ஸ்டால் பண்ணி இருந்தால் அவற்றையும் முதலில் நிக்கி விடுங்கள்.....


  • சில மாதங்களுக்கு முன்பு FB il கிட்டதிட்ட அணைத்து User ID களும் Tag செய்ய பட்டு ஒரு காணொளி வெளியானது, An Women With An Axe, நியாபகம் இருக்கிறதா... அது இது போன்ற ஒரு Cookie-Stealing Programme தான், 
  • மேலும் Twitter இல் நீங்கள் எந்த DM மும் அனுபாமல் அனால் உங்கள் followers அனைவர்க்கும் உங்களுது பெயரில் ஒரு DM சென்று இருக்கும். அதில் ஒரு விளம்பரமும், ஒரு link உம் இருந்து இருக்கும், அதை கிளிக் செய்த அனைவருது Data வும் திருட்டு போய் விடேன்.

An Unconfirmed News that, HAckers had Stealed more then 500 million FB, Twitter Accounts with that link’s.

எனவே நீங்கள் உங்களது பாஸ்வார்டு ஐ மாற்றி 6 மாதங்களுக்கு மேல் இருக்கும் ஆயின் முதலில் மாற்றி விடுங்கள்.

FB & Twitter இல் கண்டகண்ட appஐ use பன்னுபவராக இருந்தால் முதலில் உங்கள் செட்டிங்க சென்று எண்ணென APP பயன்பாட்டில் இருக்கின்றேனே, எவை எவை தேவை இல்லை என்று கண்டோறிந்து அவற்றை முதலில் Delete செய்யுங்கள்.

முதலில் நீங்கள் எவ்வாறு எல்லாம் தாக்க படலாம் என்று அறிந்து கொண்டால், நம்மை தற்காத்துக்கொள்ளவும் முடியும், அதே முறையில் மற்றவர்களை தாக்கவும் முடியும்.

சானிட்டரி நாப்கின் உபயோகித்தால் புற்றுநோய் வருமா? படித்து மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்கள்!



கிராமப்புறங்களில் வசிக்கிற பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் தமிழக அரசின் அதிரடி அறிவிப்புக்கு அமோக ஆதரவு! அதே நேரத்தில், இப்படியொரு நல்ல சேதியின் சந்தோஷத்தைக்கூட அனுபவிக்க விடாமல், பீதியைக் கிளப்பியிருக்கிறது சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்பு பற்றி நாம் கேள்விப்படுகிற அதிர்ச்சித் தகவல்கள்...

ஆமாம்! வருடக்கணக்காக சானிட்டரி நாப்கின்கள் உபயோகிக்கிற பெண்களுக்கு அலர்ஜி, புண், அரிப்பு, இன்ஃபெக்ஷனில் ஆரம்பித்து, கர்ப்பவாய் புற்றுநோய் கூட வரலாம் என்பதே அந்த ஷாக் ரிப்போர்ட்!

‘எங்கள் சானிட்டரி நாப்கினை உபயோகித்தால் சந்திர மண்டலத்துக்கே சென்று வரலாம்; இமய மலையில் ஏறி எட்டிப் பார்க்கலாம்’ என்கிற ரீதியில் கவர்ச்சியான விளம்பரங்களைச் செய்கின்றன பல நிறுவனங்களும்... எப்பேர்ப்பட்ட ரத்தப்போக்கையும் உறிஞ்சிக்கொண்டு, பல மணி நேரம் தாக்குப் பிடிப்பதாக உத்தரவாதங்கள் வேறு...

அதீத ரத்தப் போக்கு, அலர்ஜி, புண், தடிப்பு என மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகளுக்காக ஒரு பெண் யாராவது ஒரு டாக்டரை சந்திக்கிறபோது, ‘இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம், அந்தப் பெண் வருடக்கணக்கில் உபயோகிக்கிற நாப்கினாக இருக்கலாம்’ என்று சந்தேகம்கூட வருவதில்லை. அந்த அளவுக்கு டாக்டர்களுக்கே விழிப்புணர்வு தேவைப்படுகிற பிரச்னை இது என்கிறார்கள் நிபுணர்கள்.

சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பலவித கெமிக்கல்களின் விளைவே, மேலே சொன்ன பல பிரச்னைகளுக்கும் அஸ்திவாரம்.

அட... இதற்கே பயந்தால் எப்படி? தரக்குறைவான சில நாப்கின்களில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மெட்டீரியலைக்கூட சேர்த்து தயாரிப்பதாகவும், அதன் விளைவாக பெண்களுக்கு ரத்தப்போக்கு அதிகரிப்பதாகவும் கூட ஒரு செய்தி!

இந்தப் பிரச்னை பற்றிப் பேச பல மருத்துவர்களும் தயாராக இல்லாத நிலையில், திருச்சி தேசியக் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பவியல் துறை துணைப்பேராசிரியர் முகமது ஜாபீர், மறைக்கப்படுகிற பல ரகசியங்களையும் வெட்டவெளிச்சமாக்குகிறார்.

‘‘சராசரியா ஒரு பெண் தன்னோட 15வது வயசுல பருவமடையறாங்கன்னு வச்சுப்போம். 40 வயசுல மெனோபாஸ்னு வச்சுக்கிட்டா, அந்தப் பெண் தன்னோட வாழ்க்கைல குறைந்தபட்சம் 25 வருஷங்கள்... 300 முறைகள்... 900 நாள்கள்... ரத்தப் போக்கை சந்திப்பாங்க. பெண் உடம்பின் ரொம்ப சென்சிட்டிவான பகுதியில அத்தனை வருடங்களா உபயோகிக்கப்படற நாப்கின்கள், அலர்ஜி, அரிப்பு, புண், இன் ஃபெக்ஷன் உள்பட ஏகப்பட்ட பிரச்னைகளுக்குக் காரணமாகுது. அதுக்குக் காரணம் நாப்கின் தயாரிப்புல சேர்க்கப்படற சில கெமிக்கல்கள்...

முதல் குற்றவாளின்னு பார்த்தா டையாக்சின். புற்றுநோய் உண்டாக்கற அதை, நாப்கின் தயாரிப்புல நேரடியா உபயோகிக்கிறதில்லை. பல தயாரிப்பாளர்களும் ரீசைக்கிள் செய்யப்பட்ட பேப்பர் மற்றும் பொருள்களைக் கொண்டுதான் நாப்கின் தயாரிக்கிறாங்க. அப்படித் தயாரிக்கப்படற நாப்கின்கள், பழுப்பு அல்லது அழுக்கு நிறத்துல இருக்கும். நம்ம ஆட்களுக்கு சாப்பிடற அரிசிலேருந்து சகலமும் வெள்ளை வெளேர்னு இருந்தாதான் திருப்தி. நாப்கினும் அப்படித்தான். அந்த பழுப்பு நிறத்தை மாத்தி, சலவை செய்தது போன்ற பளீர் வெள்ளை நிறத்தை வரவைக்கறதுக்காக, தயாரிப்பாளர்கள் ஒருவிதமான பிளீச் பயன்படுத்தறாங்க. பிளீச் செய்த பிறகு நாப்கின்களை மறுபடி அலச முடியாது. அப்படியே அது பெண்களோட உபயோகத்துக்கு வந்துடும். நீக்கப்படாத அந்த பிளீச்லேருந்து ‘டயாக்சின்’ கொஞ்சம் கொஞ்சமா வெளியேறிக்கிட்டே இருக்கும். மென்மையான, நாசுக்கான உடல் திசுக்கள்ல பட்டு பட்டு, அந்த இடத்துல அரிப்பு, அலர்ஜினு ஆரம்பிக்கும். வருஷக்கணக்குல இது தொடரும்போது, புற்றுநோயா மாறும் அபாயம் ரொம்ப அதிகம்.

ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்கறதா உத்தரவாதம் தரும் பல கம்பெனிகளோட நாப்கின்கள்லயும் பிரதான பொருள் செல்லுலோஸ் ஜெல். இது இயற்கையா பெறப்படற ஒன்றுதான்.

ஆனாலும், அதை மிக நுண்ணிய இழைகளா, துகள்களா மாத்தறதுக்காக அதிகக் காரத்தன்மை கொண்ட கெமிக்கல்களை உபயோகி க்கிறாங்க. அப்படிப் பல கட்டங்களைக் கடக்கிறப்ப, அதோட நல்ல தன்மைகள் மறைஞ்சு, கெமிக்கல்களோட ஆதிக்கம் தூக்கலாகி, பிரச்னைகளுக்கு விதை போடுது.

மூணாவது குற்றவாளி, ரேயான். உலர்வான உணர்வைத் தர்றதா சொல்லப்படற நாப்கின்கள்ல இதுதான் சேர்க்கப்படுது. துணிகளை நெய்யப் பயன்படுத்தற ரேயானும், பலமுறை பதப்படுத்தப்பட்டு, கிட்டத்தட்ட செயற்கைப்பொருள் மாதிரியே மாத்தப்படுது. சருமத்துக்கு சுவாசிக்க வழியில்லாமப் போறதோட, இன்ஃபெக்ஷனுக்கும் இது வழி வகுக்குது’’ என்கிற முகமது ஜாபீர், நாப்கின் உபயோகிப்பவர்களுக்கு சில அட்வைஸ்களைச் சொல்கிறார்.

‘‘தான் உபயோகிக்கிற பிராண்ட் என்ன, அந்த நாப்கின்ல என்னல்லாம் சேர்த்து செய்யப்பட்டிருக்குனு ஒவ்வொருத்தரும் தெரிஞ்சுக்கணும். குறிப்பிட்ட அந்த பிராண்ட் உபயோகிக்க ஆரம்பிச்ச பிறகு தனக்கு ஏதாவது பிரச்னைகள் வந்திருக்கான்னு பார்க்கணும். சிறுநீரகத் தொற்றாகவோ, அரிப்பு, அலர்ஜியாகவோ இருந்தாலும் சாதாரணம் என அலட்சியப்படுத்த வேண்டாம்.

உடனடியா அந்த பிராண்டை நிறுத்திட்டு, விலை அதிகமானாலும் தரமான தயாரிப்பை உபயோகிக்கணும்.

ரத்தம் ரொம்ப ரொம்ப சத்தான ஒரு பொருள். அது ரொம்ப நேரம் தேக்கி வைக்கப்படறப்ப, பாக்டீரியாக்களுக்கு கொண்டாட்டம். சீக்கிரமே பெருகி, இன்ஃபெக்ஷனை தரும். அதனால 3 மணி நேரத்துக்கொரு முறை நாப்கினை மாத்திடணும். கொஞ்சம் அசவுகரியமானதுதான்... ஆனாலும் வீட்லயே சுத்தமான, சுகாதாரமான முறைல தயாரிக்கிற துணி நாப்கின்கள் ரொம்பவே பெஸ்ட்!’

தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அசிங்கமான ரகசியங்கள்!!!


வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடங்கும்.


உங்கள் டூத் பிரஷில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பது என்ன தெரியுமா?

ஏராளமான கிருமிகளின் பண்ணையே அதற்குள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மூடி வைக்கப்படாத ஒரு டூத்பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடக்கம்.

வாய் நிறைய பாக்டீரியா

 ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர்கள் நம் வாயில் உற்பத்தியாகி, வாடகை கொடுக்காமல் வசிக்கின்றன. இது ஒரு பெரிய விஷயமில்லை. பிரச்சனை எப்பொழுது தொடங்குகிறது என்றால், இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை வழக்கத்துதிற்கு மாறாக அதிகரிக்கும் போது தான். பல்லைத் துலக்கும் போது நீங்கள் அகற்றுகிறீர்களே மஞ்சள் படிவுகள், அவை எல்லாமே பாக்டீரியாக்கள் தான். அவை உங்கள் வாய் என்ற வாடகை வீட்டிலிருந்து டூத் பிரஷ் என்ற அவுட் ஹவுஸுக்கு இடம் மாறுகின்றன.

பல் துலக்குவதால் எப்படி காயம் ஏற்படுத்துகிறது?


டூத் பிரஷ் மேலும் கீழும் இயங்கும் போது ஈறுகளைப் பின்னுக்கு அழுத்துவதால் காயம் ஏற்படுகிறது. இப்பொழுது டூத் பிரஷில் உள்ள கிருமிகள் மீண்டும் உங்கள் வாய்க்கு இடம் மாறுகிறது. உங்கள் வாய் பழக்கப்பட்ட இடம் தான் என்பதால், அவை பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் டூத் பிரஷை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவ்வளவு தான். கிருமிகள் ஜம்மென்று புது இடத்துக்குக் குடி போய்விடும். மேலும் குணமாகிவிட்ட வியாதிகள் கூட சந்தோஷமாகத் திரும்பி வந்துவிடும்.

டூத் பிரஷால் நீங்கள் நோயாளி ஆக வாய்ப்பிருக்கிறதா?

அநேகமாக இல்லை. என்ன தான் உங்கள் வாய் ஒரு கிருமிப் பண்ணையாக இருந்தாலும், உங்கள் வாய்க்கும் டூத் பிரஷுக்கும் இடையே கிருமிகள் தினசரி போக்குவரத்து நடத்தினாலும், உங்கள் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் செயல்பாட்டில் இருப்பதால், பல் துலக்குவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு.

கழிவறை இருக்குமிடத்தில் பல்துலக்காதீர்கள்

 பெரும்பாலான குளியலறைகள் மிகச் சிறியவை. நிறைய வீடுகளில், கழிப்பிடமும், குளியலறையும் ஒன்றாகவோ அல்லது மிக அருகிலோ இருக்கும். ஒவ்வொரு முறையும் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது, அதன் மூலம் காற்றில் ஏராளமான பாக்டீரியாக்கள் சுற்றுலா செல்கின்றன. அதனால் டூத் பிரஷ்கள் அருகில் இருக்கும் போது, அவற்றின் மேல் ஏற்கெனவே பாக்டீரியா நண்பர்கள் இருப்பதால், அங்கேயே தங்கிவிடுகின்றன. அதனால் டூத் பிரஷ்களை உங்கள் கழிப்பறையிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளி வையுங்கள்.

டூத் பிரஷ் ஸ்டாண்டுகள் மற்றும் ஹோல்டர்கள்

 பலரின் வாய்க்கிருமிகளும், கழிப்பறையிலிருந்து காற்றில் கலந்து வரும் கிருமிகளும் ஒன்றாய்ச் சங்கமிக்கும் இடமாக இது இருக்கிறது. வீட்டிலேயே மூன்றாவது அசுத்தமான இடம் இதற்குத் தான்.

