Search This Blog

Tuesday 15 October 2013

டைபாய்ட் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறை!



டைபாய்ட் காய்ச்சலைப் பரவும் கிருமி மனித உடலில் ஒரு முறை நுழைந்து விட்டால் அது நிரந்தரமாக மனிதக் குடலில் ஒட்டிக் கொள்கிறது.


மிகக் கடுமையான காய்ச்சலை கொடுக்கும் டைபாய்ட் கிருமியிடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு சில வழிமுறைகளைக் கையாள வேண்டும்.


அதற்கு, பாதுகாக்கப்பட்ட உணவு மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே உண்ண வேண்டும்.


நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை மட்டுமே பருக வேண்டும்.


சாப்பிடும் முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும்.


எந்த பழங்களையும் கழுவாமல் சாப்பிடக் கூடாது.


டைபாய்ட் காய்ச்சலுக்கு என்று இருக்கும் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை போட்டுக் கொள்ள வேண்டும்.


சாலையோரம் விற்கப்படும் குளிர்பானங்களில் ஐஸ் கட்டிகளை போட்டுக் கொள்வதை தவிர்க்கவும்.

ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் சனீஸ்வரர்!

                                      

நம் வாழ்க்கையில் ஆன்மிகமும், ஜோதிடமும் பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. இவை இரண்டையும் இரு கண்கள் என்றே கூறலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி வரும் நாள், நட்சத்திர, திதிகளை அனுசரித்தே ஒவ்வொரு விஷயமும், விசேஷமும் மேற்கொள்ளப்படுகின்றன. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நவகிரகங்களின் அனுக்கிரகமே முக்கியமாக இருக்கிறது. நவகிரகங்களில் பிரசித்தி பெற்றதும், பிரதானமாக இருப்பதும் சனியாகும். இவர் ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யத்தை தருபவராக திகழ்கிறார்.


ஜோதிட சாஸ்திரத்தில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவர் நியாயவான், தர்மவான், நீதிமான் என போற்றப்படுகிறார். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், மந்திரி, தொழிலதிபர், அன்றாடங்காய்ச்சி என எல்லோரும் இவருக்கு சமமானவர்களே. அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைக்கு ஏற்ப சிறிதும் பாரபட்சம் இன்றி பலாபலன்களை அருள்கிறார் கடவுளர்களை கூட இவர் விட்டு வைக்கவில்லை. நல்ல ஆரோக்யத்துடனும், செல்வச் செழிப்புடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்பது எல்லோருக்கும் ஆசை.


இந்த மூன்றையும் அருள்பவர் சனீஸ்வர பகவான். தடைகளை அகற்றி வளமான வாழ்வை அளிப்பவர். நீண்ட ஆயுள், உயர்ந்த பதவி, நிறைந்த சொத்து, ஆள்பலம் ஆகிய அனைத்து செல்வங்களையும் தரக்கூடியவர். பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானைச் சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைகூட மிகப்பெரிய பட்டம் பதவி என்று அமர வைத்துவிடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜ தந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். இவர் 12 ராசிகளை சுற்றி வர சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.


இந்த 30 ஆண்டுகளில் பல்வேறு விதமான மாற்றங்களை ஒரு ஜாதகருக்கு ஏற்படுத்துகிறார். ஆகையால்தான் 30 ஆண்டுகள் வாழ்ந்தவன் இல்லை, 30 ஆண்டுகள் தாழ்ந்தவன் இல்லை என்ற ஜோதிட வாக்கு ஏற்பட்டது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த ஒரே கிரகம் சனியாகும். ஒருவருக்கு ஜாதகத்தில் தசா புக்தி சரியில்லாமலும், சனி பார்வை சரி இல்லாமலும் இருந்து கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும்.


அதே நேரத்தில் சனியால் யோக பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றலும் அவருக்கு உண்டு. ஆகையால்தான் "சனியைப்போல் கொடுப்பவனும் இல்லை, சனியைப்போல் கெடுப்பவனும் இல்லை," "சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்" என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.


சாக்கடையில் பதுங்கிய இந்திரன்


ஒருசமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று நான் தேவர்களுக் கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம் என்று கேட்டார். அதற்கு சனிபகவான் ‘‘நான் நீதிமான், எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது,’’ என விளக்கம் தந்தார். ‘‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு,’’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரரும் அந்த காலத்தை தெரிவித்தார்.