டூத் பிரஷ் வைக்கும் குறிப்புகள்

* ஒவ்வொரு முறை பல் துலக்கியதும் குழாய்த் தண்ணீரில் நன்கு அலசிக் கழுவி உதறி வையுங்கள்.
 * ஒரு முறை பிரஷ் செய்துவிட்டு, அடுத்த முறை பிரஷ் செய்வதற்கு இடைப்பட்ட நேரத்தில் அது நன்கு உலர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈரப்பதமான டூத் பிரஷ், பாக்டீரியாக்களுக்கு ஜாலியான தங்குமிடம் ஆகும்.
 * தலைப்பாகம் மேலே வரும்படி நிறுத்தி வையுங்கள். டூத் பிரஷ்களை தனித்தனியாக நிறுத்தி வைக்கும் ஸ்டாண்டுகளை உபயோகியுங்கள்.
 * உங்கள் டூத் பிரஷ் உங்களுடையது மட்டுமே. உங்கள் சகோதரி, சகோதரன், கணவன், மனைவி, ரூம் மேட் ஆகியோரிடம் நீங்கள் எவ்வளவு அன்புடையவராக இருந்தாலும் சரி, டூத் பிரஷ் ஒரு பகிர்ந்து கொள்ளும் விஷயம் இல்லை. இல்லை. இல்லை.

எப்பொழுது உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்?

ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் டூத் பிரஷை மாற்றி விட வேண்டும். உங்கள் டூத் பிரஷ் தேய ஆரம்பிப்பது, நீங்கள் நோயுற்றிருப்பதற்கோ அல்லது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்திருப்பதற்கோ அது அறிகுறி. அப்பொழுது நீங்கள் அடிக்கடி உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்.

வாயை நல்ல படியாகப் பராமரியுங்கள்


 ஈறு சம்பந்தமான நோய்கள், பற்சிதைவு, பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை ஏற்படக் காரணம் பாக்டீரியாக்களே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைகள் பல் துலக்குவதும், ஃப்ளாஸ், வாயில் எண்ணெய் கொப்பளிப்பதும் பெரும்பாலான பாக்டீரியாக்களை வெளியேற்றிவிடும். பல் துலக்கும் முன்பாக பாக்டீரியாவை எதிர்க்கக் கூடிய மௌத் வாஷ் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதன் மூலம், வாயிலிருந்து பாக்டீரியா டூத் பிரஷுக்கு டிரான்ஸ்பர் ஆவதைத் தடுக்கலாம்.

உங்க இதயத்தை ஆரோக்கியமாக வச்சுக்க இப்படிப் பண்ணிப் பாருங்களேன்...



ஆரோக்கியமான வாழ்வை நீடித்து வாழ்வதற்கு நமக்கு ஆரோக்கியமான இதயம் மிக அவசியமாக தேவை. வாழ்க்கை முறை ஆரோக்கியமாக இல்லாவிடில் ஆரோக்கியமான இதயத்தை பெற இயலாது. நமது இதயம் 66 ஆண்டுகளில் ஏறத்தாழ 2.5 பில்லியன் முறை துடிக்கின்றது. இத்தகைய மிக அவசியமான உறுப்பான இதயத்தை மதிப்புடனும் அக்கறையுடனும் பராமரிக்க வேண்டும். பல பேர் இதயம் செய்யும் அனைத்து காரியங்களையும் தான்தோன்றித்தனமாக எடுத்துக் கொண்டு மோசமான வாழ்க்கை முறைகளால், இதயத்தின் ஆரோக்கியத்தை கைவிட்டு விடுகிறார்கள்.

நம் வாழ்கை முறையில் உள்ள பல காரணிகள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. எப்படி இருந்தாலும் சில மரபணு கோளாறுகள் நம்முடைய கட்டுப்பாடுகளுக்கு அடங்காமல் இதயத்தை பாதித்து வருகின்றன. ஆரோகியமற்ற வழிமுறைகள் அதாவது அதிக அளவு நொறுக்குத் தீனி உட்கொள்ளும் போது டிரான்ஸ் கொழுப்பு என்ற பொருள் இதயத்தின் குழாய்களை அடைத்துக் கொண்டு அதை மிகவும் கடுமையாக உழைக்க வைக்கின்றது. இந்த நிலை பல நாட்களுக்கு நீடித்தால் இதயம் மிகுந்த அழுத்தத்திற்கு உட்பட்டு மேலும் சிக்கல்களை உருவாக்கும்.

இதய அழுத்தத்தை குறைப்பதற்கு புகைப்பிடித்தல் மற்றும் அதிக அளவு மது அருந்துதல் போன்ற ஆரோக்கியமற்ற இன்பம் தரும் செயல்களை தவிர்க்க வேண்டும். உடலை ஆரோக்கியமாக பராமரிக்க சரியான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவதும் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. அவ்வாறு இல்லாவிடில் அதிகமாக இருக்கும் உடல் எடையால் உருவாகும் ஆரோக்கியமற்ற கொழுப்பு உடலில் சேர்ந்து இதயத்தை பாதிக்கின்றது. உங்கள் இதயத்தை பாதிக்கும் மற்றொரு முக்கியமான விஷயமாக மன அழுத்தம் உள்ளது. வெற்றிக்காகவும் பணத்திற்காகவும் ஓடும் படலத்தில் மக்கள் அதிகப் படியான அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதனால் இதயம் பழுதடைகின்றது.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும்

 ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதலே முதன்மையான வழியாகும். சரிவிகித ஊட்டச்சத்து தரும் உணவு முறையே ஆரோக்கியமான உடலையும் இதயத்தில் அழுத்தத்தையும் குறைத்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதிக அளவு டிரான்ஸ்-கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கவும்

 உடலின் எடையை எப்போதும் கண்காணித்து அதை கட்டுக்கோப்பாக வைப்பது அவசியம். உடல் பருமன் இதய சார்ந்த நோய்களுக்கு மிக முக்கிய காரணமாக விளங்குகிறது. உங்களது உயரத்திற்கேற்ப எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்பதை கண்டறிந்து அதை கண்டிப்பாக அதனை கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும்.

உடற்பயிற்சி செய்யவும்


 தினமும் உடற்பயிற்சி அல்லது யோகாசனம் செய்து வருவது, உடலையும், இதயத்தையும் ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. அனுதினமும் பயில்வதற்கு ஏதேனும் ஒரு வகையான உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து தொடர்ந்து செய்து வாருங்கள். விளையாட்டு, ஏரோபிக்ஸ் அல்லது நடனம் ஆகியவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

சுறுசுறுப்பாக இருக்கவும்

 உடலை சுறுசுறுப்பாக எப்போதும் வைத்திருக்க வேண்டும். நீங்கள் பொதுவாக அமர்ந்து வேலை செய்யும் தொழிலில் இருந்தால் தினமும் காலை அல்லது மாலையில் நடக்கவோ அல்லது மிதி வண்டியில் பயிற்சி மேற்கொள்வதோ உடலை சுறுசுறுப்பாக எப்போதும் வைத்திருக்க உதவும்.

கெட்ட பழக்கங்களை கைவிடவும்

 புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் இதர பழக்கங்களை தவிர்ப்பது நல்லது. இத்தகைய போதை பொருட்கள் உடலை ஊடுருவி மற்றும் உருக்குலைத்து உடலையும் இதயத்தையும் சேதப்படுத்துகின்றன. இத்தகைய போதைக்கு அடிமையாவதை மெதுவாக தவிர்க்க முயல வேண்டும் ஆனால் முழுமையாக விட்டு விட வேண்டும்.

மன அழுத்தத்தைக் குறைக்கவும்

 எவ்வளவு அதிகமாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும் தனிப்பட்ட வாழ்கையிலும், வேலை அலுவல்களிலும் மன அழுத்தத்தின் அளவுகளை குறைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கையையும் வேலையும் சரி சமமாக வைத்து வாழ்கையின் வழிப்படியே சென்று சந்தோஷத்தை அனுபவிக்க முயலவேண்டும் அதிக அளவு அழுத்தம் இதய நோய்களை உருவாக்கி விடும்.

பரம்பரை நோய் தானா என்று கண்டறியவும்


 பரம்பரை பரம்பரையாக பற்பல இதயம் சார்ந்த நோய்கள் தொடர்ந்து வருகின்றன. ஆதலால் மரபணு சார்ந்த குடும்ப விஷயங்களை கண்டறிந்து முன் யோசனையுடன் அத்தகைய நோய்களை தவிர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இது பின் நாட்களில் வரும் பல்வேறு சிக்கல்ளை தவிர்க்கும். அது மட்டுமல்லாமல் ஆரம்ப நிலையில் அறிந்து கொள்வதன் மூலம் இந்த நோய்களுக்கு சிகிச்சை செய்வதும் எளிதாக இருக்கிறது.

உணவில் மீன்களை சேர்த்துக் கொள்ளவும்

 எண்ணெய் நிறைந்த மீன்களையும் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு மிக்க உணவுகளையும் உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. மத்தி, புதிய டூனா, மற்றும் சால்மன் போன்ற மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு சத்து மிக்கவையாகும். இவை இதய கோளாறுகளிருந்து நம்மை காக்கின்றன.

நல்ல தூக்கம் அவசியம்

 தினமும் போதுமான அளவிலும் மற்றும் நன்றாகவும் உறங்குவது மிகவும் அவசியமாகும். நீங்கள் தூங்கும் நேரத்தை குறைக்கும் போது பயம், மன அழுத்தம் மற்றும் உறக்கம் தொடர்பான கோளாறுகள் உடலில் ஏற்படும். இவை உங்கள் இதயத்தில் எண்ணற்ற கோளாறுகளை ஏற்படுத்தும்.

நன்கு சிரிக்கவும்

 இறுதியானதாகவும் மற்றும் முக்கியமாகவும் இருப்பது உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வது - அது தான் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். வாய்விட்டு சிரிக்க வேண்டும். தினமும் 15 நிமிடங்கள் சிரித்தால் இரத்த ஓட்டத்தை 22% உயர்த்தும் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

பெரியார் கடவுளுக்கு எதிரியா?

பெரியார் ஒரு நாத்தீகர். கடவுளின் எதிரி. ஆன்மீகவாதிகளுக்கு எதிரி என பெரியாரையும் அவரது போராட்டங்களையும் பற்றியும் வருகிற பரப்புரைகள் நாம் அறிந்தவை. பெரியார் கடவுளுக்கு எதிரியா? இந்த கேள்விக்கு பெரியார் கருத்துக்களை அவரது சுயமரியாதை போராட்டத்தோடு இணைத்து பார்த்தால் மட்டுமே உண்மையை உணரமுடியும். சுயமரியாதை போராட்டமும் பெரியார் மதங்களை பற்றி கொண்டிருந்த பார்வையும் ஒன்றோடொன்று இணைந்தவை.

பெரியார் ஆச்சாரமான ஆத்தீக குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் பராமரிக்கும் கோவில் ஒன்று இருந்தது. இளவயதில் காசியில் 'இந்து சமய' மடங்களுக்கு சென்று சிறிதுகாலம் துறவறம் பூண்டவர். பெரியார் மதம் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்தாரா? "எனது வாழ்நாளில் என்றைக்காவது சாதி-மதத்தையோ உணமையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கின்றேன்....எப்போதிலிருந்து இவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை என்றும் யோசித்து பார்த்திருக்கின்றேன், கண்டுபிடிக்கமுடியவில்லை." அவரே சொல்கிறார் (நவமணி 1939 ஆண்டு மலர்).


1929, பிப்ரவரி 17-18 தேதியில் செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் தான் மதத்தை பின்பற்றக்கூடாதென தீர்மானிக்கப்பட்டது. "(இந்துமதம்)பிறவியினால் உயர்வு, தாழ்வு கற்பிக்கிறது, வருணாசிரம முறையைத் தோற்றுவித்து வளர்க்கிறது" என அந்த மாநாட்டு தீர்மானம் பெரியார் மேற்பார்வையில் நிறைவேற்றப்பட்டது. 'இந்து மதம்' ஆன்மீக தத்துவத்துடன் இயங்குவதோடு தனது பணியை முடித்துக்கொள்ளவில்லை. அதன் இயக்கமும், தாக்கமும் சமூக வாழ்வில் பல கேடுகளை விளைவித்தன. குறிப்பிட்ட சாதியினர் அனைத்து வளங்களையும், வாய்ப்புகளையும் அனுபவிக்க, பெரும்பான்மை மக்கள் அவர்களுக்காக உழைக்க வேண்டிய நிலை. அடிமைப்படுத்தப்பட்ட மக்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பலவித சாத்திரங்கள், மூடப்பழக்கங்கள் உருவாக்கப்பட்டன. அதனால் தான் பெரியார் மதத்தை பொருள்முதல்வாத செல்வாக்கு அடிப்படையில் அணுகினார்.


மனித இனத்தை வகைப்படுத்த ஒருகாலத்தில் சில நெறிகள் அவசியமாயிற்று. அன்றைய காலம் வேறுமாதிரியான சமூக, அரசியல், பொருளாதார சூழலில் மனித சமுதாயம் குழுக்களாக இருந்தது. அன்று இருந்த சமூகத்தில் இன்று இருப்பது போன்ற மக்கள் அமைப்பு முறைகளும், சட்டங்களும் இல்லை. மனித இனத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு மனிதகுழுக்களும் நெறிகளை தனக்கென உருவாக்கியது. உருவாக்கப்பட்ட நெறிமுறைகள் எந்த வகை மக்கள் ஆதிக்கம் அதிகம் இருந்ததோ அவர்களுக்கு ஆதரவாகவே அமைக்கப்பட்டன. அவற்றை அனைவரும் கடைபிடிக்க வைப்பதற்காக இயற்கையை இணைத்து வழிப்பாட்டு முறைகள் தோன்றலாயிற்று. அதனால் தான் பாகன் வழிபாட்டுமுறையில் இயற்கையை, தனது அறிவுக்கு எட்டாதவற்றை, மனிதன் எதை பார்த்து பயப்பட்டானோ அவற்றை என எல்லாவற்றையும் வழிபட்டு வந்தனர்.


கிரேக்கம், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா என எங்கும் இந்த வழிபாடுகள் விதவிதமாக இருந்துள்ளன. அந்த நிலையை கடந்து மனித சமுதாயம் இன்று அமைப்பு முறையிலும், சட்டங்களின் அடிப்படையிலும் வளர்ச்சியடைந்துள்ளது. இன்றைய காலத்திற்கு ஏற்ப மதத்தின் அணுகுமுறையில், தத்துவங்களில், நெறிமுறைகளில், நம்பிக்கைகளில் மாற்றம் அவசியமானது. ஒரு காலத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்பது மனித சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு செல்ல அனுமதிக்காத பழமைவாதமாக தான் இருக்க இயலும். முன்னர் பூமி தட்டையானது என்று கிறிஸ்தவ மத நம்பிக்கையாக இருந்தது. இந்து மதத்திலும் பூமியை பாயாக சுருட்டிய புராணக்கதைகளை பார்க்கிறோம். பூமி தட்டையல்ல, உருண்டை வடிவமானது என நிரூபித்தான் ஒரு அறிவியலாளன். மதவாதிகள் அவனை கடுமையாக எதிர்த்தனர். இவை அனைத்தும் கடந்த காலங்களில் இருந்த நம்பிக்கை. கடைசியில் என்ன ஆயிற்று? பூமி உருண்டை என்பதை அறிவியலும், கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களும் இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. கத்தோலிக்க மதத்தலைவர் போப் இதற்காக மன்னிப்பும் கேட்டார்.