சனீஸ்வரர் குறிப்பிட்ட அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டார். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்தபிறகு சாக்கடையில் இருந்து வெளியே வந்த தேவேந்திரன் சனீஸ்வரரிடம் சென்று "உங்கள் பார்வையிலிருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா?" என்று பெருமையடித்துக் கொண்டார். அதற்கு சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, "நீங்கள் சிம்மாசனத்தை விட்டு, சாக்கடையில் சென்று உழன்றீர்களே அதுகூட என் பார்வை  பீடிப்பினால்தான்" என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது.


சனியின் கோச்சார பலன்


எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் தசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. கோச்சார கிரக பெயர்ச்சியும் உண்டு. ஆனால், சனிக்கு கோச்சார கிரக பெயர்ச்சி பலம் அதிகம். காரணம் இவர் ஒரு ராசியில் சுமார் இண்டரை வருடங்கள் தங்கி இருந்து பலன் தருவார். ஒரு ஜாதகத்தில் 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வந்து செல்லும்போது ஏழரைச் சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கு வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும், எட்டாம் வீட்டிற்கு வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.


நமக்கு குடும்பத்தில் கஷ்ட, நஷ்டங்கள், உடல்நலக் குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும், வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், "உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுகிறது" என்று சொல்லி திட்டுவார்கள். மாறாக உன்னை சூரியன் பிடித்து ஆட்டுகிறான். உனக்கு கேது பிடித்து இருக்கிறது என்று யாரும் சொல்வதில்லை. ஜாதகத்தில் எந்த கிரக தசாபுக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும். இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை, யோகம், அதிர்ஷ்டம், கஷ்ட-நஷ்டங்களைத் தருகின்ற தன்மை, அதிகாரம் எல்லாம் உண்டு. ஆனால், சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் பொதுவாக பரவலாக நம்மிடையே தவறாக ஏற்பட்டு
விட்டது.


ஏழரைச் சனியில் சுபம்


சனி, தசா காலத்திலோ, சனியின் கோச்சார நிலையிலோ, பல்வேறு விதமான யோகங்களை வாரி வழங்குவார். சனியால் வருகின்ற ஏற்றம், யோகம், அசுர வளர்ச்சியாகும். அரசியலில் மிகப்பெரிய பதவிகளையும், பொறுப்புக்களையும் கொடுப்பதில் சனிக்கு நிகர் சனியே. ஏழரைச்  சனியில் விரைய சனி நடைபெறும் காலத்தில் சொத்து வாங்கும் யோகத்தை தருவார். அதேபோல் மகன், மகள் திருமணத்தை சுபமாக நடத்திக் கொடுப்பார். வராத பணம் கடன்கள் எல்லாம் வசூலாகும். கூடவே சில அநாவசிய செலவுகளும் இருக்கும்.


நான்கில் சனி வரும்போது அலைச்சல், இடமாற்றம், சுக குறைவு இருந்தாலும் பூர்வீக சொத்துகளை அடைவதில் ஏற்பட்ட தடைகளை நிவர்த்தி செய்வார். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். சொந்த வீட்டில் பால் காய்ச்சும் பாக்யம் கிடைக்கும். அவரவர் கொடுப்பனைக்கேற்ப வாகன யோகத்தை தருவார். எட்டாம் இடமான அஷ்டமத்தில் சனி வரும்போது செலவுகள் கூடும் என்றாலும் அது கூடுமானவரை அவசிய, சுப செலவுகளாகவே இருக்கும். அதேசமயம் மருத்துவச் செலவுகளும் இருக்கும். குடும்ப சொத்துகள், பாகப்பிரிவினை சுபமாக நடக்கும். சாதக, பாதகங்கள், நிறை, குறைகள் இணைந்ததுதான் கிரக பலன்களாகும்.


ஜெனன லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்குஸ்தானத்தில் சனி இருந்தால் அவரை 'கரிநாக்கு' என்று சொல்வார்கள். இவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். இவர்களுக்கு வாக்கு பலிதம் இருக்கும். அதேநேரத்தில் கையில் காசு, பணம் தங்காது. கையில் இருந்தால் செலவு ஆகிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் குடும்பத்தை விட்டு பிரிந்து அயல் நாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப்பார்கள்.
ஜாதக கட்டத்தில் சனிக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது.


ஒரே ராசியில் சனி-சந்திரன் இருப்பது சமசப்தமமாக பார்ப்பது. சனி நட்சத்திரத்தில் சந்திரன், சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருப்பது இந்த புனர்பூ தோஷ அமைப்பாகும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு முயற்சி செய்யாமலேயே திடீரென்று திருமணம் கூடி வந்துவிடும். மளமளவென்று எல்லா ஏற்பாடுகளும் தாமாகவே நடக்கும். இது ஒருவகை. இன்னொரு வகை எத்தனை முயற்சிகள் செய்தாலும் ஏதாவது தடை வரும். நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை நிச்சயமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். சிலருக்கு திருமண தேதிகூட மாறலாம்.