"காலநிலைக்கும், சமுதாயநிலைக்கும் அறிவு முதிர்ச்சிக்கும் ஏற்றபடி முறைகள் வகுக்கப்படவேண்டியவை தவிர, ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் பொருத்தமென்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லையென்பது தான் பொருள்" என்றார் பெரியார். மதத்தின் பழைய கருத்துக்களை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றி மறுமலர்ச்சி ஏற்படுத்த கலகம் செய்தவர் பெரியார். அறிவியலில் எப்படி ஒரு ஆய்வாளரின் கண்டுபிடிப்பை இன்னொருவரது ஆய்வு முடிவுகள் பொய்யென நிரூபித்தால் ஏற்றுக்கொள்ளுவார்களோ அதே அறிவியல் பார்வையை பெரியார் மதத்திற்கும் வைத்தார். ஒரு காலத்தில் எழுதப்பட்ட, சொல்லப்பட்ட தத்துவங்கள், கதைகள், புராணங்கள், சாத்திரங்கள் நடப்பு காலத்திற்கு பொருந்துமா என மதங்களை பரிசீலனை செய்து மாற்றங்களை உள்வாங்குவது ஒவ்வொரு காலத்திலும் அவசியம். இதை தான் ஆங்கிலத்தில் contexualising என்பார்கள். மதவாதிகளுக்கு மாற்றங்களை உள்வாங்கும் திறந்த மனது, எதிர்கருத்துக்களை ஏற்கும் பக்குவம் ஆகியவை அவசியம்.


 இல்லையென்றால் மதம் உட்பட அனைத்து சமூக நிறுவனங்களும் அடிமைத்தனத்தின் சின்னமாக தான் விளங்கும். ஒரு காலத்தில் குழந்தை திருமணங்கள், விதவைகளுக்கு திருமண மறுப்பு, உடன்கட்டை ஏற்றிக் கொல்லுதல் என இருந்தவை இன்றைய சமுதாயம் ஏற்றுக்கொண்டுள்ளதா? இன்றைய மனித உரிமை அடிப்படையில் இவை அனைத்தும் குற்றங்கள். இப்படியான ஒரு வளர்ச்சி நிலைக்கு நாம் முன்னேற பல போராட்டங்கள் காரணமாக இருந்தன. பெரியாரும் இப்படியான ஒரு போராட்டத்தையே ஏற்படுத்தி எதிர்கருத்தை உருவாக்கினார். போராட்டம் செய்பவர்களை கண்டிப்பது மட்டும் தான் குறிக்கோளாக இருந்தால் போராட்டங்களின் காரணம் இருந்துகொண்டே இருக்கும். 'இந்து மதவாதிகள்' இந்த தவறை தான் செய்கிறார்கள். இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். பிரச்சனைகளின் அடிப்படை காரணிகளை கண்டு அவற்றை மாற்றினால் மதத்தில் மட்டுமல்ல மனங்களிலும் மறுமலர்ச்சி ஏற்படும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.


என்கிற குறளில் இதை தான் வள்ளுவர் ஆழ்ந்த பொருளுடன் கூறுகிறார்.

இதற்கு உதாரணமாக ஹாங்காங்கில் நடந்த ஒரு விடயத்தை இங்கு பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

ஹாங்காங்கில் எந்த பகுதியில் சென்றாலும் விளையாட்டு மைதானம், உள் விளையாட்டு அரங்கங்கள், பூங்கா, நூலகம் என பொழுதுபோக்கு இடங்கள் நிறைந்து காணப்படும். மேற்கு உலக நாடுகளில் கூட இந்த வசதி குறைவு. இதற்கு பின்னால் 1970களில் மாணவர்களும், இளைய தலைமுறையும் உருவாக்கிய போராட்ட சூழல் காரணம். அன்றைய அரசு பிரச்சனையின் காரணத்தை ஆய்வு செய்தபோது பொழுதுபோக்கு இல்லாமல் மனஇறுக்கத்துடன் இளைய தலைமுறையினர் இருப்பதை கண்டுபிடித்தது. பிறகென்ன ஊரெல்லாம் பொழுதுபோக்கு வசதியை உருவாக்கியது அரசு. அதன் பின்னர் பிரச்சனையும் ஓய்ந்தது. இன்று ஹாங்காங்கில் வேலையில்லாமை பற்றி அப்படியான ஆய்வுகள் இல்லை என்பது வேறு விடயம். அன்று போராடிய இளைஞர்களை அடித்து நொறுக்கியிருந்தால், இன்றைய ஹாங்காங் வேறுமாதிரியாக இருந்திருக்கும்.

"மனிதத்தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பெயரால் ஏற்பட்டுள்ள பழக்கவழக்கங்களே காரணமாயிருப்பதால்,

அப்படிப்பட்ட எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டுமென்றும், மதங்கள் ஒழியும் வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராதென்றும் இம்மாநாடு கருதுகிறது." என்கிறது 1931 விருதுநகர் சுயமரியாதை மாநாட்டு தீர்மானம். "நமது நாட்டைப் பொறுத்தமட்டில் 'பிறவிப்படியும் தொழில்படியும்' ஒழிந்த நிலைதான் சமதர்மநிலை என்று சொல்லப்படுவதாகும்." பெரியாரும், சுயமரியாதைக்காரர்களும் மதத்தை எதிர்க்க அடிப்படை காரணம் என்ன என்பது இந்த தீர்மானத்தில் விளங்குகிறது.

இந்தியா முழுவதும் இன்று பரவியுள்ள மதவெறியை பார்க்கும் போது, "இந்திய நாட்டில் தோன்றியுள்ள மத வேற்றுமைகளும், பகைகளும் அழிய வேண்டுமானால், அறிவுள்ள இந்தியர்கள் முதலில் மத உணர்ச்சியைப் புறக்கணிக்க வேண்டுமென்று முடிவு செய்கிறது" என்கிற 1931 விருதுநகர் சுயமரியாதை மாநாட்டு தீர்மானம் எவ்வளவு பொருத்தமானது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. ஆன்மீகம் என்பதும் மதம் என்பதும் வேறுபட்டவை. மதம் என்பது நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பின் பின்னால் அது சொல்லக்கூடிய அனைத்தையும் ஏற்ற சார்ந்திருப்பு. தான் சார்ந்துள்ளது தான் உண்மை, அது தான் வேதம், அது தான் இறைநெறி, அது தான் சொர்க்கத்திற்கு வழி என வியாபார நிறுவங்களைப் போல சண்டையிடும் நிலை மதம் சார்ந்தது.

ஆன்மீகம் என்பது அறநெறியை போதிப்பது என்கிறார்கள் ஆன்மீகவாதிகள். அய்யனாரை வழிபட்டாலும், அல்லாவை தொழுதாலும், கிருஸ்ணனை கும்பிட்டாலும், இயேவை வேண்டினாலும், புத்தனை ஏற்றுக்கொண்டாலும், சுயமரியாதை மீது பற்றுகொண்டு மனிதநேயமாக இருந்தாலும் நாம் மனிதர்கள் ஒரு இனம் என்னும் ஆழமான எண்ணமே அறநெறியாக இருக்க இயலும். போட்டி போட்டு ஒருவரை ஒருவர் தாக்குவதும், தடுப்பதும், ஆதிக்கம் செலுத்துவதும் ஆன்மீகத்தில் எந்த வகை? இந்த வெறி மதம் சார்ந்தது தானே தவிர அறநெறியோ ஆன்மீகமோ அல்ல. அறநெறியாளர்களாக இருந்தால் இவ்வகை செயல்களை செய்யமாட்டார்கள். இப்படிப்பட்ட செயல்கள் நடக்கும் காலங்களில் பெரியார் போன்ற போராட்டக்காரர்கள் சமுதாயத்திற்கு அவசியம் தேவை. அவர்கள் உருவாக்குகிற போராட்டங்கள் என்னும் காலக்கண்ணாடியை பார்த்தாவது நாம் திருந்தியிருக்கிறோமா? இது போராட்டக்காரனின் குற்றமல்ல. மதக் கலவரக்காரர்களின் குற்றம்.