வழிபாடு - பரிகாரம்


மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் சுமப்போர், துப்புரவுத் தொழிலாளிகள், தொழு நோயாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் தொண்டும், உதவியும், சனீஸ்வரருக்கு மிகவும் பிரீதியானதாகும். சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும். சனிக்கிழமை  வரும் பிரதோஷ  தினத்தில் சிவனுக்கு வில்வத் தளங்களால் மாலை சாற்றி வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் எற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் தரலாம். இல்லாதோர், இயலாதோர் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கித் தரலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு.

மதுரை மாவட்டத்தின் வரலாறு!



இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது. மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாநகர், கூடல் நகர், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் என்பன மதுரையின் வேறு பல பெயர்களாகும். இந்திய துணைகண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண்ட நகரமாகும். பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது. இந்த நகரில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக இந்த நகரம் அதிகம் அறியப்படுகிறது. சங்ககாலத்தில் நான்மாடக்கூடல் எனப் போற்றப்பட்டது. சீனப் பாசி கலந்த ஒரு வகை குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றலாப் பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது.


தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆட்சி செய்த விசயன் என்ற மன்னன் தன்னுடைய பட்டத்தரசியாக மதுராபுரி (மதுரை) இளவரசியை மணந்ததாக இலங்கையின் பண்டைய வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது.



பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன. தமிழ் வளர்ச்சிக்குத் தனியே சங்கம் வைத்து வளர்த்த பெருமையும் இந்த நகரத்துக்கு உண்டு என்று பழமையான வரலாறுகள் தெரிவிக்கின்றன. மதுரை தமிழின் ஐம்பெருங்காப்பியங்களின் ஒன்றான சிலப்பதிகாரம் கதையின்படி அதன் நாயகி கண்ணகியால் ஒரு முறை எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சுற்றுலாத் தலங்கள்

அழகர்கோவில்


காந்தி அருங்காட்சியகம்


கீழக்குயில்குடி சமணர் படுகைகள்


குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி


மீனாட்சியம்மன் கோயில்


திருப்பரங்குன்றம்


திருமலை நாயக்கர் மஹால்


தெப்பகுளம்


பழமுதிர்ச்சோலை


பாலமேடு ஜல்லிக்கட்டு


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு



கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், கூடல் அழகர் பெருமாள் கோவில் போன்ற கோவில்களும் இவை தவிர திருமலை நாயக்கர் அரண்மனை, காந்தி அருங்காட்சியகம், குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி மற்றும் சமணர் மலை என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள் நிறைய இருக்கின்றன. மதுரைக்கு மிக அருகில் அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களும் இந்து மதத்தின் சிறப்புமிக்க சில தலங்கள் ஆகும்.



குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வரும் சுற்றுலா மையமாக மதுரை விளங்குகிறது. இது தவிர வட இந்தியர்களும், தமிழகத்தின் பிற மாவட்ட பயணிகளும் விரும்பி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதனை சுற்றியில்ல அனைத்து சுற்றல மையங்களுக்கும் உள்ளாட்சி அமைப்பால் அதிக நிதி ஒதுக்கப்பட்டு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. நாயக்கர் மஹால் பல கோடி செலவிடப்பட்டு ஒலி-ஒளி காட்சி போன்ற அம்சங்களுடன் மீண்டும் புதிப்பிக்கப்பட்டுள்ளது.



மதுரைக்குப் அருகாமையில் உள்ள மாவட்டங்களான இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம், சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோயில், ஆவுடையார்கோயில், போன்ற நூற்றாண்டுகள் கடந்த கோவில்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், திண்டுக்கல் மலைக்கோட்டை, தேனி மாவட்டத்தில் சுருளி நீர்வீழ்ச்சி,வைகை அணை அருகிலுள்ள கேரள மாநில எல்லையில் உள்ள தேக்கடி, மூணாறு போன்றவையும் சில மணி நேரப் பயணத் தொலைவிலுள்ள சுற்றுலாத் தளங்கள் ஆகும்.

" ஆண்டவன் யார்.." (நீதிக்கதை)!

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்.அவனுக்கு ஒரு நாள் கடவுள் என்பது யார்? அவரது ஆற்றல் எஎன்ன? என்ற சந்தேகம் எழுந்தது
அந்த சந்தேகத்தை தீர்க்க அவனது அமைச்சர்கள் யாராலும் முடியவில்லை.

அதனால் கோபம் அடைந்த அரசன்,தன் தலைமை அமைச்சரிடம் " என் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு... நாளை வரை அவகாசம் தருகிறேன்' என்றான்.

தலைமை அமைச்சரும் வருத்தத்துடன் வீட்டிற்கு வந்தார்.அவர் வருத்தத்தை அறிந்த அவரது பத்து வயது மகள் 'நான் நாளை வந்து அரசரின் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன் ' என்றாள்.

அடுத்த நாள் அரச சபையில் அரசனிடம் அவள் ' அரசே ஒரு குடுவையில் பால் வேண்டும்' என்றாள்.

பால் கொண்டு வந்து தரப்பட்டது.

பால் கொண்டு வந்தவனைப் பார்த்து அவள்...'இந்தப் பாலின் நிறம் என்ன ' என்றாள்.

'வெள்ளை நிறம்'  என்றான் அவன்.

'இப்பாலைக் கறந்த மாடு என்ன நிறம்' என்றாள்.

'கருப்பு நிறம்'

'அந்த கருப்பு நிற மாடு எதைத் தின்று இந்த பாலைத் தந்தது'

'பசும் புல்லை'

இப்போது அவள் அரசரைப் பார்த்து ...'யார் பச்சைப் புல்லை கருப்பு மாட்டிற்குத் தந்து வெள்ளைப் பாலை உருவாக்குகிறாரோ அவர் தான் கடவுள்....

ஆண்டவன் விந்தையன செயல்கள் அனைத்தும் செய்யும் ஆற்றல் பெற்றவர்' என்றாள்..

அரசனும் மனம் மகிழ்ந்தான்.

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 4...!

பதின்மூன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம்:


                              கி.பி 1260 ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்


 
 
Beatus world map, 1203
 
 
 


Ebstorf mappamundi, 1234
Gervase of Tilbury 

 

 
 

Matthew Paris' world map, 1250

 

 

Hereford mappamundi, 1290
Richard de Bello of Haldingham

 

 
 

 
 

 
 

T-O map, from a 13 th century manuscript
oriented with East at the top

 

பதினான்காம் நூற்றாண்டு உலக வரைபடம்:
 

           உலக புகழ் பெற்ற அட்லஸ் உலக வரைபடம் ஆரம்பிக்க பட்டது இந்த நூற்றாண்டில் தான். கி.பி 1375 இல் ஆரம்பிக்கப்பட்டது.
 
 
 
 
                                                                கிழக்கு ஆசியா


 
 

 
 
                                                                      ஐரோப்பா
 


               இத்தாலியர்களால் வரையப்பட்ட 14 நூற்றாண்டு உலக வரைபடம்
 
 
 

 
 
                      ஆங்கிலேயர்களால்(british) வரையப்பட்ட உலக வரைபடம் 
 
 

T-O map, from 14 th century edition of the writings of Lucan

பயணம் தொடரும்...

ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலை விடவும் மருந்துகளே அதிகம்!

ஆரோக்கியத்தை ஹார்லிக்ஸ் பாட்டில்களிலும் அன்றாட சந்தோஷத்தை சாட்டிலைட் சானல்களிலும் அடகு வைத்துவிட்ட இன்றைய சமூகம் நிழலைத் தொடரும் நிஜமாக இருக்கிறது.பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்தாலும் குழந்தைப் பிறப்பில் எப்போதும் ஏற்றத்துடன்தான் இருக்கிறது. விஞ்ஞானம் இன்று ஒவ்வொரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து விட்டுதான் குழந்தையை வெளியில் எடுக்கிறது.


15 - health preganand

 


ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலை விடவும் மருந்துகளே அதிகம் புகட்டப்படுகின்றன என்பது புரையோடிக் கொண்டிருக்கும் ஒரு புற்றுநோயாக சமூகத்தில் ஆகிக் கொண்டிருக்கிறது. திரைக்கடல் ஓடி திரவியம் தேடுகிறோமோ இல்லையோ, திரைப்படத்திற்காக தற்கொலை செய்து கொள்ளத் தெரிந்து வைத்திருக்கிறோம்.


பகட்டுப் படிப்பு, 12 மணி நேர அலுவல், கைபேசிக் காதல், கணிப்பொறி ஜாதகம் பார்த்து கல்யாணம் என இன்றைய சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.பணம் சம்பாதிக்கப் போய் நோய் பெற்று, நோயைத் தீர்க்கப் பணம் கொடுத்து என இன்றைய மனிதன் வேலைகளின் விளைவால் இறுதியில் கடன்பட்டே நிற்கிறான். 