இந்து மதத்தின் வர்ணாஸ்ரம சாதி அடிமைத்தனத்தையும், அறிவுக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்களையும் எதிர்த்ததே பெரியாருடைய கொள்கை. பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை இந்து மதத்தின் சாதி ஆதிக்க வேதங்கள் நாயை விட கேவலமாக நடத்தியதை உடைக்கவே பெரியாரின் கட்டளைகள் "கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" என உச்சமாக அமைந்தது. இந்துமத புராணத்தில் சிக்கி அடிமைப்பட்டு கிடந்தவர்களிடம் தட்டியெழுப்ப விடுத்த அறைக்கூவல் தான் இது. இந்த அறைக்கூவல் பிராமணீய ஆதிக்கத்தில் கற்பிக்கப்பட்ட கடவுளை கட்டுடைப்பதாகவே அமைந்தது. பெரியார் நேரிய, உயரிய சுயமரியாதையுடன் நடத்தும் வழியை ஏற்க தயாராகவே இருந்தார்.

"உருவமற்ற கடவுளை, யாரையும் ஒன்று போல் சிருஷ்டிக்கும் கடவுளை, காசு, பணம், செலவு செய்யாமல் வணங்கக்கூடிய கடவுளை, மூடநம்பிக்கைக்கு இடமில்லாத தன்மையில் யாரும் வணங்கலாம்"

(சுயமரியாதை போராட்டத்தின் உச்சத்தில் பெரியார் 1948ல் சொன்னவை இவை) என்னும் அவரது கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்த அடிப்படையில் தான் 1954ல் உலக பௌத்த சங்கத்தலைவரான டாக்டர் மல்லை சேகரா போன்ற அறிஞர்களை அழைத்து பௌத்த சங்கங்களை 'இந்து மதம்' அழித்தது பற்றிய பிரச்சாரங்களை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக 'புத்த பெருமாள் விழா' கொண்டாடப்பட்டது. 1954 டிசம்பர் 3ல் மனைவி மணியம்மையாருடன் பர்மாவிற்கு சென்று உலக பௌத்த மாநாட்டில் கலந்துகொண்டார். பௌத்த கொள்கைகளால் பெரியார் கவரப்பட்டிருந்த போதும் பௌத்த சமயத்தில் இணையவில்லை. பௌத்த சமயத்தில் புத்தரையும் பிற தெய்வங்களையும் தெய்வமாக மாற்றி வழிபடும் முறையும், பௌத்த மடங்களில் உருவாகியிருந்த மூடநம்பிக்கைகளும் சடங்குகளும் தான் அதற்கான அடிப்படை காரணம். இந்து சமயத்தை சார்ந்த ஆதிக்க சாதியினரின் தாக்கம் பௌத்த நெறியில் ஊடுருவியதன் விளைவு இந்து மத அடையாளங்கள் பௌத்த நெறியிலும் புகுத்தப்பட்டு மதமாக்கப்பட்டது. புத்தருக்கும், பிள்ளையாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 ஆனால் தாய்லாந்து போன்ற நாடுகளில் பௌத்த விகாரைகளில் பிள்ளையார் வழிபாட்டை காணலாம். இந்த வழிபாட்டு முறைகள் மன்னர் காலங்களிலும் அதன் பின்னருமே புகுத்தப்பட்டவை. அதனால் தான் அண்ணல் அம்பேத்கார் பௌத்தமதத்திற்கு மாறிய வேளை பெரியாரை அழைத்தபோதும் அன்பாக மறுத்து அண்ணலுக்கு தனது ஆதரவை வழங்கினார். இந்த ஆதரவு வர்ணாஸ்ரம சாதி அடிமைத்தனத்தை விட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதலை என்ற பார்வையில் அமைந்தது.

பெரியார் இராமாயணத்தை வெறுத்தது, பிள்ளையார் சிலையை உடைத்தவை போன்ற செயல்கள் ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்கும் விதமாக தான் அமைந்தன. அதனால் தான் ஆரிய கடவுள்களையும், அடையாளங்களையும் கடுமையாக எதிர்த்தார். இந்த போராட்டங்கள் சுதந்திரப் போராட்டத்தில் அன்னிய நாட்டு பொருட்களை எரித்து சுதேசி இயக்கம் உருவானது போன்று அந்த காலகட்டத்தில் அமைந்த ஒரு போராட்ட முறை. பெரியார் எந்த வழிபாட்டுத்தலங்களிலும் அத்துமீறி குழப்பம் ஏற்படுத்தவில்லை.ஆதிக்க சாதியினரால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கோவிலில் வழிபடும் உரிமை மறுக்கப்பட்டதால் தான் வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டத்தை பெரியார் தலைமையேற்று நடத்தினார்.

வேடிக்கையான வேலை வேண்டாம் கடிதங்கள்.....

Resign என்று கூகிள் இல் தேடிய போது கிடைத்த சில வேடிக்கையான, விதியாசமான வேலை வேண்டாம் கடிதங்கள், சில உங்களின் பார்வைக்கு.....

ஒரு பிளாக்கர்-இன் resignation letter 




ஒரு விமானியின் முயற்சி,




web design இல் வேலை செய்பவரின் முயற்சி


கேக்கில் resignation letter



அமெரிக்க ஜனாதிபதின் resignation letter 






yahoo resignation letter generator 






சில வேடிக்கையான resignation letter 







இதை எல்லாம் விட நமவர்கள் அனுப்பும் சில கடிதங்கள்,

From
நான் தான்
உன் துறை தான்
உன் கம்பெனி தான்

To
நீ தான்
உன் துறை தான்

ஐயா,
நான் இனிமேல பணிக்கு வரமாட்டேன், உன்னால் முடிந்ததை செய்து கொள்

இப்படிக்கு

நான் தான்

ரத்தம் வெளியேறும் நேரம்!

 

ஒரு மனிதனின் உடலில் மிக முக்கியமானது ரத்தம். ஒரு மனிதனுக்கு அப்படிப்பட்ட ரத்தம் உறையும் நேரம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருக்கு ஆழமான காயம் ஏற்படும்போது ரத்தம் வெளியேறும்.

 இவ்வாறு வெளியேறும் ரத்தம் எவ்வளவு நேரத்தில் உறைகிறது என்பதை கணக்கிடுவதே ரத்தம் உறையும் நேரம் ஆகும்.

இதற்கு ஒரு சோதனையை செய்கின்றனர். விரல் நுனியை ஆல்கஹால் கொண்டு துடைத்து விட்டு சிறிது அழுத்தி தேய்கின்றனர். இந்த அழுத்தம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பின்னர் சுத்தமான ஊசியை கொண்டு விரல் நுனியில் குத்துகின்றனர். அப்போது ரத்தம் வர ஆரம்பிக்கும். இந்த நேரத்தை குறித்து கொள்கின்றனர்.

பின்னர், "பிளாட்டிங்' பேப்பரை வைத்து ரத்தத்தை ஒத்தி எடுக்கின்றனர்.ரத்தம் வெளிவருவது நிற்கும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்கின்றனர். இதன்படி ரத்தம் நிற்கும் நேரத்தை கணக்கிடுகின்றனர்.

 இதனையே ரத்தம் உறையும் நேரம் என்கின்றனர். இந்த நேரம் ஒரு நிமிடம் முதல் 3 நிமிடம் வரை இருக்கும்.

சராசரியாக காயங்கள் ஏற்பட்டால் ரத்தம் உறையும் நேரம் 6 முதல் 10 நிமிடங்களாக இருக்கும். சிலருக்கு ரத்தம் உறைய தாமதமாகலாம்.