இந்த மாதிரி சூழ்நிலையில் கர்ப்பிணிப் பெண்ணின் நிலைமை கண்ணீரைத் தாண்டிய கொடுமை. 20 வருடங்கள் முன்பு வரை என் அம்மா, என் நண்பனின் அம்மா எல்லோரும் பல குழந்தைகளைப் பெற்று எடுத்தவர்கள். அத்தனையும் சுகப் பிரசவம். இன்று என் சகோதரியின் தோழிகளுக்காட்டும், நண்பர்களின் சகோதரிகளுக்காகட்டும் எனக்குத் தெரிந்த வரையில் சுகப் பிரசவம் என்பதே இல்லை.


ஏவுகணைகளைச் செவ்வாய்க்கு அனுப்பத் தெரிந்த இன்றைய விஞ்ஞானத்திற்கு ஒரு சிசுவை கர்ப்பத்திலிருந்து சுக முறையில் எடுக்கத் தெரியவில்லை. நோய்களுக்கு மருத்துவரை அணுகுவது என்பது அடுத்தடுத்த நோய்களுக்கு நாம் எடுத்து வைக்கும் படிக்கட்டு என்று சொன்னால் அது மிகையல்ல.


துரித உணவுகள் தமிழனின் சரிதத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. நோய்களுக்குத் தீர்வு மருந்தல்ல. நோயாளியின் நடத்தை. குழந்தையின் பிறப்புக்கு தாய் கருவியாக இருக்க வேண்டுமே ஒழிய, குழந்தையின் பிறப்புக்கு தாய்க்கே கருவி தேவைப்படக் கூடாது. கர்ப்பத்தில் அவளுக்கு வேண்டிய முக்கிய மருத்துவம் ஆரோக்கியம் மட்டுமே. உடலுழைப்பு, தியானம், சக்தியிழக்காத காய்கறிகள், பழங்கள், கீரை இவையே வயிற்றிலிருக்கும் சிசுவை வலிமையானதாக்கும். எதையும் சுலபமாக அணுகும் மனம், சிரித்துப் பேசும் குணம் இவையிருந்தாலே நிச்சயமாக ஒரு பெண்ணால் சுகப் பிரசவம் என்னும் சிகரத்தை அடைய முடியும்.



இதையும் மீறி கர்ப்பிணிப் பெண்களின் உடம்பில் சுகப் பிரசவம் நிகழ வாய்ப்பில்லாத பல சிக்கல் நிலைகள் இருக்கலாம். அது வேறு. ஆனால், நம்மேல் நமக்கில்லாத அக்கறை வேறு யாருக்கு இருக்க முடியும்?
உடற்பயிற்சிக் கூடம் சென்று உடம்பைக் குறைக்க நாம் மாதம் ஆயிரக்கணக்கில் செலவழிக்கத் தயார். ஆனால் ஒரு காசு செலவில்லாமல் ஒரு மணி நேரம் மைதானத்தில் தொடர்ந்து ஓடினால் சில மாதங்களில் உடம்பின் அத்தனைக் கொழுப்பும் இறங்கி அது நாம் இட்டக் கட்டளையை செய்யும். ஆனால், பகட்டாய் வாழ விரும்பும் மனிதன் அதை விரும்புவதில்லை.


பெண்களே! மாற்றுங்கள். நம்பிக்கை ஊசியை உங்கள் உடம்பின் ஒவ்வோர் அணுவிலும் ஏற்றுங்கள். உங்கள் உடற்பயிற்சியை துவங்குங்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது அது இருக்கட்டும்.நீரால் குளிக்கும் முன் வேர்வையால் உடல் கசடுகளைக் கழுவுங்கள். சிரித்து பேசுங்கள். ஓய்வு நேரத்தில் சோம்பேறியாக இருக்காமல் விளையாடியே பொழுதைப் பொன்னாக்குங்கள்.


கீரை, கேழ்வரகு, கம்பு, சோளம் – நம் உடல் நல வரலாறு. கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை உணவில் இருந்து ஒதுக்காதீர்கள்.அது உங்கள் கேச நிறத்தையும், பற்களையும் உங்களிலிருந்து ஒதுக்கி விடும். யோகம் வாழ்வின் முக்கிய ஆதாரம். வாழும் முறையை கற்றுக் கொண்டு நடக்காதீர்கள். நடந்து நடந்து கற்றுக் கொள்ளுங்கள்.

புது அம்சங்களுடன் G Pad 8.3 அறிமுகம்!