இவர்களுக்கு, ரத்த பிளேட்லெட்டுகள், த்ராம் பேரசைட்ஸ் குறைபாடுகள் உள்ளன என அறியலாம். சிலர், "ஹீமோபிலியா' எனும் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் உறைய அதிக நேரமாகும்.

சிலருக்கு மணிக்கணக்கானால் கூட ரத்தம் உறையாது. இதனால் ரத்த இழப்பு அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். இந்த நோய் மரபணு குறைபாட்டினால் வருவதாகும். பெரும்பாலும் இவை பாரம்பரிய நோயாக இருக்கும். சந்ததிகளையும் தாக்கும் அபாயம் உண்டு.

நீங்க தூங்கும் போது முதலில் தூங்குவது எந்த உறுப்பு என்று தெரியுமா.?



நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும்


 ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது.



முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும்


உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக்கள், காது,


இறுதியாக தோல் ஆகியவை தூங்கும்.

-
ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக


 நிகழும்.
முதலில் தோல் தன் வேலையைத்


 தொடங்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை


 உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள்,


கடைசியாக கண்கள் விழிப்படைகின்றன.

பெற்றோர்களை பேணுவோம்!

உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்தக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்மான் தான்!.

தனது பெற்றோர்களின் மீது வைத்திருந்த மதிப்பு, மரியாதையினால் தான் இறைவன் இந்த உயர்வை ஏஆர் ரஹ்மானுக்கு வழங்கினான். அதனால் தான் தமது பேச்சின் முடிவில் எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக்கூறி நிறைவு செய்தார்.

பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளும் எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். அதில் ஒரு உதாரணம் தான் ஏஆர் ரஹ்மான்!.

உங்களை பெற்ற தாய், தந்தையரை பார்த்து சீய்... என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாதீர்கள் என இறைவன் அல் குர்ஆன் மூலம் மனித சமுதாயத்தை எச்சரிக்கிறார்கள். மாறாக பெற்றோர்களிடம் பேசும் போது கண்ணியமாக பேசுங்கள் என்றும் இறைவனே சொல்லித் தருகிறான்.

வயதான தாய், தந்தையரோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்து அவர் (பெற்றோர்)களின் கோபத்திற்குள்ளாகி எவன் சொர்க்கம் நுழையவில்லையோ? அவனும் நாசமடைவானாக என்று வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறியபோது ஆமீன்! அப்படியே நடக்கட்டும் என நானும் பிரார்த்தனை செய்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்து கொண்டு தமது கைகளை உயர்த்தி மூன்று முறை ஆமீன் கூறிய நிகழ்வில் ஒன்றாய் பெற்றோர்களை கண்ணியம் செய்வதை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

மரணத்திற்குப் பிறகு நீ எங்கே செல்ல ஆசைப்படுகிறாய்? என யாரிடத்தில் கேட்டாலும் நல்லவர், தீயவர் என்ற பாகுபாடில்லாமல் சொல்லக்கூடிய ஒரே பதில் சொர்க்கம் என்பது தான்! காரணம் அங்கு தான் எவ்வித வேதனையில்லாமல் சுக போகமாக வாழ்வதற்குரிய சூழ்நிலை உள்ளதாக இறைவனும் இறைத்தூதரும் அறிவித்துள்ளார்கள்.

இப்படி ஆசைபடுவதில் தவறில்லை! அதே நேரத்தில் நாம் அதற்கு தகுதியானவர்களா? என்று சிந்திக்க வேண்டுமா? இல்லையா?

ஒருவர் சொர்க்கம் செல்ல வேண்டுமென நினைத்தால் அதற்குரிய அடிப்படை தகுதியே பெற்றோரிகளின் மனம் குளிரும் படியாக வாழ்ந்திருக்க வேண்டும். பெற்றோர்களின் உயர்வைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பிள்ளைகளாய் இருப்போரே, தாயின் காலடியில் தான் உங்களுக்கான சொர்க்கம் உள்ளது" எனக் கூறுகிறார்கள்.

அதாவது தாயின் காலடி என்பது தாயின் மன திருப்தியை குறிக்கிறது என்பதாக அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள். நாம் சொர்க்கம் செல்வதற்கு காரணமாய் இருக்கும் பெற்றோர்களையே முதியோர் இல்லம் என்ற நரகத்தில் தள்ளி விடுவது எவ்வளவு பெரிய அபத்தம்!

முன்பொரு காலத்தில் மூலை முடுக்கெல்லாம் பெட்டி கடைகள் தானிருக்கும். இன்றோ ஊர்தோறும் முதியோர் இல்லங்கள் உருவாகி வருகின்றன. இதெல்லாம் அதிகப்படியான மனிதர்கள் சொர்க்கத்தை விட்டு விட்டு நரகத்தை நோக்கிய தங்களது பயணத்தை தொடர்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள் தான் நாளை பெற்றோர்களாய் மாறுகிறோம்! "முன் செய்யின் பின் விளையும்" என்ற பழமொழியை மனதில் இருத்தி வாழ வேண்டும். இன்று நமது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவர். முதியோர் இல்லங்கள் மூடப்படாமல் நீடித்து இருப்பதற்குரிய காரணம் புரிகிறதா?

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டுமென்பதை இதோ, இறைவனே கூறுகிறான்: "எங்கள் இறைவா, நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்த போது எங்களின் பெற்றோர்கள் எப்படி எங்கள் மீது இரக்கம் காட்டினார்களோ, அதேபோல் எங்கள் பெற்றோர்களின் மீதும் நீ இரக்கம் காட்டுவாயாக" என்ற இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்து வர வேண்டுமென்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இரக்கம் எனற் வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்களாய் நாமிருக்கும் போது பெற்றோர்களின் பெருமையை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியம்?

நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போது பாலூட்டிய தாய் தனக்கு பிடித்த உணவு தன் பிள்ளைக்கு ஒத்துக் கொள்ளுமா? என யோசித்து பிள்ளைக்கு ஆகாது என தெரிந்ததும் ஆசைபட்ட உணவுகளை உண்ண மறுத்துவிடுகிறாள். கருவை வயிற்றில் சுமப்பதற்கு முன்பு வரை மிகவும் விரும்பி உண்ட உணவையெல்லாம் கருவை சுமந்ததற்குப் பின் விஷமாக்கி கொண்டது யாருக்காக? எதற்காக?

எல்லாம் பிள்ளைகளாய் இருந்த நமக்காகத்தானே, நமது ஆரோக்கியத்திற்காகத் தானே, அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த அன்னையவளை வயதான காலத்தில் அரவணைத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லங்களிலும், அனாதை விடுதிகளிலும் அடைக்கலம் தேடிக்கொள்ள வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை!

ஒரு முறை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் யாசகம் கேட்ட போது நடந்த சந்திப்பு தான் அது! அவர் எதிர்பார்த்ததை நான் கொடுத்துவிட்டு, ஏம்மா இந்த வயதான காலத்தில் இப்படி திரிகிறீர்களே, உங்களுக்கு குடும்பம், பிள்ளைகள் இல்லையா? என பரிவோடு கேட்டதும் தான் தாமதம் பொலபொலவென வடிந்த கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டே கூறினார், தம்பி, எனக்கு நான்கு ஆண், இரண்டு பெண் என ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள்.

என் பிள்ளைகள் சிறுவர்களாயிருக்கும் போதே எனது குடிகார கணவனின் இம்சை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு நானும் விஷம் சாப்பிட்டு செத்துவிடலாம் என முடிவு செய்து கணவன் வீடு வராத ஒரு இரவில் திட்டமிட்டபடி விஷத்தை சாதத்தில் கலந்து பிள்ளைகளுக்கு ஊட்ட முயன்ற போது அவர்களின் பிஞ்சு முகத்தை பார்த்ததும் கைகள் நடுங்கி விஷ சாதத்தை தூக்கியெறிந்து விட்டு என் பிள்ளைகளை கட்டிப்பிடித்து கதறினேன்.

ஒவ்வொரு பத்து மாதமும் என் பிள்ளைகளை சுமந்த கஷ்டம் எனக்குத் தானே, தெரியும்! குடிகார கணவனால், கைவிடப்பட்ட நான் வைராக்கியமாய் வீடு வீடாக போய் பத்து பாத்திரம் கழுவி கொடுத்து அதன் மூலம் வரும் சொற்ப வருவாயில் என் ஆறு பிள்ளைகளையும் வளர்த்தேன்.

ஒரு கட்டத்தில் இட்லி, வடை செய்து தெரு தெருவாய் கூவி கூவி விற்றும் என் பிள்ளைகளை வளர்த்தேன். என் மூத்த மகன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரைக்கும் எனது இட்லி, வடை வியாபாரம் தொடர்ந்தது.

படிப்பில் என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள். அதனால் கவர்மென்ட் ஸ்காலர்ஷிப் மூலமே மேற்படிப்பும் என் பிள்ளைகளுக்கு இலவசமாக கிடைத்தது. பிறகு எல்லாரும் படித்து முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் அவரவர்களுக்குரிய துணையை தேடி திருமணமும் முடித்துக் கொடுத்து அவரவர் தனி குடித்தனம் போய்விட்டனர்.

நான் மட்டும் என் மூத்த மகன் வீட்டிலேயே இருந்து கொண்டேன். என் மகன் செய்யும் ஊதாரித்தனமான செலவுகளை சுட்டிக்காட்டி அவ்வவ்போது பழசை நினைவு படுத்தி புத்திமதி கூறுவேன். இது பிடிக்காத அவன் என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டேன். பிறகு வாரம் ஒரு வீடு என மற்ற பிள்ளைகளை தேடி போக ஆரம்பித்தேன்.

எனது கடைசி காலத்தில் என்னை சோற்றுக்கு வழியில்லாத பிச்சைக்காரியை போலத்தான் நினைத்தார்களே தவிர பெற்றெடுத்தவள் என்றோ அல்லது நமக்கு மறுபிறவி கொடுத்தவள் என்றோ நினைக்கவில்லை. (சாதத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சித்தது என் பிள்ளைகளுக்கு தெரியாது) பெற்ற பிள்ளைகளோ என்னை பிச்சைக்காரியை போல் பார்க்கும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் தான் முகம் தெரியாத ஊரில் இன்று உண்மையான பிச்சைக்காரியாக உன் முன் நிற்கிறேன் என அந்த மூதாட்டி கூறிய போது உழைத்து தேய்ந்து போயிருந்த அவரது கைகளை பார்த்ததும் எனக்குள் பீறிட்டு கிளம்பிய அழுகையை அடக்க முடியாமலும், அந்தம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமலும், அநியாயமாக இந்தம்மா பெற்று ஆறு பிள்ளைகளும் நரகத்திற்குரியவர்களாகி விடுவார்களோ என்ற கவலையாலும், நன்றி மறந்த அந்த பிள்ளைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோபத்துடனுமே அந்தம்மாவை விட்டு விலகினேன்.

பெற்றோர்களுக்கெதிரான சமூக கொடுமைகள் தலைவிரித்தாடுவதற்கு நன்றி கொன்றல் ஒன்றே தான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பிள்ளைகளாய் இருப்போரே! நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களை பேணுவோம். அவர்களது மன திருப்தியை பெற்றுக் கொள்வோம்!

சேரர்கள் வரலாறு - முழு தொகுப்பு



சேரர்கள்


பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.பெரும்பாலும் இன்றைய தமிழகம்த்தின் கொங்குநாடு பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின. மெலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டிநாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூரும். மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது.
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

எல்லைகள்


சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.

மன்னர்கள்

சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

நகரங்கள்



கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.



சில அரசர்களின் ஆட்சியாண்டுகள் ஒருவாறு கணிக்கப்பெற்றுளன:

* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
* பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
* களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
* செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
* ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
* செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
* இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்


தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் கி.மு 1200 (?)



சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.

உதியஞ்சேரலாதன் - கி.பி. 45-70


உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் எல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர், வெண்னிகுயத்தியார், கழாத்தலையார் ஆகியோர் கூறுகின்றனர்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - கி.பி. 71-129

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் "இமய வரம்பன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். சங்காகாலத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பு நூலில் அடங்கும், குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை. இவரைவிட காழா அத் தலையார், மாமூலனார், பரணர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.



வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்.



முதுமைப் பகுவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத் தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநாநூறு கூறுகிறது.


பல்யானைச் செல்கெழுகுட்டுவன் - கி.பி. 80-105


பல்யானைச் செல்கெழுகுட்டுவன், சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆவான். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான், பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் - கி.பி. 106-130


களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைக் குறித்துப் பாடப்பட்டது. இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன் ....சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்.... எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலம்

பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.

செயல்கள்

பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், "......இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்....." என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.

சேரன் செங்குட்டுவன் - கி.பி. 129-184


சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.


காலம்


பல்வேறு சேர மன்னர்களைப் பற்றிச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்புக்கள் இருந்தாலும் செங்குட்டுவன் பற்றிய தகவல்கள் சங்க நூல்கள் எதிலும் காணப்படாமையால் இவன் சங்க காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது வெளிப்படை. இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.

வரலாற்றுத் தகவல்கள்

தமிழ் இலக்கியங்களில், சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.

அந்துவஞ்சேரல் இரும்பொறை


அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.


அந்துவஞ்சேரல், அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதி, கொங்கு நாடு, பொறையநாடு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரல், இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம் அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான். அந்துவஞ்சேரல் பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.


இவனது இரண்டாவது மகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதற்குப் பல காலம் முன்னரே, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆட்சிக்கு வருவதற்கு முன் அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை - கி.பி. 123-148



செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன். சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான். சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.

இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் புத்த துறவிகளுக்குப் படுக்கைகள் செய்து கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட படுக்கைகளுக்கு அருகே இக் கொடைகளைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் வெட்டப்பட்டன. கரூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு என அறியப்படும் இத்தகையதொரு கல்வெட்டு "கோ ஆதன்" என்பவன் பற்றிக் குறிப்பிடுகிறது. இது வாழியாதன் இரும்பொறையே எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்.



ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார். குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன், ஆடல்கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். கலையார்வம் கொண்டு விளங்கிய இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் இவன் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 148-165

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில்கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.



தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.


இளஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 165-180

இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.

இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.



குட்டுவன் கோதை - கி.பி. 184-194

குட்டுவன் கோதை பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு அரசன். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.

சேரமான் வஞ்சன்




சேரமான் வஞ்சன், என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேரர் மரபைச் சேர்ந்தவர். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.ன் புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.

மருதம் பாடிய இளங்கடுங்கோ

மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுபவர்களும் உளர். எனினும் இதற்கான போதிய சான்றுகள் கிடைத்தில.

சேரமான் கணைக்கால் இரும்பொறை




சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன் செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை



சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, இவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒருவன். "மாக்கோதை" என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றிய தகவல்கள், சங்க இலக்கியம் மூலமே கிடைக்கிறது. இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.