பிரபல எல்ஜி நிறுவனம் G Pad 8.3 என்ற புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.


தென் கொரியாவில் விற்பனை செய்யப்படும் இந்த டேப்லெட், இந்தாண்டு இறுதிக்குள் 30 நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும்.


இது கறுப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் வரும்.


முக்கிய அம்சங்கள்


1.7Ghz Qualcomm Snapdragon 600 CPU.

2GB RAM.

16GB internal storage.

microSD card slot.

5 megapixel rear-facing camera.

1.2 megapixel front facing camera.

8.3 inch 1920 x 1200 HD IPS display.

Android Jelly Bean 4.2.2.


கதவு எங்க போச்சு! நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் பரபரப்பு!

அமெரிக்காவில் நடுவானில் பறந்த விமானத்தின் கதவு திடீரென கழன்று விழுந்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மான்டரி விமான நிலையத்திலிருந்து கடந்த வாரம் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.
இந்த விமானம் நடுவானில் வேகமாக பறந்து கொண்டிருந்த போது, திடீரென சத்தம் கேட்டது. 


இதையடுத்து திரும்பி பார்த்த விமானி விமானத்தின் கதவு காணாதது கண்டு பதற்றம் அடைந்தார். 


விமானத்தை தாழ்வாக பறக்க செய்து கதவு எங்கே விழுந்திருக்கிறது என்று தேடினார். 


இரண்டு மூன்று முறை வட்டமடித்து தேடி பார்த்தும், கதவு கிடைக்காததால் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி விட்டு விஷயத்தை, அங்குள்ள அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார். 


இந்நிலையில், அப்பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் தன்னுடைய ஹோட்டல் மீது விமானத்தின் கதவு விழுந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்தார். 


எனினும் இந்த சம்பவத்தின் போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நிலை சரியில்லாதபோது ஒதுக்க வேண்டிய உணவுகள்!

விடுமுறை நேரம், ஓய்வு நேரம் போன்ற நேரங்களில் நமக்கு பிடித்த உணவுகளை வீட்டில் செய்தோ அல்லது வெளியில் வாங்கியோ தருவார்கள்.நாமும் வஞ்சனை இல்லாமல் அனைத்தையும் ஒரு கட்டு கட்டுவோம். அதனால் பெரும்பாலும் இக்காலத்தில் அடிக்கடி வந்து போகும் சளியும், காய்ச்சலும் உங்களை பிடித்து கொள்ளும் காலம் இது.


இந்த சளியை போக்க பூண்டு, இஞ்சி, நீர் சேர்த்தல் என பல இயற்கை சிகிச்சைகள் இருக்கத் தான் செய்கிறது.


இருப்பினும் எந்த உணவு வகையை தவிர்த்தால் இப்படி நோய்வாய் படாமல் இருக்கலாம் என்பதை தெரிந்து கொண்டால் இவ்வகை உணவுகளை கண்டுபிடித்து அவைகளை தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் உணவுகளை உட்கொண்டு வந்தால் வெகு விரைவிலேயே குணம் அடையலாம்.


சாதாரண நேரத்தை விட நோய்வாய் பட்டிருக்கும் போது இதனை தவிர்க்க சொல்வதால் அந்நேரத்தில் அதனை சுவைக்க அதிக ஆவல் ஏற்படுவது மனித இயல்பு தான்.


ஆனால் நாவை கட்டுப்படுத்தி தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்த்தால் தான், சீக்கிரமே குணம் அடைய முடியும். சரி, இப்போது நோய்வாய்பட்டிருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் என்னவென்று பார்ப்போம்.


இனிப்புகள்

நோய்வாய் பட்டிருக்கும் காலத்தில் கண்டிப்பாக சாக்லெட் அல்லது பிஸ்கட்களை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் இனிப்புகளில் அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. இது செரிமான அமைப்பில் இறுக்கத்தை ஏற்படுத்தும். சில நேரம் டெசெர்ட் கூட நோய்வாய் படச் செய்யும்.

பதப்படுத்திய இறைச்சி

பதப்படுத்திய இறைச்சி என்றால் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட இறைச்சியாகும். இதனை உப்புக்கண்டம் என்று நாம் சொல்வோம்.

இப்படி உப்புக்கண்டம் செய்யப்பட்ட இறைச்சியில் உள்ள நைட்ரேட்ஸ் நைட்ரைட்ஸாக மாறிவிடும். இது புற்றுநோய் போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். மேலும் நோய்வாய் பட்டிருக்கும் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நேரத்தில் இந்த நைட்ரைட்ஸின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

ஆரஞ்சு ஜூஸ் 

ஆரோக்கியத்தை புதுப்பிக்க ஆரஞ்சு ஜூஸ் பெரிதும் உதவுகிறது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் நுண் ஊட்டப்பொருள் இருப்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் அதனை ஜூஸாக மாற்றும் போது, சோடாவை போல அதிலும் அதிக அளவில் சர்க்கரை வந்துவிடுகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. நோய்வாய் பட்டிருக்கும் போது இனிப்புகளை போல சர்க்கரையும் தவிர்க்க வேண்டும். மேலும் இந்நேரத்தில் ஆரஞ்சில் உள்ள அமிலமும் வயிற்றை பாதிக்கலாம்.

நட்ஸ்

நோய்வாய் பட்டிருக்கும் போது பல வகையான நட்ஸ்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வேர்க்கடலைப் பருப்புகள் அளவுக்கு அதிகமான சளியை உண்டாக்கிவிடும்.

ஏற்கனவே சளியால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் போது, இது கூடுதல் அவஸ்தையாக மாறிவிடலாம் அல்லவா? மேலும் நட்ஸ் மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.

மாட்டிறைச்சி

நட்ஸை போலவே மாட்டிறைச்சியும் உடலை பாதிக்கும். சளி இருக்கும் போது பர்கர் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்படியானால் சளியானது, மூக்கு மற்றும் நெஞ்சை விட்டு செல்ல மனமில்லாமல் இன்னும் தங்கிவிடும்.
மேலும் மாட்டிறைச்சியில் கெட்டியான கொழுப்பு இருப்பதால், அதனை கரைத்து செரிமானம் செய்வதற்கு, உடல் சிரமப்படும். உடல்நலம் சரியில்லாத போது, உடல் ஏற்கனவே கடினமாக உழைத்து கொண்டிருக்கும். இந்நேரத்தில் இது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.

மதுபானம்

மதுபானம் என்பது இரசாயன மூளைத்திறன் குறைப்பு மருந்து. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, உண்ணும் அனைத்து மருந்தையும் செயலிழக்க செய்துவிடும். மேலும் பல மதுபானம் அமிலத்தன்மை கொண்டவையாகும். இது வயிற்றையும் பாதிப்படையச் செய்யும்.

காப்ஃபைன்

செரிமானத்திற்காக காப்ஃபைனை உடைத்தெறியவும் உடல் கஷ்டப்படும். சோடா, காபி மற்றும் சாக்லெட் உட்கொள்ளுதலை குறைத்துக் கொண்டால், உடல் விரைவிலேயே குணமடையும். காப்ஃபைன் கலந்த பொருட்களில் சர்க்கரையும் கலந்துள்ளதால், கண்டிப்பாக அவைகளை தவிர்க்க வேண்டும்.

காரமான உணவுகள்

நோய்வாய் பட்டிருக்கும் போது, உங்களுக்கு காரசாரமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. ஆனால் அதையும் மீறி, அதனை உட்கொண்டால் சளி இன்னும் மோசமடையத் தான் செய்யும். அதிலும் சளி இருக்கும் போது, வாய்வு அல்லது வயிற்று பிரச்சனை இருந்தாலே ஒழிய அவைகளை எடுத்துக் கொள்ள கூடாது.

பச்சை உணவுகள்

உடல்நிலை முன்னேறுவதற்கு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது நல்ல யோசனையாகத் தான் தோன்றும். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அந்த காய்கறிகள் சமைக்கப்பட்டிருக்க வேண்டும். காய்கறிகளை பச்சையாக எடுத்துக் கொண்டால், செரிமான பிரச்சனை ஏற்படும். இதனால் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படும்.

பால் பொருட்கள்

பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் தான் அதிக அளவிலான கொழுப்புகள் உள்ளது. அதனால் அவை செரிமானத்திற்கு கஷ்டத்தை தருவதோடு நிற்காமல், நோய்வாய் பட்டிருக்கும் சிலருக்கு அலர்ஜியையும் ஏற்படுத்திவிடும்.


எல்.ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் வளைமேற்பரப்பினைக் கொண்ட G-Flex!

எல்.ஜி நிறுவனமானது வளைந்த மேற்பரப்பினை உடைய தனது முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த மாதமளவில் அறிமுகப்படுத்துகின்றது.


6 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 0.44 மில்லி மீற்றர்கள் தடிப்பையும், 7.2 கிராம் நிறையையும் கொண்டதாகக் காணப்படுகின்றன. 


இதற்கிடையில் சம்சுங் நிறுவனமும் தனது வளைந்த மேற்பரப்பினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்களை அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கணினியில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது என்று தெரியுமா?

கணினியில் ஆப்பரேட்டிங் சிஸ்டம்(Operating System) என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.


நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான எம்.எஸ். ஆபீஸ்(M.S.Office), பேஜ்மேக்கர்(Pagemaker), கோரல் டிரா(Corel Draw), ஆட்டோகேட்(Autocat) போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம்.


ஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்.


கம்ப்யூட்டரில் பல பணிகளை நிர்வாகம்(Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை

1. உள்ளீடு/வெளியீடு(Input/ Output).

2. நினைவக(Memory) மேலாண்மை.

3. பணி(Task) மேலாண்மை.

4. பைல்(File) மேலாண்மை.


கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே.
எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.


உங்கள் கணினியில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும்.
நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.


பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும்.   இதனை Multitask என அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. 



ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம்(CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.


நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள்கிறது.


பைலைச் சேமிக்கும் பொழுது அதன் நேரம், தேதி ஆகியவற்றைக் குறிக்கிறது. பைலைப் படிக்க/மட்டும்(Read only), மறைக்க(Hidden), சிஸ்டம் என்ற பண்புகளை(Attributes) பைல்களுக்கு நீங்கள் கொடுக்கும் போது அவற்றை மேற்கொள்வதும் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. 


படிக்க/மட்டும் என ஒதுக்கிய பைலில் மாற்றம் செய்ய விடாமல் தடுப்பது, அதே பெயரில் வேறொரு பைலைச் சேமிக்க விடாமல் தடுப்பது எல்லாம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேலை தான்.

நம்பினார் கெடுவதில்லை (நீதிக்கதை )!


கந்தனின் தந்தையிடம் நூறு ஆடுகள் இருந்தன.தினமும் காலையில் அவர் அவற்றை மேய்க்க ஓட்டிக்கொண்டு காட்டிற்கு செல்வார்.....  மாலை ஆறு மணிக்கு பிறகு அவற்றை திரும்ப வீட்டிற்கு ஓட்டி வந்துவிடுவார்.


 அப்படி செல்கையில் ஒரு நாள் மாலை மேய்ந்துவிட்டு வந்ததும் அவற்றை பட்டியலில் அடைக்கு முன் எண்ணிப் பார்த்தார்.  99 ஆடுகளே இருந்தன.ஒரு ஆடு குறைந்தது.


எல்லா ஆடுகளையும் அடைத்துவிட்டு காணாமல் போன அந்த ஒரு ஆட்டைத் தேடி மீண்டும் காட்டுப்பகுதிக்குள் சென்றார்
.கந்தனின் தாயோ ' இரவு நேரத்தில் காட்டிற்குள் செல்லவேண்டாம்...ஒரு ஆடு தானே காணும் .... பரவாயில்லை... மீதி 99 ஆடுகள் இருக்கிறதே என்றாள்.'


 ஆனாலும் கந்தனின் தந்தை அந்த ஒரு ஆட்டைத் தேடிச் சென்றார்.  காட்டிலும் மேட்டிலும் அந்த ஆட்டைத் தேடினார்.நீண்ட நேரத்திற்கு பின் ஒரு பாறையின் உச்சியில் கீழே இறங்க வழி தெரியாது அந்த ஆடு திணறிக்கொண்டிருப்பதை பார்த்தார்.


மெல்ல அந்த ஆட்டை பிடித்துக்கொண்டு திரும்பினார. அந்த ஆடு நன்றியுடன் அவரைப் பார்த்தது.அதன் கண்களில் கண்ணீர் நன்றிப் பெருக்கில். பின் அவர் கந்தனின் தாயிடம்..".  

நீ ஒரு ஆடு தானே .... தேடப் போகவேண்டாம் என்றாய்...  நான் அப்படிச் செல்லாதிருந்தால் இந்த ஒரு ஆட்டை இழந்திருப்போம்..". என்றார்.
 


கந்தனும் ...'.. ஆமாம் அம்மா' என்றான்.


மேலும் அவனது தந்தைக் கூறினார்,  'எண்ணிக்கை முக்கியமில்லை.. காணாமல் போன அந்த ஆடும் என்னை நம்பியே மேய வந்தது.என்னை நம்பி வந்தது வழிதவறி தடுமாறி..திரும்பமுடியவில்லை.ஆயினும் நம்பிய அதை காக்க வேண்டியது என் கடமை.இது ஆட்டிற்கு மட்டுமல்ல.. அனைவருக்குமே பொருந்தும்.  


நம்மை நம்பியவரை நாம் என்றும் கைவிடக்கூடாது.'